Posts

Showing posts from October, 2011

நீதானே என் பொன் வசந்தம்.....(சவால் சிறுகதை - 2011)

Image
ஞாயிறு உற்சாகங்கள் வடிந்து பணிச்சுமை தொடங்கிய திங்கள் காலை. விடிய மனமின்றி விடிந்த சூரியன்.  நகரம்,  பிடித்தும் பிடிக்காமல் அன்றைய வாரத்தின் முதல் தினத்தை ஒரு வித ஆயாசத்தில் தொடங்க... நான் முழு உற்சாகமாய் என் அலுவலக  கணிப்பொறியே உயிர்ப்பித்தேன். "WELCOME MAHESH" என்று என் பெயர் சொன்னது.   மனசு, நேற்றைய இரவின் சந்தோஷங்களை நினைத்து நினைத்து குதுகலித்துக்கொண்டிருக்க, பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே என் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளை முகப்பில் கொண்டு வந்து சேர்த்தேன். இடைப்பணியாக face book  அப் டேட்டுகளை மேய்ந்து கொண்டு  என் பர்சனல்  e-mail  id யே ஓப்பினேன். ஒரே ஒரு மெயில் பல்லை இளித்தது. அறிமுகமில்லாத முகவரி....  அலட்சியத்தோடு திறந்தவனுக்கு.... தந்தி போல மூன்றே வார்த்தைகள்... YOUR WIFE KIDNAPPED! ******** ஆரம்பத்தில், யாரோ அரை கிறுக்கன் வேலையின்றி விளையாடுகிறான்  என்றுதான் நினைத்தேன். ஒதுக்கிவிட்டு வேலையில் ஈடுபட நினைத்தாலும்,   உடனே அனுவுக்கு போன் செய்து பேச வேண்டும் போலிருந்தது.... மொபைலில் எண்களை ஒத்த, இளையராஜா " நீதானே என் பொன் வசந்தம்" என உருகினார்...போ

ஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)

Image
G.D.R. ENGINEERING COLLEGE - FRIDAY - 1:30 PM தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த தனியார் கல்லூரி மதிய வெயிலில் அனாமத்தாய் காய்ந்து கொண்டிருந்தது. நீண்ட அசோக மர நிழல்களுக்குள்  பதுங்கியிருந்த  மாணவிகள்   என்ஜீனியர் ஆகும் கனவில் கதைத்துக்கொண்டிருக்க, அதை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டிருந்த மாணவர் கூட்டம் அந்த மாணவிகளுக்கு எப்படி கணவன் ஆகலாம் என்கின்ற கனவில் அதி தீவிர யோசனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தது. உதய், மதிய வகுப்பை கட் அடித்து விட்டு  படத்திற்கு  போகலாமா,  அல்லது சரக்கடிக்க  போகலாமா என்கின்ற  யோசனையில்  குழம்பி,  தெளிந்து  பின்  இரண்டையுமே  செய்யலாம்  என்கின்ற  முடிவுக்கு  வந்தவனாய் ஹோண்டாவை உதைக்க எத்தனிக்க..  மாப்ள..! என அலறிக்கொண்டே ஓடிவந்தான் சுகுமார்.  "ஏன்டா...?" ஏன் தெரு நாய்  துரத்தர மாதிரி ஓடி வர...  ?" "டேய் மாமா, ஒரு கண்டக்டர்  பன்னாடை  என்னை                                                    அசிங்கப்படுத்தீட்டாண்டா! மவனே அவனை சும்மா விடக்கூடதுடா." "மச்சான்... பொறு... என்ன நடந்து

