Posts

Showing posts from June, 2012

சகுனி - விமர்சனம்

Image
. மகாபாரத சகுனியின் பெயரை கெடுத்திருக்கிறார்கள்..... சூழ்ச்சி என்பது வெகு கவனமாக பின்னப்படும் ஒரு சிலந்தியின் வலை போல... அடுக்கடுக்கான சதிப்பின்னல்களும் அதை செயல்படுத்தும் விவேகமும் உடைய ஒரு ராஜ தந்திரம்தான்.  கார்த்தி இருக்கிறார்... அவர் எதை செய்தாலும்  மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்கள். பூ சுற்றுவதற்கும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும்.  திரைக்கதையில் அந்த புத்திசாலித்தனம் இல்லாதது  சகுனியே ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது. ரயில்வேயின்  சப்வே திட்டத்திற்காக... அரசு ஆக்கிரமிக்கவிருக்கும்  தன் பாரம்பரிய வீட்டை காப்பாற்றுவதற்காக வழக்கம் போல ரயில் ஏறும் ஹீரோ.. வழக்கம் போல அரசியல்வாதிகளால் விரட்டியடிக்கப்பட... வழக்கம் போல முதல் பாதி முழுதும் ஹீரோயினோடு காதலித்து டூயட் பாடிவிட்டு..  அதற்க்கப்புறம்  சுதாரித்து...  வழக்கம் போல இன்டர்வெல் ப்ளாக்கில் வீட்டை காப்பாற்ற சபதம் போட்டு.. வழக்கம் போல இரண்டாம் பாதியில் அரசியல்வாதி வில்லன்களை ஏமாற்றி வழக்கம் போல இறுதியில் வீட்டை  மீட்கிறார். . என்ன... படிக்கும் போதே நாடி நரம்பெல்லாம் முருக்கேற

தடையறத் தாக்க - விமர்சனம்

Image
இது வில்லன்களின் சினிமா... ஹீரோவுக்கு ஒரு மாஸ் ஓபனிங் பார்த்திருக்கிறோம்.. ஹீரோயினுக்கு ஒரு  கிளுகிளு குளுகுளு ஓபனிங் பார்த்திருக்கிறோம்... ஆனால் வித்தியாசமாய்      வில்லன்களுக்காய் ஒரு டெரர் ஓபனிங் இந்தப்படத்தில்.  ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் போது.. தீடிரென ரயில் ஹாரன் சப்தம் கேட்டால் ஒரு பதைபதைப்பும் நடுக்கமும் மனசுக்குள் எழுமே...    அதன் வீரியத்தை படம் முழுதும் உணரசெய்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஒரு பன்ச் டயலாக் கூட இல்லாத வசனங்கள்... ஓவர் பில்ட் அப் செய்ய வாய்ப்பிருந்தும் அடக்கி வாசிக்கப்பட்ட ஹீரோயிசம் என இது கொஞ்சம் வித்தியாச சினிமாதான். கமர்சியல் காம்ப்ரமைசிற்க்காக முதற் பாதியில் இருக்கும் இரண்டு பாடல்களையும் துணிந்து வெட்டியிருந்தால் இன்னமும் படம் ஷார்ப்பாக வந்திருக்கும். வாழ்கையில் .... .காதலில்... தொழிலில் என  கொஞ்சம் கொஞ்சமாய்  வெற்றியே ருசிக்க காத்திருக்கும் அருண் விஜய்...  விதி வசத்தால் ஒரு ரவுடி கும்பலிடம் மோத நேரும்போது நிகழும் சம்பவங்கள்தான் கதை.  ஆனால் இதை ஹீரோவின் பார்வையில் சொல்லாமல்... வில்ல

நொறுக்கு தீனி -6 (10.06.12)

