Posts

Showing posts from February, 2011

கோப்பையும்... கனவும்.....

Image
 "நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா..." என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும்  பிரியாணி  தின்றாலும், இரண்டு  வருடத்திற்க்கொருமுறை  வன  பத்ரகாளியம்மன்  கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து...  1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில்  அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை  போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி  அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை  கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை  தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி  மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது... என் காதலி என்னிடம் தன்  காதலை சொல்லிய  நிமிடத்தில் கூட

யுவனின் அசத்தல் இசை - "பேசு" - இசை விமர்சனம்.

Image
F.M. என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நல்ல இசைக்கு நடுவே தேவையற்ற விளம்பரங்களும், அரட்டைகளும் நிரம்பி வழியும் இடியட்  பாக்ஸ் அது. ஆனால் அதே F.M. யுவனின் அற்புதமான இசையே எனக்கு அறிமுகபடுத்தி வைத்தது... தேங்க்ஸ் FM .  யதோட்சையாக FM  கேட்க நேர்ந்த போது, "I HAVE A DREAM" என யுவன் உருகிக்கொண்டிருந்தார்.   என்னடா இது...மனுஷன் சொந்த குரலில் இனிமேல் பாடமாட்டேன் என்றாரே...இதுவரை கேட்டறியாத புது பாடலாக இருக்கிறதே என தோண்டி துருவியதில்.. யுவனின் லேட்டஸ்ட் ஆல்பம் "பேசு". இப்படி ஒரு படம் வரவிருக்கிறது  என்று  இதுவரை எந்த தகவலுமே இல்லை. ஆனால் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டதில் எல்லாமே... அட்டகாசமாக அதுவும் காதல் பாடல்களாக இருக்கிறது.  முதல் பாடலான " I HAVE A DREAM" ஆல்பத்தின் மோஸ்ட் வாண்டட் சாங். யுவனின் குரலில் காதல் ஐஸ் கிரீம். மெட்டும் அற்புதமாக இருக்கிறது.  ஆல்பத்தின் அடுத்த காதல் ஐஸ் கிரீம், ராகுல் நம்பியார், ரீட்டா  குரல்களில் "இதயம் பேசுதே" மென்மையான மெலடி... அதிலும் இடையில் வரும் அந்த பெண்ணின் ஹம்மிங் உங்கள் இதயம் கரைத்து அப்படியே உருக்கி விடும்.

பயணம் - விமர்சனம்

Image
ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். என்னுடைய பயம் விமான பயணத்தில். பூமிக்கும் வானுக்கும் எந்த வித சப்போர்ட் இல்லாமல் அந்தரத்தில் இப்படி பறக்கிறதே... விழுந்து கிழுந்து வைத்தால்... ஒன்றுமே மிஞ்சாதே என்கின்ற பயம். அதுவும் ட்வின் டவர் தாக்குதலுக்கு பிறகு... விமான பயணம் பற்றிய என் பயம் பாம்பை கண்ட எலி போல இன்னும் எகிற ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் அதுவரை நான் ஒரு விமான பயணம் கூட மேற்கொண்டதில்லை. கடைசி வரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும்  பரவாயில்லை என்கின்ற உயர்ந்த எண்ணம் என்னுள் இருந்தது. நம் ஆசை இப்படி இருந்தால் கடவுளின் ஆசை அதற்க்கு எதிராகத்தானே இருக்கும். ஒரு சுபயோக சுபதினத்தில் வலுகட்டாயமாக என்னை ஒரு விமானபயணம் செய்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாக்கினார். டெல்லியில் இருந்து கோவை வரை நான் மேற்கொண்ட அந்த சாகச பயணத்தை பற்றி தனி பதிவாக போடுகிறேன். அவ்வளவு பயம் கொண்ட எனக்கு, ராதாமோகனின் இந்த விமான 'பயணம்' ஏகத்துக்கும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்து.... நாமும் அந்த விமானத்தில் இருந்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தையும்  ஏற்படுத்தியது.  நம் அதி

யுத்தம் செய் - விமர்சனம்

Image
காட்சி அனுபவத்திற்கும், வாசிப்பு அனுபவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காட்சி அனுபவத்தை விட வாசிப்பு அனுபவம் விசாலமானது... எல்லைகள் அற்ற கற்பனை உலகில் வாசகன் மிக எளிதாக பறக்க முடியும்.ஆனால் இங்கு,   மிஷ்கின் ஒரு சுவாரசியமான நாவல்  வாசிக்கும் அனுபவத்தை காட்சி ரீதியாக கொடுத்திருக்கிறார். FANTASTIC .   தமிழ் சினிமா, ஏகப்பட்ட  கிரைம்  த்ரில்லர் வகையறாக்களை கொடுத்திருந்தாலும், இந்த அனுபவம் கொஞ்சம் புதிதானது... மிக மெதுவாய் தொடங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வத்தை தூண்டி... இறுதியில் நம்மையும் வெறித்தனமாய் தேடவைக்கும் வேட்டைதான் யுத்தம் செய். போலீஸ்காரர்களை பற்றி எத்தனையோ  விமர்சனங்கள் இருந்தாலும், அனுதினமும் இறந்த உடல்கள் முகத்தில் முழித்து, அதன் பிரச்சனைகளோடு  குடும்பம் நடத்தும் அவர்கள் வாழ்வும் சில சமயங்களில் பரிதாபத்திற்க்குரிய  ஒன்றே....   நகரில் தொடர்ச்சியாக... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பார்சல் பெட்டி முக்கியமான இடங்களை அலங்கரிக்க... வெட்டப்பட்டவர்களையும்... வெட்டியவர்களையும் தேடும் பொறுப்பு CB CID  சேரன் வசம்.. தன் தங்கை ஒரு மழை நாளில் காணாமல் போக.. அவளை கண்டறிய முடியாமல் தவித்

சென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...

Image
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். சந்தானம் அனுபவித்து சொன்னாரோ இல்லையோ... ரொம்பவும் நிஜமான வார்த்தைகள்... நண்பனின் அண்ணனை வழி அனுப்பி வைப்பதற்காக விமான நிலையம் வரை சென்று வர வேண்டியதாய் இருந்தது.  அப்போது அங்கு பராக்கு பார்த்து கொண்டிருந்தபோது சுற்றிலும் நிகழ்ந்த சிற் சில விஷயங்களில் என்னை ஈர்த்தவை.  மனித உணர்வு மிக நுட்பமானது... பிரிவின் தருணங்களில்... அதுவும் மனதுக்கு பிடித்தவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்லும் பொழுதுகளில் அது கொடுக்கும் வலியும் அதன் பின்னான தனிமையின் நிழலும் மிகுந்த துயரம் நிறைந்தது... பொது இடங்களின் நாகரீகம் கருதி அதனை மனதினுள் அடக்கி வைக்கும் போது அதன் வலி இரு மடங்காகிறது...  கழுத்தில் உள்ள தாலி இன்னமுமே  மஞ்சள் காயாமல் புதிதாய் இருக்கிறது... புது சேலை.. புது நகைகள்... அந்த பெண்ணும் புதிதாய்  பிறந்தவள் போல... கடைசி மாதங்களில் அல்லது கடைசி வாரங்களில் அவள் புதிதாய் பெற்ற உறவும்.. புது அன்பின்... புது காதலின்..மிக புதிதான ஒரு அன்யோநியத்தை இவ்வளவு சீக்கிரம் இழக்க போகிறோம் என்கின்ற பரிதவிப்பு அந்த பெண்ணின்  விழிகளில் அப்பட்டமாய் வெளிப்பட... அவள் கணவன் எல்லோரிடமும்