Posts

Showing posts from 2012

அட்ட கத்தி - விமர்சனம்

Image
ஒரு பெண்ணின் மனசு போலத்தான் இந்த படமும்.....  நிறைய ஆச்சரியங்கள்... ரகசியங்கள்... கிறங்கடிக்கும் கள்ள பார்வைகள்.... குட்டி குட்டி சந்தோஷங்கள்...    எளிதில் புரிந்து கொள்ள முடியா...  குழப்பியடிக்கும் நடவடிக்கைகள் என திரைக்கதை  நம் இளமை கால நினைவுகளை ஒரு முறை மறு ஒலி -ஒளி பரபரப்பு செய்கிறது  பிறந்ததில் இருந்து...  ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்த்து..  பழகி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் யார் என தேடினால்  உலக உருண்டையில்   ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்கள்...... நான் உட்பட...  மூன்றாவது படிக்கும் போது  கர்லிங் ஹேர் வைத்த யசோதா... ஐந்தாவதில் சாய்ரா  பானு... கல்லூரி காலங்களில் எதிர் வீட்டு ப்ரியா... அப்புறம் என் அக்கா பெண் என எனக்கும் நீண்ட காதல் எபிசோடுகள் உண்டு..எல்லாமே சொதப்பல்கள்தான்!. அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால்  மூன்று மாதங்களுக்கு இந்த பதிவு நீளும் என்பதால் நேராய் படத்திற்கு வருவோம்... அதேதான்.. புனிதமான காதல்.. அமரக்காதல் என நாம் ரீல் சுற்றுவதெல்லாம் வெறும்  இனக்கவர்ச்சி என காதல் ஜிகினாவை கிழித்திருக்கிறார்கள்... ஒப்புக்கொள்ள கொஞ்சம் மனசு வலித்தாலும் நிதர்சனம் அ

சகுனி - விமர்சனம்

Image
. மகாபாரத சகுனியின் பெயரை கெடுத்திருக்கிறார்கள்..... சூழ்ச்சி என்பது வெகு கவனமாக பின்னப்படும் ஒரு சிலந்தியின் வலை போல... அடுக்கடுக்கான சதிப்பின்னல்களும் அதை செயல்படுத்தும் விவேகமும் உடைய ஒரு ராஜ தந்திரம்தான்.  கார்த்தி இருக்கிறார்... அவர் எதை செய்தாலும்  மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்கள். பூ சுற்றுவதற்கும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும்.  திரைக்கதையில் அந்த புத்திசாலித்தனம் இல்லாதது  சகுனியே ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது. ரயில்வேயின்  சப்வே திட்டத்திற்காக... அரசு ஆக்கிரமிக்கவிருக்கும்  தன் பாரம்பரிய வீட்டை காப்பாற்றுவதற்காக வழக்கம் போல ரயில் ஏறும் ஹீரோ.. வழக்கம் போல அரசியல்வாதிகளால் விரட்டியடிக்கப்பட... வழக்கம் போல முதல் பாதி முழுதும் ஹீரோயினோடு காதலித்து டூயட் பாடிவிட்டு..  அதற்க்கப்புறம்  சுதாரித்து...  வழக்கம் போல இன்டர்வெல் ப்ளாக்கில் வீட்டை காப்பாற்ற சபதம் போட்டு.. வழக்கம் போல இரண்டாம் பாதியில் அரசியல்வாதி வில்லன்களை ஏமாற்றி வழக்கம் போல இறுதியில் வீட்டை  மீட்கிறார். . என்ன... படிக்கும் போதே நாடி நரம்பெல்லாம் முருக்கேற