Image
அம்பாள் நகர் சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு. கொஞ்சமே கொஞ்சம் குறுகலான சாலை. அதில் எதிரும் புதிருமாக மீன் பாடி வண்டியிலிருந்து டேங்கர் லாரி வரை பயணிக்கிறது.  அதற்க்கு நடுவே என்னை போன்ற பாதசாரிகள் ஒரு ஆயிரம் பேர். அதிலும் மாலை வேளையில் ஒரு வாக் போய் பாருங்கள் பிரதான சாலை முடிவிலிருந்து மெயின் ரோடு வந்து சேர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிறது. (ஆனால் வெறும் ஐந்து நிமிடங்களில் கடந்து விடக்கூடிய தூரம்தான்). எப்போதுமே திருவிழா கூட்டம்.  இடையே, சில பல பெண்கள் ஹாஸ்டல்கள் வேறு இருப்பதால்... அதில் வேறு  கவனம் தொலைத்து.. ஹி... ஹி... டாபிக் மாறுகிறது. ஆமாங்க.. சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு  விஸ்வரூபம்   - முதல்  பார்வை  பார்த்தவுடன் புருவம்  உயர்த்த  வைக்கும்  புகைப்படம். இன்னும்  இந்த   ஆள்   எதைத்தான்   மிச்சம்   விட்டு   வைப்பார்   என  தெரியவில்லை.  பார்வையில் அத்தனை  நளினம் அது பக்கத்தில் நிற்கும் ஆண்ட்ரியாவிடம்

நொறுக்கு தீனி - 5 - (04.06.12)

Image
சென்னை - ஒரு ஆச்சரியம் நான் சென்னைக்கு வந்து இத்தோடு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. சொந்த ஊர் பாசம் சென்னையின் மீது ஒரு பிடிப்பை கொடுக்க மறுத்தாலும், சென்னை மீதான என் ஆச்சரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சென்ற வாரத்தின் ஒரு நாளில், நாங்கள் குடியிருக்கும் போர்ஷனில் மீதமுள்ள ஒரு வீட்டிற்க்கும் ஆள் வந்தாயிற்று. சொந்த ஊர் மதுரை.  பக்கத்தில்  இருக்கும் இரு போர்ஷன்களில் குடியிருப்பவர்களில் ஒருவர் காரைக்குடி... மற்றொருவர் நாகை. நான் கோயம்புத்தூர். ஆக... எல்லா ஊர் பயல்களும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். வருபவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளையும், வாழ்வின் ஜீவாதரங்களையும் சென்னை பகிர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. நான் திருப்பூரில் இருக்கும் போது கவனித்ததுண்டு... மதுரை, தேனி என தினம் தினம் பனியன் கம்பெனி வேலையே நம்பி புதிது புதிதாய் வருபவர்கள் பல நூறு. திருப்பூர் சொந்த மாநில ஆட்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தால்... சென்னை... பல மாநில ஆட்களுக்கும் வாழ்கையே கொடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் சென்ட்ரலில், எக்மோரில் அழுக்கு சட்டை, உடைந்த

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்

Image
விகடனில் வந்த இயக்குனர் எழிலின் பேட்டியும், இமானின் இரண்டு பட்டாசான பாடல்களும், கேட்சியான டைட்டிலும், சிவ கார்த்திகேயன் என்னும் துருப்புசீட்டும் முதல் நாளே படம் பார்க்கும் விருப்பத்தை தந்திருந்தது. ஆனால், பத்தோடு பதினொன்று போலான காதல் படம்தான் இதுவும். முதல் பாதியில் கொஞ்சம் காமெடி, இரண்டாம் பாதியில் கொஞ்சம்  கடி என எந்த விதமான அதிர்வும் தராமல் படம் நம்மை கடந்து போகிறது.   காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் அன்னப்பறவைதான்..எப்போது? நம்முள் நாம் அதை  தெளிவாய்  உணரும் போது.... அந்த உணர்வுகள் நமக்குள் கொடுக்கும் இனம் புரியா சந்தோஷமும்.... நம்மையும் சிறகு விரித்து பறக்க செய்யும் உற்சாகமும்.... காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் பறவைதான். ஆனால் இந்த படத்தின் பிரச்சனையே... அந்த காதலை நம்முள் உணர வைக்க தவறியதுதான். காதலையும் காமெடி போலவே லைட்டாய் எடுத்துக்கொள்ளும் ஹீரோ, ஹீரோவை காதலிக்கிறோமா... இல்லை குடும்பத்தை  காதலிக்கிறோமா என குழப்பியடிக்கும் ஹீரோயின் என ஒட்டியும் ஒட்டாத கேரக்டர்கள் அவர்களின் காதல் மீதோ, அல்லது படத்தின் கதை மீதோ நமக்கு  ஈடுபாடு வருவதை