Posts

Showing posts from 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

Image
காதல் எங்கும் நிறைந்திருப்பது. தன்னுள் நுழைந்த காதலை, சந்தேகத்தின் பேரில் தொலைக்க நினைக்கும் ஒருவனும் , தான் தொலைத்த காதலை தன் நட்பிடமும், தன்னை சுற்றியிருப்பவரிடமும் தேடும் ஒருவனும் முட்டிக்கொள்ள நேரிடும் போது ஏற்படும் குழப்பங்களும், கவிதைகளுமே மன்மதன் அம்பு.  அம்பு சாக்ஷி பல பேரின் தூக்கம் கெடுக்கும் பிரபல நடிகை. கிசுகிசுக்களால் நிரம்பி வழியும் அவள் திரையுலகை வாழ்கையே வெறுக்கும் அவளின் மல்டி மில்லியனர் பணக்காரன் மதனகோபால். காதல் என்னும் தேவதையையும் மீறி, சந்தேகம் என்னும் குட்டிச்சாத்தான் மனசுக்குள் முளைக்க, அவளை வேவு பார்க்க ஒரு டிடெக்டிவை நியமிக்கிறான்.  தன் நண்பனின் கேன்சர் ட்ரீட்மென்ட் செலவுக்காக இந்த உளவு பார்க்கும் வேலையே மேற்கொள்ளும் மேஜர் R மன்னார், மதனகோபால், அம்பு ஆகிய மூவரின் உளவியல் மாற்றங்களை படு சுவாரசியமாக காமெடி கடலில் நீந்த விட்டிருக்கிறார்கள். உள்ளுரிலேயே எடுத்துவிடக்கூடிய கதை.... ஆனால்  தயாரிப்பாளர் பசையுள்ள பார்ட்டி என்பதால் உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்கள், ஸ்டார் குருஸ் என புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.   கமலஹாசன் என்னும் மஹா கலைஞனுக்கு இந்த வேடமெல்

கவிதாயினி....

Image
  ஒரு கவிதை வாசிக்க உன் உடலில் வரிகள் தேடுகிறேன்.. எத்தனை வாசித்தும்  பூர்த்தியாகவில்லை இந்த கவிதை. மிச்ச வரிகளை எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய். ? ...

ரத்த சரித்திரம் -2 - விமர்சனம்

Image
படம் முழுக்க யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டோ  அல்லது சுட்டுக்கொண்டோ இருக்கிறார்கள். திரை முழுதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இரண்டு மணி நேரம் அமர்ந்து படத்தை பார்க்க முடிவதற்கு காரணம் வர்மாவின் கதை சொல்லும் ஸ்டைலும் அதற்க்கு உறுதுணையாய் இருக்கும் வசனங்களும்.  இரண்டரை மணி நேர முதல் பாகத்தை,  முதல் 20 நிமிடத்தில் சுருக்கியதால் படம் ஆரம்பத்தில் தோட்டா வேகத்தில் பறக்கிறது. சூர்யாவின் வருகையும் அதற்க்கு பிறகான காட்சிகளும் இன்னமும் சூடு கிளப்ப இடைவேளை வரை ஒரே ரணகளம்தான். பிரதாப் ரவி என்னும் தனி மனித சாம்ராஜ்யத்தை வேரறுக்க நினைக்கும் சூர்யாவின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் அதற்க்கான விடையும் தான் இரண்டாவது பாகம். உண்மை சம்பவங்களை சுவாரசியமாக சொல்வதென்பது ஒரு சவாலான விஷயம். ஆனால் தனக்கு தோதான கிரௌண்ட் என்பதால் வர்மா இதில் பேயாட்டம் போட்டிருக்கிறார். முக்கியமாக சூர்யா  கோர்ட்டில் தன்னை கொல்ல முயற்சிக்கும் எதிரிகளை கண்டுணர்வது முதல் அவர்களை வீழ்த்துவது வரை மிக டீடெய்லாக காட்சிபடுத்தியிருப்பதில் வர்மாவின் திறமை மின்னுகிறது.   மற்ற படங்களில் எல்லாம் சட சடவென ஆக்க்ஷன் காட்ச