தடையறத் தாக்க - விமர்சனம்

Image
இது வில்லன்களின் சினிமா... ஹீரோவுக்கு ஒரு மாஸ் ஓபனிங் பார்த்திருக்கிறோம்.. ஹீரோயினுக்கு ஒரு  கிளுகிளு குளுகுளு ஓபனிங் பார்த்திருக்கிறோம்... ஆனால் வித்தியாசமாய்      வில்லன்களுக்காய் ஒரு டெரர் ஓபனிங் இந்தப்படத்தில்.  ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் போது.. தீடிரென ரயில் ஹாரன் சப்தம் கேட்டால் ஒரு பதைபதைப்பும் நடுக்கமும் மனசுக்குள் எழுமே...    அதன் வீரியத்தை படம் முழுதும் உணரசெய்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஒரு பன்ச் டயலாக் கூட இல்லாத வசனங்கள்... ஓவர் பில்ட் அப் செய்ய வாய்ப்பிருந்தும் அடக்கி வாசிக்கப்பட்ட ஹீரோயிசம் என இது கொஞ்சம் வித்தியாச சினிமாதான். கமர்சியல் காம்ப்ரமைசிற்க்காக முதற் பாதியில் இருக்கும் இரண்டு பாடல்களையும் துணிந்து வெட்டியிருந்தால் இன்னமும் படம் ஷார்ப்பாக வந்திருக்கும். வாழ்கையில் .... .காதலில்... தொழிலில் என  கொஞ்சம் கொஞ்சமாய்  வெற்றியே ருசிக்க காத்திருக்கும் அருண் விஜய்...  விதி வசத்தால் ஒரு ரவுடி கும்பலிடம் மோத நேரும்போது நிகழும் சம்பவங்கள்தான் கதை.  ஆனால் இதை ஹீரோவின் பார்வையில் சொல்லாமல்... வில்ல

நொறுக்கு தீனி -6 (10.06.12)

Image
அம்பாள் நகர் சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு. கொஞ்சமே கொஞ்சம் குறுகலான சாலை. அதில் எதிரும் புதிருமாக மீன் பாடி வண்டியிலிருந்து டேங்கர் லாரி வரை பயணிக்கிறது.  அதற்க்கு நடுவே என்னை போன்ற பாதசாரிகள் ஒரு ஆயிரம் பேர். அதிலும் மாலை வேளையில் ஒரு வாக் போய் பாருங்கள் பிரதான சாலை முடிவிலிருந்து மெயின் ரோடு வந்து சேர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிறது. (ஆனால் வெறும் ஐந்து நிமிடங்களில் கடந்து விடக்கூடிய தூரம்தான்). எப்போதுமே திருவிழா கூட்டம்.  இடையே, சில பல பெண்கள் ஹாஸ்டல்கள் வேறு இருப்பதால்... அதில் வேறு  கவனம் தொலைத்து.. ஹி... ஹி... டாபிக் மாறுகிறது. ஆமாங்க.. சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு  விஸ்வரூபம்   - முதல்  பார்வை  பார்த்தவுடன் புருவம்  உயர்த்த  வைக்கும்  புகைப்படம். இன்னும்  இந்த   ஆள்   எதைத்தான்   மிச்சம்   விட்டு   வைப்பார்   என  தெரியவில்லை.  பார்வையில் அத்தனை  நளினம் அது பக்கத்தில் நிற்கும் ஆண்ட்ரியாவிடம்

நொறுக்கு தீனி - 5 - (04.06.12)

Image
சென்னை - ஒரு ஆச்சரியம் நான் சென்னைக்கு வந்து இத்தோடு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. சொந்த ஊர் பாசம் சென்னையின் மீது ஒரு பிடிப்பை கொடுக்க மறுத்தாலும், சென்னை மீதான என் ஆச்சரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சென்ற வாரத்தின் ஒரு நாளில், நாங்கள் குடியிருக்கும் போர்ஷனில் மீதமுள்ள ஒரு வீட்டிற்க்கும் ஆள் வந்தாயிற்று. சொந்த ஊர் மதுரை.  பக்கத்தில்  இருக்கும் இரு போர்ஷன்களில் குடியிருப்பவர்களில் ஒருவர் காரைக்குடி... மற்றொருவர் நாகை. நான் கோயம்புத்தூர். ஆக... எல்லா ஊர் பயல்களும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். வருபவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளையும், வாழ்வின் ஜீவாதரங்களையும் சென்னை பகிர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. நான் திருப்பூரில் இருக்கும் போது கவனித்ததுண்டு... மதுரை, தேனி என தினம் தினம் பனியன் கம்பெனி வேலையே நம்பி புதிது புதிதாய் வருபவர்கள் பல நூறு. திருப்பூர் சொந்த மாநில ஆட்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தால்... சென்னை... பல மாநில ஆட்களுக்கும் வாழ்கையே கொடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் சென்ட்ரலில், எக்மோரில் அழுக்கு சட்டை, உடைந்த

