Posts

Showing posts from September, 2011

ஜாக்கியும்.... நானும்.....

Image
நாய்களுடனான என் உறவு ஹிட்லருக்கும் யூதனுக்கும் உள்ள உறவை போன்றது.   எந்த காலத்திலும் ஒத்து போனதே இல்லை. நாய்கள் மீதிருந்த  அச்சமும் வெறுப்பும் சிறு வயதில், ஒரு முட்டு சந்தில் என்னை துவட்டி எடுத்த அந்த குறிப்பிட்ட கருப்பு நாயிடம் இருந்து பிறந்திருக்கலாம். சிவனே என்றுதான் படுத்துக்கொண்டிருந்தது. பதின்ம வயதின் குறும்புகள் என்  மூளையில் பிறந்து கால் வழியாய் வெளியேறி அதன் வாலை மிதிக்க, கும்பகர்ணனின்   தூக்கத்தை  கலைத்தால் கோபத்தில் எப்படி வெறித்தனமாய்    பாய்வானோ அதே வேகத்தில் என் தொடையே குறி வைத்து பாய்ந்து கடித்து குதறி தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது.  இப்போது இருப்பது போல ஒற்றை ஊசி வைத்தியம் எல்லாம் அப்போது இல்லை.  குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி வந்து தினம் ஒரு ஊசி என என் குடும்ப மருத்துவர் பதினெட்டு நாட்கள் என் தொப்புளை துளைத்தார். ஒவ்வொரு முறை ஊசி ஏற்றும் போதும் நாய்கள் மீதான என் வன்மம் என் மனசுக்குள் ஏற ஆரம்பிக்க அதிலிருந்து நாய்கள் என்றாலே லத்திகா பட போஸ்டரை கண்டது போல தெறித்து விலக ஆரம்பித்தேன். நாம் நாய் வழியில் குறுக்கிடா விட்டாலும்

யார் உண்மையான AIRTEL சூப்பர் சிங்கர்?

Image
வருட கணக்கில் இழுக்கும் மெகா சீரியல்களை விட மனசுக்கும் செவிக்கும் நன்மை பயந்த நிகழ்ச்சி. விஜய் டிவி நடத்திய AIRTEL SUPER SINGER PROGRAMME. எத்தனை எத்தனை வித விதமான பாடகர்கள்... பாடல்கள்...   இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்வுகள் இங்கே... ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்து விட்டது. சுஜாதா அவர்களின் மகளும், ஸ்ரீநிவாஸ் மகளும் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் அவ்வளவு இனிமை. முக்கியமாக சுஜாதா மகளின் குரல் ஒரு லிட்டர் தேனை காதுக்குள் ஊற்றியது போல அவ்வளவு சுவை.  அதே போல போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக பாட வந்த அல்கா அஜித் குரல் வாய்ப்பே இல்லை. "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை அந்த சின்ன பெண் பாட பாட என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். DIVINE.   நிகழ்ச்சி நடந்த TRADE CENTER முழுக்க ஏகப்பட்ட பிரபலங்களின் தலைகள். அவர் ஒரு கடம் வித்வான் என்று நினைக்கிறேன்... நிகழ்ச்சிக்கு கடம் கொண்டு வராத காரணத்தினாலோ என்னவோ ஒவ்வொரு பாட்டுக்கும் தலையாலே கடம் வாசித்து கொண்டிருந்தார்.  பார்வையாளர் கூட்டத்தை க

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்

Image
தினசரிகளில் வாகன விபத்து செய்திகளை படிக்கும் போது பலி  எண்ணிக்கையே பொருத்துதான்  நம் கவன ஈர்ப்பு சற்றே ஏறி  இறங்கும். இறந்தவர்களுக்காக பரிதாபப்பட்டு வருந்தும் சில நிமிடங்களை  எல்லாம் தொலைத்து அவரவர் அலுவல்களுக்காக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் மனித மெஷின்கள் நாம். விபத்தின் அதிர்வுகளை   பங்கு சந்தையின் அன்றைய நிலவரம் போல மற்றுமொரு செய்தியாக பாவிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம்.   நமக்கு நேராதவரை விபத்து என்பது நம்மை காற்று போல கடந்து சென்றுவிடும்  சிறு  செய்தி  அவ்வளவே....  அந்த  விபத்துக்குபின்னால் பறி போன மனித உயிர்களின் மதிப்போ... அவர்கள் தொலைத்த கனவுகளின் வலியோ...  நம்மில்  எத்தனை  பேருக்கு   பாதிப்பை  ஏற்படுத்துகிறது? செல்லுலாயிட் கதை என்றாலும் நிஜம் போல கூர்மையாய் மனசுக்குள் இறங்கி பாதிக்க வைக்கிறது எங்கேயும் எப்போதும்.   ஒரு இயக்குனராக, முதல் நாளே படம் பார்க்க வேண்டும் என்கின்ற விருப்பத்தை தரும்  முருகதாஸ் தனது தயாரிப்பில் வரும் படத்தையும் முதல் நாளே பார்க்கலாம் என்கின்ற நம்பிக்கையே  பலமாக  கொடுத்திருக்கிறார்.    தொடரட்டும் அவரின் இது போலான நல்ல முயற்சிகள்.  எல்லோருக்கும்...