நந்தலாலா.. - விமர்சனம்

Image
 சொல்லப்படாத கதை என்று உலகில் எதுவுமே இல்லை. மிஷ்கின் இதில் சொல்லியிருக்கும் கதை ஏற்கனவே ஏதோ ஒரு மொழியில் சொல்லப்பட்டதாய் இருந்தாலும்.. நம் மொழிக்கும், நம் உணர்வுகளுக்கும் இம்மாதிரி மயிலறகு தடவல்கள்  ஒரு வரம்.   விரும்பி வரவேற்ப்போம் அதை.... நந்தலாலா.... தத்தமது அம்மாக்களை தேடி புறப்படும் இரண்டு குழந்தைகளின் கதை. ஒன்று வயதால் குழந்தை.. இன்னொன்று மனதால். ஒருவருக்கொருவர் எந்த வித ஈர்ப்பும் இன்றி, ஒரு அன்னியதன்மையோடு  பயணப்பட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாய்  அன்பின் வாசல்களுக்குள் நுழைந்து  அதில் கட்டுண்டு உறவாடும் வரை நீளும் அழகிய பயணம். இடையில் அவர்கள்  சந்திக்கும் மனிதர்களுக்குள்ளும் அந்த அன்பை விதைத்துக்கொண்டே செல்ல.... மூகமுடி அணியாத முழு மனிதர்களையும் அவர்களின் ஆழ்மன வெளிப்பாடுகளையும் ஒரு வித பிரம்மிப்போடு காண்கிறோம்.  மேய்ப்பனை பின் தொடர்ந்து செல்லும் ஆடுகள் போல....  கதையின் பின்னாலேயே நாமும் பயணப்பட தொடங்குவதில் ஆரம்பிக்கும்  வெற்றி.. இறுதியில் கண்கலங்கி.. கைதட்டி எழும் வரை தொடர்கிறது.   ஓவ்வொரு காட்சியும் ஒரு கவிதையாய்... ஒரு ஓவியமாய்...நம்மை கடந்து செல்ல... அதனுள் குறியீடாய்  ஒளிந்

ஸ்பரிசம்....

Image
  தொட்டதும் சிலிர்க்கிறாய்.. நான் சிதறி போகிறேன்.. சிதறிய பாகமெல்லாம் ஓட்ட வைத்து மீண்டும் உன்னை நெருங்கும் போது சிரிக்கிறாய் நீ.. பறக்கிறேன் நான். -

வ - குவார்ட்டர் கட்டிங் - விமர்சனம்

Image
குவார்ட்டர்....   குவார்ட்டர்....  குவார்ட்டர்.... உச்சரிக்கும் போதே உள் நாக்கு இனித்து ஒரு மாதிரி கிளு கிளுப்பாக இருக்கிறதல்லவா... தமிழனுக்கு ரொம்பவே பிடித்த  ஆங்கில வார்த்தை.   இப்படி ஒரு அழகான.. அம்சமான தலைப்பை வைத்துக்கொண்டு புகுந்து விளையாடி இருக்க வேண்டாமா... ? ம்ம்ஹூம்... ஆட்டோவில் கெட்ட ஆட்டம் போட்டவர்கள் குவார்ட்டரில் மட்டையாகி விட்டார்கள். முதலில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷாவிற்கு ஒரு புல் பக்கார்டி பார்சல். மனுஷன் ரசித்து ருசித்து  செய்திருக்கிறார். அந்த மஞ்சள் கலர் டோனும்,  கேமரா கோணங்களும் ரொம்பவே புதுமை + இனிமை. விடிந்தால் துபாய் செல்லும் விமானம்.. அங்கு போனாலோ சரக்கடிக்க முடியாது.. ஆசை தீர இங்கு சரக்கடிக்கலாம் என்றால் தேர்தல் நேரம் காரணமாக டாஸ்மாக் அத்தனையும் விடுமுறை.  மனதை சிறிதும் தளர விடாமல் தேடுதல் வேட்டை தொடங்கும் விக்கிரமாதித்தனாக சிவா.. அவர் முதுகில் தொங்கும் வெள்ளை வேதாளமாக  கொழுக் மொளுக் SPB சரண்.  அதிரி புதிரியான லைன் தான். கடைசியில் சிவா குவார்ட்டரை அடித்தாரா இல்லையா என்பதை அவர்கள் சொல்லி முடிப்பதற்க்குள், கடுப்பில்  நாம் ஒரு குவார்ட்டரை அ

