Posts

Showing posts from May, 2010

சிங்கம் - விமர்சனம்

Image
நீங்கள் முனியாண்டி விலாசுக்கு போனால் கொத்து பரோட்டாவும், கோழி குருமாவும் தான் கிடைக்கும். தெரிந்தே சென்று விட்டு அங்கு வெண் பொங்கல் இல்லை, பட்டர் ரோஸ்ட் இல்லை என்று சொல்வதில் எந்த  பிரயோஜனமும்  இல்லை. ஹரி படங்களில்  நான் லீனியர் திரைக்கதை  உத்தியயியோ  வித்தியாசமான கதாபாத்திரங்களையோ   நீங்கள் எதிர்பார்ப்பதும் அப்படியே. அவரது எல்லா படங்களில் இருக்கும் மசாலா கலவைதான் இதிலும்.    வழக்கமான திருடன் போலீஸ் கதைதான். ஆனால் வேகமான திரைக்கதை மூலம் 2 1/2 மணி நேரத்தை அனாயசியமாக கடக்க வைத்திருக்கிறார் ஹரி.  சொந்த ஊரில் போஸ்டிங் வாங்கிகொண்டு, ஊர் மக்களின் அன்போடு  சப் - இன்ஸ்பெக்டராக  இருக்கும் சூர்யா, சென்னையில் தாதாவாக இருக்கும் பிரகாஷ் ராஜ்,  இருவரையும் விதி ஒரு கண்டிஷன் பெயில்  கையெழுத்து பிரச்சனையில்  இணைத்து வைக்க, சொந்த ஊரில் அவர் மீது கை வைக்க முடியாது என தனது செல்வாக்கால் சென்னைக்கு இன்ஸ்பெக்டராக மாற்றல் செய்ய வைக்கிறார் பிரகாஷ். சென்னையில் பிரகாஷ் கோஷ்டி கொடுக்கும் குடைச்சலை சமாளித்து எப்படி வில்லனை வேரருக்கிறார் என்பதை மணக்க மணக்க மசாலா பொறியலில் பரிமாறியிருக்கிறார் ஹரி.  காலில் சுடு ந

நொறுக்கு தீனி - 2

Image
 S.S.L.C தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன... வழக்கம் போல பெண் பிள்ளைகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்றாலும் நம்ம பசங்களும் சரி நிகராக வருவார்கள் என நம்புவோமாக.. ஆண் பிள்ளைகளுக்கு படிப்பதை தவிர நிறைய கடமைகள்  உண்டு. கிரிக்கெட், நண்பர்கள் வட்டம், சினிமா, என்று  பல பொறுப்புகள் இருக்கிறது.  இதை எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டே பசங்க  படிப்பதை நாம் பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு பெண் பிள்ளைகள் படிப்பதோடு ஒப்பிட கூடாது...அவர்கள் படிக்கும் முறையே வேறு.   இரு பாலருக்குமே என் வாழ்த்துக்கள். தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்வதில் இருக்கும் த்ரில்லும், பயமும் எப்போதுமே ஒரு  சுகமான  அனுபவம்தான். இப்போது போல இன்டர்நெட் சமாச்சாரங்கள் அப்போது இல்லை. இப்போது  நம்பரை டைப்பி ENTER கொடுத்தவுடன் மொத்த ஜாதகமும் வந்து விடுகிறது. நான் பத்தாவது படிக்கும் போது, நியூஸ் பேப்பரில்  எண்களை துழாவி, நம் நம்பரை கண்டதும் வரும் ஒரு உற்சாகம் சொல்லில் அடங்காதது. அதே போல மதிப்பெண் வாங்குவதற்கு பெற்றோருடன் வரிசையில்  நிற்கும் போது ஒரு பயம்  வந்து வயிற்றை கலக்குமே... அப்பப்பா..  வகுப்பு ஆசிரியர் ஓவ்