ஏழாம் அறிவு - விமர்சனம்

Image
250 பக்க நாவலில் சொல்ல வேண்டிய விஷயத்தை இரண்டரை மணி நேரத்தில் அவசர அவசரமாக சொல்லியிருப்பதுதான் ஏழாம் அறிவு. "கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி". நான்காம் வகுப்பில் படித்தது இன்னமும் ஞாபகசெல்களில் மிச்சமிருக்கிறது.  தமிழுக்கென்று தமிழர்களுக்கென்று உள்ள பல சிறப்பியல்புகளை அசாதாரணமாக தொலைத்து விட்டு அமெரிக்கன்  பீட்சா சாப்பிட்டு இங்கிலிஷில் கதைக்கும் வாழ்க்கைமுறைக்கு நாம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. திருக்குறள், தஞ்சை பெரிய கோவில் என சிற்சில  அடையாளங்கள்தான் இன்று நம்மிடம்.நாம் பாதுகாக்க மறந்து,    தொலைத்த பல அரிய மருத்துவங்களை, கலைகளை, விஞ்ஞானத்தை, வீரத்தை நம்மிடம் நினைவூட்டிய  விதத்திற்காக A.R. முருகதாசிற்கு ஒரு பெரிய சபாஷ். கொஞ்சம் டாகுமெண்டரி வாசம் வீசினாலும், முதல் இருபது நிமிடங்கள் இந்த படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் உலக சினிமாவின் உச்சம். ஒளிப்பதிவு, கலை, இசை என எல்லா விஷயங்களும் கண்களை இரண்டு சென்டிமீட்டர் விரிய வைக்கிறது. அதன் பின்னான விஷயங்கள் திப்புடு திப்புடு என இலக்கில்லாமல் ஓடுவதுதான் கொஞ்சம் நெர

ஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)

Image
நான் தேவ்.... இந்த கதையின் நாயகன். நாயகன் என்றவுடன் ரொம்ப நல்லவன் ஏழை பங்காளன் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நான் கொஞ்சம் வேறு மாதிரி. எல்லா சராசரி மனிதனுக்கும் எதாவது ஒன்றில் தனிப்பட்ட ப்ரியம் இருக்கும். இசையின் பால்..  புத்தகங்களின் மீது.. கிரிக்கெட்,அளவில்லாத பணம், ஸ்டாம்ப் கலக்ஷன், ஓவியம் இப்படி எதாவது ஒன்றில். எனக்கு பெண்கள் மேல்.... சிரிக்காதீர்கள்!  பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் என் விருப்பங்கள் கொஞ்சம் ஆழமானவை. ஆரம்ப காலங்களில் உங்களை போலவே எனக்கும் புரியாத புதிர்தான் பெண்கள்! இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மிச்சமிருக்கிறது... கடலின் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் போல... நிச்சயம் சில விசேஷங்கள் வாய்த்திருக்கிறது அவர்களிடத்தில்! அதுதான் என்னை வெறித்தனமாய் இன்னமும் அவர்களுக்குள் தேட வைத்துக்கொண்டிருக்கிறது.  சரியான எண்ணிக்கை இல்லையென்றாலும்  பத்து அல்லது பன்னிரண்டு இருக்கலாம் இதுவரை. என் கேள்விகளுக்கு விடை சொன்ன எந்த பெண்ணும் இப்போது உயிரோடு இல்லை. என்னை பொறுத்த வரை பெண்கள் என் ஆராய்ச்சி கூடத்து எலிகள்.  இல்லை ... இல்லை... மு

வெடி - விமர்சனம்

Image
சொந்த காசில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதற்க்கும் வெடி படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.   காதல் ஒரு மனிதனை எவ்வளவு  பைத்தியம் ஆக்கிவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரபுதேவா. மனிதர், நயன்தாராவிடம் மனதோடு சேர்த்து மூளையையும் பறிகொடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை. வில்லு, எங்கேயும் காதல் போன்ற உலக வரலாற்று காவியங்களின்  வரிசையில் அவரின் அடுத்த  படைப்பு  வெடி. தெலுங்கு   ரசிக கண்மணிகளை  பொறுத்த  வரை  எல்லாமே அவர்களுக்கு  மிதமிஞ்சியதாகத்தான்  இருக்க வேண்டும் .  பிரியாணியில்  காரம்  அதிகமாக  இருப்பதில் தொடங்கி...ஹீரோயிசம், ஆக்ஷன், கவர்ச்சி, காமெடி என எல்லாவற்றிலும் உச்சபட்ச எல்லைகளை தொட்டு பார்க்கும்  ரசனைக்காரர்கள் அவர்கள். அதை அப்படியே தமிழ் படுத்தும் போது ரொம்பவே படுத்துகிறது. ஒரு நேர்மையான போலீஸ், அநியாயம் செய்யும் வில்லன், அவனின் ரௌடி மகன்,அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், இடையில்  பாடல்களை நகர்த்த  கவர்ச்சியான ஹீரோயின்  என கீறல்  விழுந்த  அதே  ரெகார்ட். அதில் அண்ணன் தங்கச்சி பாசம் என்கின்ற ஒரு உப ஆலாபனை வேறு கர்ண க