மைனா - விமர்சனம்

Image
சினிமா ஒரு ஊடகம். நம் மனதை ஒரு விதமான கனவுலகத்திற்குள் இரண்டரை மணி நேரம் கடத்தி சென்று சிலிர்க்க, சிரிக்க, அழ வைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம். அதில், பருத்தி வீரன், காதல் போன்ற  ஒரு சில படங்கள் நம் வாழ்வியலோடு பின்னி பிணைந்து ஒரு உயிர்ப்போடு இருக்கும்.  மைனாவும்  அந்த வரிசையில் சேர்த்து வைத்து ரசிக்க கூடிய ஒரு அழகான படைப்பு.  வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுப்பதில் பிரபு சாலமன் ஒரு கைதேர்ந்த  வித்தைக்காரர்.   ஆனால்,  சர்க்கஸ் கயிற்றில் பாதி தூரம் வெற்றிகரமாக நடந்து வந்து  கடைசி தாண்டலில் தலை குப்புற விழுவதை போன்று   அவரது முந்தைய படங்களின் ஆரம்பம்  மிக சிறப்பாக தொடங்கி இரண்டாம் பாதியில் அல்லது  கிளைமாக்சில் சொதப்பியிருப்பார்.  திரைக்கதை என்னும் ஒரு சீசா குச்சியின்  சப்போர்ட் இல்லாமல் கயிற்றின் மேல் நடப்பதால் கிடைக்கும் ரிசல்ட் அது.  மைனாவில் திரைக்கதையின் ஒத்துழைப்பு  நூறு சதவீதம் இருப்பதால்  மனிதரை பதினோரு வருட முயற்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக கரையேற்றி இருக்கிறது.        நீண்டுயர்ந்த மலைகளும், பச்சை பசேல் காடுகளும் எப்பொழுதுமே நம் மனதை கொள்ளை கொள்பவை.  ஒரு வித ரகசியத்தை, ஒரு தேடலை

வணக்கமுங்க.....

Image
வணக்கமுங்க.. இது என்னோட 100 வது பதிவு. நமக்கு புஸ்தகம் படிக்கிறதுன்னா ரொம்ப உசுருங்க. இந்த பொட்டி வந்ததுக்கப்புறம் தமிழ்ல படிக்க நெட்ல தொழாவும்  போதுதான் இந்த வலைபதிவுகள் (BLOGS ) கண்ணுல பட்டுச்சு. (ENGLISH ல படிக்க நமக்கு புடிக்காதுங்க.. ஏன்னா.. ENGLISH ல படிக்க நமக்கு தெரியாதுங்க..)  நமக்கு புடிச்ச விஷயங்களை நிறைய பேர் எழுதறதை பார்த்ததும் பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சு..  ரொம்ப வருஷமா படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். ஒரு நாள் மல்லாக்க படுத்துட்டு வெட்டியா  யோசிச்சுட்டு இருக்கும்போது   தோனுச்சு.. ஏன் நாமளும் எழுத கூடாது ன்னு..  அது வரைக்கும் நான் டைரி மட்டும்தான் எழுதியிருக்கிறேன். அந்த தகுதி மட்டும் போதுமான்னு எனக்கு பயங்கர சந்தேகம். சரி ஒரு கை பார்க்கலாமுன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.  அது பாருங்க, திடு திப்புன்னு நூறு பதிவு ஆய்டிச்சு, கோயம்பத்தூர்ல இருக்கிற வரைக்கும் பொட்டி தட்ட நிறைய நேரம் கெடச்சதுங்க... இப்ப சென்னை வந்த பிறகு சுத்தமா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க.. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குங்களா...? அது மாதிரியே எதாவது எழுதியே ஆகணும்னு  கை எல்லாம் ஞம ஞம ங்கு

