நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 2


7 . நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன் 

 நெடுங்குருதி.. யதார்த்தத்தின் மீதான ஒரு பிரம்மாண்டமான பயணம்.  இக்கதை மாந்தர்களோடு  சேர்ந்து நாமும் ஆறு பருவ காலங்களை கடக்கிறோம் வேம்பலை என்னும் ஒரு கனவுலகத்தில் நம்மையும் அறியாமல் அமிழ்ந்து போய் எது நிஜம் எது பொய் என பிரித்தறிய முடியா ஒரு தாக்கத்தை இப்புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தும். படித்து முடித்து பல நாட்கள் ஆகியும் அந்த சூழ்நிலையை விட்டு வெளி வர முடியாமல் தவிப்பதே இந்த புத்தகத்தின் வெற்றி.

6 . சொர்க்கம் என் பையில்  - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
      THE WORLD IN MY POCKET - 1959
வேகம், வேகம், கொலை வெறி பிடித்த வேகம்,  50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையா இது? படிக்க ஆரம்பித்தவுடன் பற்றிகொள்ளும் பரபரப்பு படித்து முடிக்கும் வரையிலும் விடாமல்  தொடரும்.... மில்லியன் கணக்கில் பணம் நிரம்பிய TRUCK. அதை கொள்ளையடிக்க முயலும் ஐவர். கற்பனைகெட்டா சாகசங்களும், திருப்பங்களும் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி இந்த புத்தகம். 


5.வந்தார்கள் வென்றார்கள்..  - மதன். 

பள்ளி நாட்களில் வரலாறு ஒரு போர் அடிக்க கூடிய சப்ஜெக்ட். இந்த புத்தகம் அந்த நாட்களில் கிடைத்திருந்தால்... நிலைமை தலை கீழ் ஆகியிருக்கும். மொகலாய வரலாற்றை இவ்வளவு சுவாரசியமாகவும், எளிமையாகவும், எதோ பக்கத்தில் இருந்து பார்த்ததை போன்ற அனுபவத்தை தரும் அட்டகாசமான புத்தகம் இது. முதல் அத்தியாயத்தில் தைமூர் பற்றி படிக்கும் போதே விளங்கிவிடும்,  இது  ஒரு வேறு விதமான STORY TELLING என்று.  முழு புத்தகத்தையும் உற்சாகத்துடன் படிக்க வைக்கும் ஒரு MAGIC இவரது எழுத்துக்களில் ஒளிந்துள்ளது.  

                                                                      -தொடரும். 

Comments

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....