கொல கொலயா முந்திரிக்கா.. - விமர்சனம்

Image
ஸ்டேஜில் போட வேண்டிய நாடகத்தை செல்லுலாயிடில் தந்திருக்கிறார் " வல்லமை தாரயோ " மதுமிதா.  எந்த விதமான ஆபாசமின்றி, காதை கிழிக்கும் பன்ச் வசனங்கள், மசாலா கலவைகள்  தவிர்த்து குடும்பத்துடன் பார்க்க ஒரு சிரிப்பு படம் தர முயன்றிருக்கிறார். ஆனால் காட்சிக்கு காட்சி படம் பார்க்கிறோமா அல்லது நாடகம் பார்க்கிறோமா என்கின்ற உணர்வு  எழாமல் இல்லை.  ஜமீன் குடும்பம், பங்காளி பகை, சொத்து முழுதும் உண்மையான வாரிசுக்கு போக வைரத்தை நான்கு நாற்காலிகளில் ஒன்றில்  ஒளித்து வைப்பது, பின் அதை கைப்பற்ற பல்வேறு குழுக்கள் போடும் திட்டங்கள், இடையில் ஒரு சிரிப்பு போலீஸ் என காமெடி திருவிழா நடத்த ஏற்ற களம்தான். ஆனால் சிக்சர்  அடிக்க வேண்டிய பந்துகளில் எல்லாம்  சிங்கிள் மட்டுமே எடுத்திருக்கிறது மதுமிதா அன்ட் டீம். படத்தின் மெயின் வில்லன் லாஜிக் என்கின்ற வஸ்து. காமெடி படத்தில் இதை எல்லாம் எதிர் பார்க்க கூடாது என்றாலும், நம்பவே நம்ப முடியாத காட்சியமைப்புகளே  படத்தோடு நம்மை ஒன்ற விடாமல் செய்து விடுகிறது. 20 வருடங்களுக்கு முன் தொலைந்து போன மகள், தீடிரென தோன்றி நான் தான் உங்கள் பெண் என்றதும், எந்த கே

நொறுக்கு தீனி

Image
பார்த்ததும் - படித்ததும் - கேட்டதும்  ஜான் ஷெப்பர்ட் பாரோன்    லண்டனில்  காலமாகி விட்டார். யோசிக்காமல் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிடுங்கள். ஏன், எதற்கு என்று கேட்பவர்களுக்கு....  இவர் கண்டுபிடித்த ATM மெஷின் தான் நேரம், காலம் பார்க்காமல் நமக்கு பணம் எடுக்க இப்போது உதவியாய் இருக்கிறது.  நினைத்து பாருங்கள், ATM  இல்லாத தினங்களில் வங்கிகளில் கால் கடுக்க நின்றதும், விடுமுறை தினங்களிலோ,  தீடிர் தேவைக்காகவோ பணத்துக்காக அல்லாடிய பொழுதுகளும்...இந்த  மனிதருக்கும் அந்த காலத்தில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நினைத்தாராம்.... சாக்லேட்டுகளை  கொட்டும் மெஷின் போல பணம் கொட்டும் மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என...  அதன் பின்னர் முழு ஈடுபாட்டுடன் உழைத்து இவர் கண்டுபிடித்த ATM மெஷின் முதன் முதலில் ஜூன் 27 1967 லில்  லண்டன் BARCLAYS  வங்கியில் நிறுவப்பட்டது.  அப்படியே, அவர் மனைவிக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் ஜான் முதலில் ATM  பாஸ் வோர்டை 6  இலக்க  எண்களாகத்தான்  தான் உருவாக்கினார். ஆனால் அவர் மனைவிக்கு முதல் 4  இலக்க எண்கள் மட்டுமே ஞாபகம் இருந்ததால் 4 இலக்க எண