எந்திரன் - விமர்சனம்

Image
ஒரே நேரத்தில் 100 படங்களை கூட தயாரிக்கும் வல்லமை பெற்ற தயாரிப்பாளர், கொசுவை கூட பிரம்மாண்டமாக காட்டும் FANTASY  இயக்குனர், உலக அழகி, ஆஸ்கர் வாங்கிய இசையமைப்பாளர், லேசாக தலை கோதினால் கூட விசில் அடித்து உற்சாக பட வைக்கும் ஆசியாவின் NO.1 சூப்பர் ஸ்டார், இந்தியாவின் MOST WANTED டெக்னிஷியன்ஸ்  இவர்கள் எல்லோரும்  இணைந்து கொடுக்கும் படம் மட்டும்  என்ன சாதாரணமாகவா இருக்கும். "குடுத்த காசுக்கு மேல கூவராண்டா இவன் " என்பார்களே, எந்திரனும் அந்த ஜாதிதான்.   ஷங்கரின் கனவுப்  படைப்பு.  தமிழில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் என்பது கத்தி மேல் நடப்பது போல. தமிழ் ரசிகனின் ரசனை விநோதமானது,  வசனங்களே இல்லாமல் காட்சிகளில் கதை சொல்லும்  படங்களையும் ரசிப்பான், பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி காது கிழித்தாலும் விசில் அடிப்பான்.  ஹாலிவுட் போல ஒற்றை சான்ட்விட்சில்   திருப்தி பட்டு கொள்ளும் இனம் அல்ல அவன். தலை வாழை இலை\ போட்டு, விதவிதமாக, ரக ரகமாக பரிமாறினால்தான் பிடிக்கும்.  விஞ்ஞானத்தையும், மசாலாவையும் சரியான    கலவையில் கலக்கி எந்திரனை     விருந்து வைத்த  விதத்தில் மிக சிறந்த குக்காக ஜொலிக்கிறார் ஷங்கர்.

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 5

Image
கொடுமையிலேயே பெரிய கொடுமை ஏது தெரியுமா.. ஒரு அழகான பெண்ணுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை லூசுத்தனமாய்  இழப்பதுதான். அந்த தேவதை என்னை நெருங்கி " காடி மே.. பாடி கா..  கித்னே பஜே " என ஏதோ இந்தியில் விளிக்க.. நான் திரு திருவென இரண்டு நொடி விழித்து ஹி... ஹி.. என  இளித்தேன். என்னை ஏற இறங்க பார்த்தவள் "சாரி" என சொல்லி விட்டு கூட்டத்தில் கலந்தாள்.  இந்தி கற்காத என் மீதும், திராவிட கழகத்தின் மீது ஆத்திரம் எகிற.. நாலைந்து கெட்ட வார்த்தைகள் புதிதாய் பிறந்து இறந்தது. கூட்டம் காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் என் தம்பியின் வீட்டிற்க்கு மின்சார ரயில் தவிர்த்து ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்தோம். ஆட்டோவை நெருங்கி நாங்கள் செல்லுமிடத்திற்கு எவ்வளவு என்று கேட்டதற்கு, என்னிடமும், பரமு தன் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் பணத்தையும் தவிர , மூன்றாவதாக இன்னொருவரிடம்  திருடினால் கிடைக்கும் தொகையே அவன்  கூறினான். என் தம்பி அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மேல் வராது என்றதால், அந்த ஆட்டோவை தவிர்த்து இன்னொரு ஆட்டோவிடம் சென்றோம். அவனிடம் சென்று பேசுவதற்கு முன்பாகவே.. வம்சம் படத்த