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்

Image
விகடனில் வந்த இயக்குனர் எழிலின் பேட்டியும், இமானின் இரண்டு பட்டாசான பாடல்களும், கேட்சியான டைட்டிலும், சிவ கார்த்திகேயன் என்னும் துருப்புசீட்டும் முதல் நாளே படம் பார்க்கும் விருப்பத்தை தந்திருந்தது. ஆனால், பத்தோடு பதினொன்று போலான காதல் படம்தான் இதுவும். முதல் பாதியில் கொஞ்சம் காமெடி, இரண்டாம் பாதியில் கொஞ்சம்  கடி என எந்த விதமான அதிர்வும் தராமல் படம் நம்மை கடந்து போகிறது.   காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் அன்னப்பறவைதான்..எப்போது? நம்முள் நாம் அதை  தெளிவாய்  உணரும் போது.... அந்த உணர்வுகள் நமக்குள் கொடுக்கும் இனம் புரியா சந்தோஷமும்.... நம்மையும் சிறகு விரித்து பறக்க செய்யும் உற்சாகமும்.... காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் பறவைதான். ஆனால் இந்த படத்தின் பிரச்சனையே... அந்த காதலை நம்முள் உணர வைக்க தவறியதுதான். காதலையும் காமெடி போலவே லைட்டாய் எடுத்துக்கொள்ளும் ஹீரோ, ஹீரோவை காதலிக்கிறோமா... இல்லை குடும்பத்தை  காதலிக்கிறோமா என குழப்பியடிக்கும் ஹீரோயின் என ஒட்டியும் ஒட்டாத கேரக்டர்கள் அவர்களின் காதல் மீதோ, அல்லது படத்தின் கதை மீதோ நமக்கு  ஈடுபாடு வருவதை

நொறுக்கு தீனி - 4 (20.05.12)

Image
  தத்து பித்து out of form -  இந்த வார்த்தை கிரிக்கெட்டில் மட்டுமல்ல... வாழ்கையிலும் அவ்வப்போது இயல்பாய் நிகழக்கூடிய ஒன்று. சில சமயங்களில்,  எல்லாம் வெறுத்து.. என்னடா வாழ்க்கை இது என நினைக்க தோணுமே... அதேதான்! எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கும்... தீடிரென ஒரு வெறுப்பு...குழப்பம்.. .தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமை... ஒரு தேக்கம்... ஒரு speed breaker போல...  எல்லோரும் சில சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சனை இது. நன்றாக எழுதிக்கொண்டிருப்போம்.. .தீடிரென  எந்த இழவுமே தோன்றாது. வீம்புக்காய் எழுதினாலும்.. எழுதிய பின் படித்து பார்த்தால்....  நாமே காறி துப்பலாம் போல அவ்வளவு கன்றாவியாய் இருக்கும். out of form. எழுத்தாளன், நடிகன்,  விளையாட்டு வீரன்... சராசரி மனிதன் என பாகுபாடின்றி எல்லோரும் சந்திப்பது...  தீர்மானிக்க முடியா ஒரு புதிர்தான் வாழ்க்கை.. நாளை என்ன நடக்கும் என்று ஒருத்தனுக்கும் தெரியாது...  நாளை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தேமேயென சொங்கி போக வைக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்வதல்ல இந்த பதிவின் நோக்கம்.. பிரச்சனை எனக்கும் இருக்கிற

மிக எதிர்பார்ப்புக்குரிய 10 படங்கள்

Image
10.கும்கி வனமும் வனம் சார்ந்த விஷயங்களும் எப்போதுமே அலுக்காதவை...   காட்டுக்குள்  ஒரு ட்ரெக்கிங் போகும் உற்சாகத்தை கொடுத்த மைனாவின்  கதை களம்தான்  அதன்  வெற்றிக்கு முக்கிய காரணம். அதே குளு குளு மலை சாரலின் பின்னணியில் பிரபு சாலமனின் அடுத்த படம். வித்தியாசமான   முயற்சிகளுக்காக மெனக்கெடும் பிரபு சாலமனுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றி மைனாவின் மூலமாய் கிடைத்ததை கும்கி தக்க வைத்துக்கொள்ளுமா என்பதை பார்ப்போம்.  கதையின் முடிவு ட்ராஜிடியாய் இருக்க வேண்டும் என்பதற்காக... கிளைமாக்சில், ஹீரோயினை... யானை தூக்கி வீசி பந்தாடாமல் இருந்தால் சரி.  09.தாண்டவம் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும்   விக்ரமிற்கு இந்த படமாவது ஆறுதலை தருமா  என்பதுதான் இப்போதைய  மில்லியன் டாலர் கேள்வி. என்னதான் உயிரை கொடுத்து நடித்தாலும் நடிக்கிற படங்கள் எல்லாம் பப்படம் ஆகிக்கொண்டு வருவதை சீயான் உணர்ந்திருப்பார் போல... அதுதான் ஷங்கரை தேடி சென்று வாய்ப்பை கேட்டு பெறுமளவிற்கு செய்திருக்கிறது. சினிமாவில் ஒரு ஹிட் எல்லாவற்றையும் புரட்டி போட்டு விடும். மதராசபட்டினத்தில்