பரமுவுக்கு கல்யாணம்

Image
 பரமு என் உயிர் நண்பன். சில நேரங்களில், என்  உயிர் எடுக்கும் நண்பனும் கூட...      உலகில் எல்லோருக்கும் பொதுவானது நட்பு.  அதன் அளவீடுகள் எந்த எல்லைகளுக்கும் உட்படாதவை. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மனிதர்களுக்குள்  உருவாகும், ஈர்ப்பு, அக்கறை, ஒத்த அலைவரிசை, ரசனை, அன்பு, பாசம், நேசம்  இன்னும் என்னனென்னவோ..இவை அத்தனைக்கும் பிள்ளையார் சுழி போடுவது நட்புதான். காதல் கூட அதன் தொடர்ச்சியாய் பின்னால் வருவதுதான்.ஒரு நல்ல நட்புதான் காதலாய் மாறும் என்பது என் நம்பிக்கை.  நல்ல நட்பு நம்மை பக்குவபடுத்துகிறது... வண்டியில் போய்க்கொண்டிருக்கிறோம்.... எதிர்பாரா விதமாக எதிரில் வரும் வண்டியோடு சிறு உரசல். கோபம் என்னும் சாத்தான் உடனே எழுந்தாலும், கொஞ்சம் அதை அடக்கி நட்போடு கொஞ்சம் புன்முறுவல் செய்து பாருங்கள்... அதற்க்கு கிடைக்கும் பலனே வேறு. யாரும் யாரோடும் சண்டை போட விரும்புவதில்லை. சிநேகமான புன்னகையும், நட்பு பாராட்டுதலும் மிருகமாக இருப்பவனை மனிதனாக்குகிறது... தனக்கென மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவரை பற்றியும் அக்கறை கொள்ளும் போது அந்த மனிதன் கடவுளாகிவிடுகிறான்.  எத்தனையோ நண்பர்கள் நமக்கு வ

மங்காத்தா - விமர்சனம்

Image
 ஆஞ்சநேயா, ஜனா, ஏகன், அசல் என எத்தனை அரியர் வைத்தாலும், கோடம்பாக்கம்  கல்லூரியின் அழகான, அம்சமான ஸ்டுடென்ட் அஜித். ஒருவழியாய் மங்கத்தா மூலமாய் டிஷ்டிங்ஷனில் தேறியிருக்கிறார்.  ஒரு மாஸ்  ஹீரோவின் ஐம்பதாவது படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக  மங்காத்தா டீம் மொத்தமும் அஜீத்துக்காக ஆடி தீர்த்திருக்கிறது. ஆனால், சர்ப்ரைஸ் கிப்ட்டாக ஆட்டநாயகன் விருதும் அஜித்தே  அடித்திருப்பது  எதிர்பாரா ஆச்சரியம்.  கோடி்கள்  புரளும் கிரிக்கெட் சூதாட்ட களத்தில்,  பந்தய பணம்  ஐநூறு கோடியே  கொள்ளையடித்து நோகாமல்  நோன்பு கும்பிட நினைக்கும் நால்வர் குழு ஒன்று.  ஒன் மேன் ஆர்மியாய் அதை ஆட்டையே போட துடிக்கும் போலீஸ் அதிகாரி் அஜித். மொத்த  சூதாட்ட கும்பலை பிடிக்க நினைக்கும்  சிபிஐ அதிகாரியாய் அர்ஜுன். பணத்தை பறிகொடுத்த ஆத்திரத்தில் துப்பாக்கியோடு அலையும் சூதாட்ட கும்பல். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆடும் ஆட்டம்தான் மங்காத்தா.  சென்னை.28 , சரோஜா, என வெங்கட் பிரபுவிற்கு கைகொடுத்த அதே  கிரிக்கெட் களம் மங்காத்தாவிலும் உதவியிருக்கிறது. அஜித், டீமின் அதிரடி  பேட்ஸ் மேனாய்  சிக்சர்களாய் அடித்து நொறுக்க, ஒளிப்பதிவு,