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4

Image
 தாஜ்மஹால் கொடுத்த பிரமிப்பில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த பிரமிப்பு ஆக்ரா கோட்டை. தாஜ் போலவே பிரம்மாண்டமான அதேசமயம் தாஜ்ஜை விட சிலாகிப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்ட இடம். முகலாய அரசர்களின் ஆஸ்தான அரண்மனையாக  அந்த காலத்தில் விளங்கிய ஒன்று. நீண்டு உயர்ந்த மதில்கள்.. அகழிகள்.. பாதுகாப்பு வளையங்கள் என எதிரிகள் எளிதில் உள் நுழையாதபடி அந்தகாலத்திலேயே படு பயங்கர பிளான் போட்டு கட்டியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும் உடனே நம்மை வசீகரிப்பது அரண்மனையின் திறந்தவெளி தர்பார். மக்கள் அமர்வதற்கு எதுவாக படிக்கட்டுகள் போல அமர்வு மேடைகள் ஆச்சர்ய மூட்டுகின்றன.  திறந்த வெளி தர்பார்  உட்புற கோட்டை  ஒரு டிபிக்கல் ராஜாவின் வீடு (அரண்மனை ) எப்படி இருக்கும் என்பதை ஆக்ரா கோட்டை மூலம் உணர்ந்து கொள்ளலாம். ராணிகளின் அறைகள்.. குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தபுரம், ராஜாவும் ராணியும் ஓடி பிடித்து விளையாட ஏதுவான நீண்ட பால்கனிகள்.. ஆலோசனை மண்டபம், வீரர்கள் தங்குவதற்கான சிறு சிறு அறைகள் என உள்ளுக்குள் வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம்.  "அக்பர்" பரமு  பரமுவும் நானும் ஆக்ரா கோட்டையையும், கோட்டையே பார்க

சென்னையும்.... தனிமையும்...

Image
  திங்கள் கிழமை அதிகாலை சென்னையில் வந்து இறங்கியபோது ஏற்பட்ட பிரமிப்பு..... எத்தனை எத்தனை மக்கள்... தினம் தினம் புதிது புதிதாய் வாய்ப்புகளை தேடி  வந்திறங்கும் லட்சகணக்கான பேரை  தாங்கிக்கொண்டு... இனிமேலும் வருபவரை வரவேற்க தயாராய் இருக்கும் சென்னை... வாழ்க்கையின்... வாழ்கையே வாழ்பவரின் ஒரு முக்கிய அடையாளம். அன்றே வேலையில் சேர்ந்தாயிற்று.... அறை பிடித்தாயிற்று.. எல்லாம் முடிந்தபின் ஒய்ந்து படுக்கையில் சாயும் போது.. தூக்கம் வரவில்லை.. அத்தனை நேரம் ஒளிந்து கிடந்த வீட்டு ஞாபகம் ஒரு மோசமான புயல் போல என் மொத்த இரவையும் அள்ளி சுருட்டிக்கொண்டு  போக.. தனிமையில்.. ஒரு வெறுமையில் அந்த நொடியில் துளிர்த்த கண்ணீர் எதை கொண்டும் ஈடு செய்ய இயலாதது. கோவையில்.. அண்ணா, அண்ணி, தம்பிகள், தங்கைகள் என ஏகப்பட்ட சொந்தங்களுக்கு மத்தியில் என் தினங்கள் பாட்டுக்களும் கேலி கூச்சல்களுமாய்.. சந்தோஷ தருணங்களாய் கடக்கும்.. ஆனால் இங்கு.... மேலே சுற்றும் மின் விசிறியே தவிர இப்போதைக்கு என்னுடன் பேச யாரும் இல்லை. அங்கு.. வீட்டில் எல்லோரும் தூங்கியபின் என் தம்பியும்.. தங்கையும்.. நானும் திருட்டு பூனைகள் போல சமையலறை நுழைந்து..

நட்பின் நண்பர்களுக்கு......

நட்பின் நண்பர்களுக்கு, இது வரை கோயம்பத்தூர் குழந்தையாய் இருக்கும் நான் இனிமேல் சென்னை குழந்தையாய் மாற போகிறேன். நான் டெல்லி சென்று பங்கேற்ற நேர்முக தேர்வில்,  தேர்வாகி சென்னையில் THE HANDLOOM & HANDICARFTS EXPORT CORPORATION OF INDIA வில் 13.09.10 முதல் பணி புரிய இருக்கிறேன். நான் டெல்லி செல்லும் போது நீங்கள் எனக்களித்த வாழ்த்துக்களும் நான் நேர்முக தேர்வில் வெற்றிபெற ஒரு காரணம். உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் பல. ஒரு சிறிய இடைவெளியில் மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன். சென்னையில் ஜாக்கி அண்ணா, அதிஷா சார், கேபிள் சார், லக்கி,  ஜெட்லி, ஜில்லு போன்ற பதிவர்களை சந்திக்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.  டெல்லி ராஜ குமாரிகள் தொடர்.. இனி சென்னையில் இருந்து தொடரும்.. விரைவில்..

பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்

Image
நாலு பைட், அஞ்சு பாட்டு, கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், கொஞ்சம் காதல், கொஞ்சம் சிரிப்பு  என மசாலா போண்டா போடும் இயக்குனர்கள் மத்தியில் காமெடி என்கின்ற ஒற்றை வாழைக்காயில் பஜ்ஜி போட்டு, கூட்டத்தை கூட்டி கல்லா கட்டும் வித்தையில் இயக்குனர் ராஜேஷ் ஈசியாக ஜெயிக்கிறார்.  வெட்டி ஆபீஸ்ர் ஆர்யாவுக்கு , நயன் மீது எக்கச்சக்கச்சக்கமாய் காதல் உற்பத்தியாக, நயனின் அக்காவே தனக்கு அண்ணியாக வாய்க்கும் போது.. காதல் எளிதில் கை கூடும் என நினைக்கிறார். அண்ணி, என் தங்கையே கல்யாணம் செய்துக்க உனக்கு என்ன தகுதி இருக்கு என கேட்டு வைக்க, வெகுண்டெழுந்த வேங்கையாய், கை நிறைய சம்பாதித்து  காட்டுகிறேன் என வீட்டை விட்டு வெளியேறுகிறார். தன் சலூன் நண்பன் சந்தானத்தின் துணையோடு அவர் பணம் சம்பாதிக்க போராடும் மிச்ச சொச்சமே கதை.  கதைக்காக எந்த மெனக்கேடல்களும் இல்லை. டெக்னிகல் விஷயங்களிலும் ரொம்ப ஆழம் தோண்டவில்லை. டைமிங் காமெடி என்கின்ற ஒற்றை துருப்புசீட்டில் ஸ்கூட்  அடித்திருக்கிறார் ராஜேஷ்.  படம் ஆரம்பித்ததில் இருந்து, கிளைமாக்ஸ் வரைக்கும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து அனுப்புவதே நோக்கம் என்றிருப்பதால்.... எந்த வித ரத்தம் தெற

வ- குவார்ட்டர் கட்டிங் - இசை விமர்சனம்

Image
வித்தியாசமான மேக்கிங்கும், படம் நெடுக வரும் காமெடியும் ஓரம்போவை மற்ற திரை படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. அதன் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் அடுத்த முயற்சிதான் வ - குவார்ட்டர்  கட்டிங். ட்ரைலர் மற்றும் பாடல்கள் இதுவும்  வேறு மாதிரியான படம் என்பதை உணர்த்துகிறது. உன்னை கண் தேடுதே - பிரகாஷ் குமாரும், கான உலகநாதனும் இணைந்து பாடியிருக்கும் டீசென்டான ரீமிக்ஸ்  பாடல். வரிகளில் 5000 பீரின் நுரையே போல, சரக்கின் அருமை பெருமைகள் பொங்குவது இன்னமும் பிளஸ். தேடியே தேடியே   -  ஆண்ட்ரியாவின், ஒயினில் நனைத்த குரல் கொஞ்சம் சைடு டிஷ் போல ரொமான்ஸ் கலந்து ஏகத்துக்கும்  கிக் ஏற்றுகிறது. ஆர்க்கெஸ்ட்ரேஷன் எளிமையாக இருந்தாலும் மெட்டின் வசீகரம் ரசிக்க வைக்கிறது. சவூதி பாஷா -  பாடலில் கவிஞர் அவதாரம் எடுத்திற்கும் சிவாவின் வரிகளில்  இருக்கும் உற்சாகமும், அரேபிய ஸ்டைல் இசையும்  ஒரு குவார்ட்ர் அடித்ததற்கு  ஒப்பான மன நிலையே தந்து களிப்பூட்டுகிறது. ஷார்ப்பு ஷார்ப்பு - ஆல்பத்தின் தீர்த்த திருவிழா. நண்பர்களுடன் ஆட்டம் போட்டு விளையாட வைக்கும் மெட்டும், வரிகளும் எத்தனை குடித்தாலும் பிடிக்கும்