செக்கிடோ

Image
பீட்டர் பெஞ்சமின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப்டிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர். மருத்துவ   ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம் , ஆயிரக்கணக்கில் வெற்றிகரமான SRS சர்ஜரிகள். மருத்துவ துறையின் வாழ்நாள் சாதனையாளர் , மொத்த புகழும் இப்போது காணாமல் போக போகிறது...ஒரே ஒரு சின்ன தப்பு , தான் புதிதாய் கண்டுபிடித்த மருந்தே தமக்கு இப்போது வேட்டு வைக்க போகிறது. மருந்தின் முழு தாக்கத்தையும் உணராமல் மூன்று நபர்களுக்கு செலுத்தியது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. அவரது உதவி டாக்டர் ஸ்டீபன் கதவை திறந்து கொண்டு உள் நுழைய , பீட்டர் பரபரப்பானார். "ஸ்டீபன்" அந்த மூன்று பேரது முகவரிகளையும் கண்டறிந்து விட்டாயா , இன்னும் இரு தினங்களுக்குள் அவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாக வேண்டும்"   " நிச்சயம்   டாக்டர்"   அந்த மூவர்க்கும் மெயில் அனுப்பி விட்டேன். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்றைக்குள் பிடித்துவிடலாம்". " நல்லது , பிரச்சனை வெளியில் தெரிவதற்கு முன் இதை தீர்த்தாக வேண்டும

சிங்கம் - இசை விமர்சனம்

Image
  "ஆறு"க்கு  பிறகு  தேவி ஸ்ரீ பிரசாத், ஹரி, சூர்யா கூட்டணி இணைந்திருக்கும் படம். ஒரு மசாலா படத்திற்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார் DSP. ஆல்பத்தில் குறிப்பிட வேண்டிய பாடல், பாபா சீகல் குரலில் வரும் " காதல் வந்தாலே" . இது வில்லு பட " வாடா மாப்பிளை" யின் அச்சு அசலான காப்பி  என்றாலும்  ரிதத்திலும், வித்தியாசமான இன்ஸ்ட்ருமேண்ட்டல்  தேர்வும் நம்மையும் அறியமால் தாளம் போட வைக்கிறது. நிச்சயம் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும்.  சாதாரணமான மெட்டு கூட சுசித்ரா பாடும் போது கொஞ்சம் ஸ்பெஷல் ஆகி விடுகிறது. ஹஸ்கி வாய்சில் அவர் பாடும் " என் இதயம்"   பாடல் அவரின் குரலுக்காக கேட்கலாம்.  ராகங்களை வளைத்து, நெளித்து, குழைத்து படுவதில் "ஷான்" ரொம்பவுமே பிரபலம். "SHE STOLE MY HEART" பாடலில் அதற்க்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் வெஸ்டர்ன் சாயல் இசையும், வேகமான கிட்டார் நோட்டுகளும் ரசிக்க வைக்கிறது.  DSP ராக்ஸ்.. , கற்க கற்க பாடலை போல ஒரு போலீஸ் ஆபிசரின் திறமைகளை பற்றி பாடும் " சிங்கம் சிங்கம் " வேகமான மெட்டும், DSP  குரலும் ப

DONT MISS THIS VIDEO - INDIAN STRENGTH

ஒற்றுமை எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்தும் அட்டகாசமான வீடியோ இது. ஷங்கர் மகாதேவன் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் போது நம்மையும் அறியாமல் உடல் சிலிர்ப்பதை உணருங்கள்.

பானா - இசை விமர்சனம்

Image
யுவனின் துள்ளல் குரலில் ஆரம்பிக்கும் "தாக்குதே" பாடல் ஆல்பத்தில் அழகான காதல் பொக்கே.  நா.முத்துக்குமார் வரிகளில் சர்க்கரை தடவிய சுவை. " ஒரு பைத்தியம் பிடிக்குது " கார்த்திக்கின் குரலில்  ஒரு வித வசீகரத்துடன் ஆரம்பிக்கிறது    ஆனால் சரணம் மிக மெதுவாக செல்வது மைனஸ். காதல் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  யுவன்  ஐட்டம் பாடல்களுக்கு கொடுப்பதில்லை. " உள்ளார பூந்து பாரு " ஒரு AVERAGE ஐட்டம் சாங். ஸ்ரேயா கோஷல்  குரலில் " என் நெஞ்சில்" பாடல் ஒரு சோலோ லவ் சாங். மென் சோக குரலும், வரிகளும் காதலின் வலியினை  எளிதாக உள் புகுத்திவிடுகிறது. " குப்பத்து ராஜாக்கள்" படத்தின் ஆரம்ப பாடலாக இருக்ககூடும். கேட்கலாம்.  லோ பட்ஜெட் படம் போல இது லோ பட்ஜெட் இசை. எல்லா பாடல்களிலும்  ரொம்பவுமே எளிமையான ARCHESTRATION. யுவனின் முந்தைய ஆல்பத்தோடு (பையா) ஒப்பிடும்போது இதில் யுவனின் பாதி அளவு திறமைதான் வெளிப்பட்டிருக்கிறது.  VERDICT : 2 .5  STARS