நொறுக்கு தீனி - 3 (13.05.12)

Image
வாரா வாரம் ஆரவாரமாய் எழுத வேண்டும் என தொடங்கியது இந்த பகுதி... என் சோம்பேறித்தனமா.....இல்லை உங்கள் நல்ல நேரமா என தெரியவில்லை... இவ்வளவு நாள் எழுதாமல்,  அதிகம் படிக்காமல் விட்டதால்,  மண்டையில் ஒட்டடை படிந்து நானே.... எதோ பழசான பொருளாய் மாறிப்போனது போல ஒரு உணர்வு. இனியும் நேரம் கடத்துவதாய் இல்லை. வாழ்க்கை ஒரு வட்டம்டா..... மெட்ராஸ் வெய்யிலில் வருபட்டுக்கொண்டிருப்பவனுக்கு கோயம்புத்தூர்காரனை பார்த்தால் ஒரு ஆதங்கம்.. இவனுக மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல குளு குளுன்னு வாழ்ந்துட்டு இருக்கானுக.. சிறுவாணி தண்ணி குடிச்சுட்டு குஷியா இருக்காங்கன்னு.. கோயம்புத்தூர் காரனுக்கு மெட்ராஸ் காரனை பார்த்தால் ஒரு கோபம்.. .. இவங்களுக்கு  மட்டும் ரெண்டு மணி நேரம் மட்டும் பவர் கட். ஆனா நமக்கு  எட்டு மணி நேரம்...  என்ன கொடுமை டா... ராமான்னு.. இந்த ரெண்டு பேரையும் பார்த்துட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறான் புதுக்கோட்டை காரன்.. எங்களுக்கு பவர் கட்டே கிடையாது... வெயில் அடிச்சாலும் சில்ல்ன்னு பீர் குடிக்க இலவசமா வீட்டுக்கு வீடு காசு வேற தராங்கனு...   ரயில் வருது... ரயில் வருது.

வழக்கு எண் 18/9 - விமர்சனம்

Image
வாழ்வியல் யதார்த்தங்களை மீறிய மிகைபடுத்தப்பட்ட சம்பவங்களும், கற்பனை கூட செய்து பார்க்க முடியா தனி மனித சாகசங்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.. இந்த பொய் பிம்பங்கள் யாவும் உண்மை என நம்மை  நம்ப வைத்து  நம் மூளை மழுங்க செய்து, அதன் போதையிலேயே கனவில் வாழ்க்கை நகர்த்த வைக்கும் வியாபார சினிமா தந்திரங்களுக்கு  மத்தியில் இந்த மாதிரி படங்கள் கடவுள் போல... காணக் கிடைக்கா வரம்.  தரையில் கால் வைத்து நடப்பதுதான் யதார்த்தம்.  இந்த படைப்பு உங்கள் கை விரல் பிடித்து இரண்டரை மணி நேரம் வாழ்வின் யதார்த்த அழகியலையும், அவலத்தையும் ஒருங்கே காட்டிச்செல்கிறது.  ஒரு படத்தின் தரம் என்பது,   ஐம்பது கோடி, நூறு கோடி பட்ஜெட், ஸ்டார்  வேல்யு,  ஹை டெக் டெக்னாலஜி,  வெளிநாட்டு லொக்கேஷன்கள் போன்றவைதான் என  தீர்மானிக்கும் கூட்டங்களுக்கு நடுவே, எந்த விதமான பிரம்மாண்டங்களும், ஸ்டார் வேல்யுவும் இன்றி,  அறிமுக நடிகர்களை கொண்டு,  அற்புதமாக  கதை சொல்லியிருக்கும் பாலாஜி சக்திவேல் உலக சினிமா இயக்குனர்கள் வரிசையில் தானும் வரும் தகுதியே வளர்த்துக்கொண்டிருக்கிறார்.  விகடனில