பலே பாண்டியா - விமர்சனம்

Image
புகைப்பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்பட முயற்சி. நாட்டு மக்களுக்கு மெசேஜ் சொல்ல நிறைய பேர் இருப்பதால் ஜஸ்ட் லைக் தட் சிரிப்பு படம் தர முயன்றிருக்கிறார். எந்த வித லாஜிக் மேஜிக் இல்லாமல்... பாண்டியன் தன் சாவை கூட வெற்றிகரமாக முடிக்க முடியாத ஒரு  அதிர்ஷ்டமில்லா பேர்வழி. தன்னை கொலை செய்துவிடும்படி ஒரு தாதாவிடம் போய் நிற்க.. அவர் 25 லட்சம் ரூபாய் பணத்தை குடுத்து ஒரு மாதம் ஜாலியாக சுற்றி விட்டு வா பின் மனித வெடிகுண்டாக பயன்படுத்தி கொள்கிறேன் என்கிறார். பணம் அதன் பின் காதல்.. அப்புறம் அதிர்ஷ்டம் என பாண்டியன் ஜாதகம் மாற, ஒரு மாத முடிவில், தாதாவை தேடி போக.. அவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதோடு இடைவேளை.. என்ன கதை சூடு பிடிக்கறதா.. அப்படிதான் நானும் நினைத்து பாப்கார்ன் பொட்டலத்துடன் மிச்ச பாதியே பார்க்க ஆரம்பித்தேன்.. ஸ்ஸ்ஸ்ஸ்... நிஜமாகவே முடியல.. சுவாரசியமாக ஆரம்பிக்கும் பயணம் பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்து DRY ஆகி நின்று விடுவதை போல.. இடைவேளைக்கு பிறகு படம் நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது. காமெடி செய்வது என  முடிவெடுத்தபின்.. வில்லன் என்ன ஹீரோ என்ன.. எல்லோருமே ப

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

Image
சினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்..  பாசிட்டிவான விஷயங்களையும்  காட்டி  நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை. இவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின்  மீது  ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார். சினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர்  நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நேர்மை இருக்கிறதா என்பதுதான் இந

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 3

Image
பரமு ரொம்பவும் வெகுளி. ஆனால் கிடைக்கிற கேப்பில் டைமிங்காக போட்டு தாக்குவான். நான் இறங்கும் போது ஜல்லி காட்டு  காளை போல  நிற்காமல் போன ரயில்.. அவன் இறங்கும்போது  மட்டும்  பசுமாடு போல சாந்தமாக ஒரு நூறு அடி தள்ளி போய் நின்றது.  வாய் நிறைய பல்லுடன், யுத்தத்திற்கு சென்று வெற்றியுடன் திரும்பியவன் போல கம்பீரமாய் ரயிலில்  இருந்து இறங்கி வந்தவன்,   "என்ன மனோ, பயந்துடீங்களா.. அனுமார் கிட்ட வேண்டினேன்..  அதுதான் ரயில் நின்னுடுச்சு" என்றான். ரயில்  சிக்னலுக்காக நின்றதோ.. அல்லது அனுமார் நிறுத்தினாரோ.. அவன் பத்திரமாக இறங்கியதும்தான் மனம் நிம்மதி அடைந்தது. நான்கு ஆட்டோ டிரைவர்கள், எங்களை அணுகி,  தாஜ் மஹாலை சுற்றி காட்டுவதாய் சொல்ல., அதில் சாமுத்திரிகா லட்சணம் பார்த்து ஒருவரை தேர்ந்தேடுத்தோம்.     பரமு அவரையும், அவரது ஆட்டோவையும் கண்ட மேனிக்கு போட்டோ எடுத்து தள்ளியதுடன் இல்லாமல் அவரது லைசென்சையும் வாங்கி போட்டோ பிடித்து கொண்டான். எதற்கு என்றதற்கு "PREVENTION IS BETTER THAN CURE" என்று தலையே ஆட்டி ஆட்டி சொன்னான். ஆட்டோ டிரைவரின் லைசென்ஸ் எங்களது சொத்துக்களான டிகிரி சர்டிபிகே