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - விமர்சனம்

Image
புளித்த மசாலா தோசைகளையே சாப்பிட்டு கொண்டிருந்த நமக்கு, தமிழ் ஸ்டைலில் சிம்பு தேவன் பரிமாறியிருக்கும்  ஒரு அமெரிக்கன் சாண்ட்விட்ச் தான் இ கோ மு சி.  இது ருசி மிகுந்ததா, ருசி குறைவா என்பதை பின்னால் பார்க்கலாம்.  ஏறக்குறைய மறந்துவிட்டிருந்த கௌபாய் கலாச்சார கதைகளை திரையில் கொண்டு வந்தமைக்காகவும், இந்த கால குழந்தைகளுக்கு அதை அறிமுகம் செய்து வைத்ததற்கும் சிம்புவுக்கு முதலில்  ஒரு சபாஷ்.   அநியாயம் செய்யும் வில்லன், அதை தட்டி கேட்கும் புரட்சி  ஹீரோ, ஆள் மாறாட்டம், இடையில் ஒரு காதல், கிளைமாக்சில்  புதையல் வேட்டை என தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கதையே, கௌபாய் மக்கள், குதிரைகள், சுழலும் துப்பாக்கிகள்,  செவ்விந்தியர்கள் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஒரு நேரடியான காமெடி படம் அல்ல . BLACK HUMOUR வகையே சார்ந்தது. கசப்பு  மருந்தை வாழை பழத்தில் வைத்து தருவதை போல    சமூக கருத்துக்களை நகைச்சுவை போர்வையில்  சொல்லியிருப்பதில்  இயக்குனர்  சிம்பு தேவன் வித்தியாசப்பட்டு தெரிகிறார். முக்கியமாக அணு குண்டு  ஒப்பந்த காட்சியில்,  நாம் அமெரிக்காவுடன்  முட்டாள் தனமானமாக செய்த அணு ஆயுத ஒப

ராவண் - ராவணன் - இசை விமர்சனம்

Image
  மொசார்ட் ஆப் மெட்ராஸ் இன் அடுத்த சிக்ஸர். இந்தியில் பாடல்கள் வெளியானவுடனேயே அதை பற்றி எழுத  விரல்கள் துடித்தது. தமிழில் வரும் வரை காத்திருந்து இதோ, ராவண் - ஒரு இசை அனுபவம்.  BEERA BEERA  - விஜய் பிரகாஷின் கம்பீர குரலில்,  இதுவரை கேட்டிராத இசை கருவிகள் உற்சாக அருவியாய் கொட்ட, கேட்டவுடன் பிடித்து போகிறது... இந்த வருடத்தின் MOST WANTED SONG  நிச்சயம் இதுதான்.  அருமையான  ஒரு  ENERGETIC SONG . BEHNA DE  - வரிகள் புரியாவிடினும், காதலின் வலியே கார்த்திக்கின் குரலில் நன்கு உணர முடிகிறது.  பாடல் முழுதும் ரஹ்மான் சாரின்  சின்ன சின்ன மேஜிக்கல் டச் பரவி இருக்கிறது.  THOK DE KILLI -  சுக்விந்தர் சிங்கின் கணீர் குரலில், மற்றுமோர் ENERGETIC SONG. மெட்டும், அர்க்கேஸ்ட்ரேஷனும், வித விதமாய் சரணத்தில் வரிகள் நீளும் அழகும் உலக தரம். RANJHA RANJHA -   ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ரீனா பரத்வாஜின் போதையேற்றும் குரல் நம்மை  ஒரு ரொமாண்டிக் மூடிற்கு அழைத்து செல்கிறது. ஜாவித் அலியின் குரலும் கச்சிதம். திரும்ப திரும்ப கேட்க தூண்டும் மெட்டும் இன்னொரு  பிளஸ் பாயிண்ட். KHILI RE   - கொஞ்சம் மெ

திருமலை திருப்பதி - ஒரு பரவச அனுபவம்

Image
  இரண்டு நாள் விடுமுறையில் பெருமாளை சேவிக்க திருப்பதி  சென்று வந்தது  பல்வேறு அதிர்வலைகளை மனசுக்குள் ஏற்படுத்தியது.  பெருமாளை வழிபட எத்தனையோ கோவில்கள் உண்டென்றாலும் திருப்பதி சம்திங் ஸ்பெஷல்.  பெருமாளுக்கும் நமக்கும் ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் இடம் போல விளங்குவதுதான் இதன் சிறப்பு. வருடம் முழுதும் பெருமாள் இங்கு படு பிஸியாக இருக்கிறார். ஆரம்ப காலத்தில் தரிசனம் செய்யும் முறைகளிலிருந்து இப்போது நிறையவே நவீன படுத்தப்பட்டு இருக்கிறது. நம்முடைய ஊரிலிருந்தே தரிசனம் செய்யும் நேரத்தை முன் பதிவு செய்து விட்டு வரலாம். (TTD- THIRUMALAI TIRUPATHI DEVASATANAMS  முக்கிய ஊர்களில்  இந்த  சேவையினை வழங்குகிறது. )  இணையத்தில் கூட  முன் பதிவு செய்யலாம். அப்படி இருந்தும் நாள் முழுக்க காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம் இங்கு மிக அதிகம். நாங்கள் சென்ற இந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் திருமலையில், ஓய்வெடுக்க அறைகள் கிடைக்காமல்,  கோவிலை சுற்றியுள்ள  பாதைகளிலும், மரத்தடிகளிலும்,  தங்கி  உறங்குவதை பார்க்கும் பொழுது  அவர்களது பக்தியின் அளவீடு மலைக்க வைக்கிறது. தரிசனத்திற்கு

சுறா - திரை விமர்சனம்

Image
ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. SOME THING IS BETTER THAN NOTHING NOTHING IS BETTER THAN NONSENSE அதாவது, வெறுமனே சும்மா இருப்பதற்கு எதாவது படம் பார்த்து விமர்சனம் செய்யலாம். அதி பயங்கர மொக்கை படம் பார்த்து தலை வலியோடு விமர்சனம் செய்வதற்கு சும்மாவே இருந்து விடலாம். இதை நான் அமோதிக்கிறேன். பதிவர்களும், விமர்சர்களும்  இந்த படத்தை கிழித்து தொங்க போட்ட பிறகும் இந்த படத்தை பார்ப்பது எனக்கு நானே ஆப்பு வைத்து கொள்வது போல... SO இந்த படத்திற்கு இந்த விமர்சனமே போதுமானது. விஜய் படத்தில் உலக சினிமாவிற்கு ஒப்பான விஷயத்தையோ, நல்ல கதையையோ எதிர்பார்ப்பது நம்முடைய தவறு. அடுத்த படத்திலாவது திருந்துவரா என எதிர்பார்ப்பதும் அப்படியே.  நம் உடலும், உள்ளமும் நலமாக இருக்க இப்படிப்பட்ட பட போஸ்டர்களை கூட  பார்க்காமல்  தவிர்ப்பதே உத்தமம்.  பின்குறிப்பு : சத்தியமாக நான் அஜித் ரசிகன் அல்ல. நல்ல சினிமாக்களை பார்க்க துடிக்கும் சராசரி ரசிகன் அவ்வளவே...