Posts

Showing posts from April, 2010

கிரிக்கெட் காதலன்

Image
மூர்த்தி வெகு அலட்சியமாய் பபிள் கம்மை மென்றபடி சுற்றி நிற்கும் பீல்டிங் வளையத்தை கண்களால் அளந்தான். லாங் OFF , லாங் ஆன் இரண்டு புறமும் பீல்டர்கள் ஆணி அடித்தது போல நிற்க, எதிரணி கேப்டன்  மேலும் இருவரை லெக் சைடில் நிற்க வைத்து பாதுகாப்பு அரண் அமைத்தான். இரண்டே பந்துகள் 10 ரன்கள் தேவை. கடைசி பந்தில் மூர்த்தி அடித்த பவுண்டரி ஆட்டத்தை சூடு கிளப்பி வைத்திருக்க மொத்த கூட்டமும்  கண் இமைக்க மறந்து நகம் கடித்தது.. அந்த பௌலேர் உள்ளங்கை வியர்த்திருக்க , தரையில் கைகளை தேய்த்து கொண்டான். கேப்டன் அவனிடம் தீவிர ஆலோசனை செய்து  அவன் முதுகை தட்டி கொடுத்து உற்சாக படுத்த,  அந்த பௌலேர் சற்றே நிதானித்து.. சீராக அடி எடுத்து விக்கெட்டை நோக்கி ஓடி வர.. மூர்த்தி ஒரு முறை உடலை குலுக்கி ரிலாக்ஸ் செய்து கொண்டான். அந்த பௌலேர் சரியான லைன் அண்ட் லென்த்தில் விக்கெட்டிற்கு நேராக அசுர வேகத்தில் எரிய.. மூர்த்தி விடு விடுவென  ஸ்டெம்ப்பை கடந்து திரும்பி நின்று .. கிட்டத்தட்ட தற்கொலைக்கு இணையான ஷாட் அது..  நேராக கீப்பரின் தலைக்கு மேல் பந்தை அறைந்து  அனுப்ப.. அது இரட்டை வேகத்துடன் எல்லை கோட்டை தாண்டி சிக்சராக மாறியது. மைதானம

பலே பாண்டியா - இசை விமர்சனம்

Image
புகை பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்படம். தேவன் எகாம்பரம் இசை இந்த படத்திற்கு துருப்பு சீட்டா இல்லையா என்பதை பார்க்கலாம்.  "சிரிக்கிறேன்" பாடல்  கானாவும், ராப்பும், வெஸ்டர்னும் இணைந்த ஒரு கலக்கல் காக்டெயில். தாளம் போட வைக்கும் மெட்டுடன் தொடங்கும் பாடல் சரணத்தில் திக்கு திசையின்றி அலைகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த வருட  ஹிட் லிஸ்டில் சுலபமாக இடம் பிடித்திருக்கலாம்.  உன்னி கிருஷ்ணன், மிருநளினி குரல்களில் "கண்களே கமலாலயம்" மென்மையான காதல் டூயட். இருவரது குரல்களும்  மனசுக்குள் புகுந்து என்னவோ பண்ணுகிறது. அதை போலவே "ஆறாத கோபமில்லை" பாடலும், தனிமையில் இரவில்  ஐ பாடில் கேட்க நல்ல சாய்ஸ் இந்த இரண்டு பாடல்களும். "ஹாப்பி" பாடல் வித்தியாசமாக இருந்தாலும் மெட்டில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திஇருக்கலாம்.  " இவன் தேடல் ", " பலே பாண்டியா " என மற்ற இரண்டு பாடல்களும் சுமார் ரகம். சிரிக்கிறேன் பாடலிலும், இரண்டு மெலடிகளிலும் நம்பிக்கை அளிக்கிறார் புது இசையமைப்பாளர் தேவன். VERDICT  : 2 .4  STARS

PHOONK 2 - விமர்சனம்

Image
ராம் கோபால் வர்மாவின் சிஷ்ய பிள்ளை இயக்கிய படம்.  ட்ரைலரையும்  முதல் பாகத்தையும்  நம்பி உள்ளே போனால் இருக்கிறது பெரிய ஆப்பு.  பாழடைந்த பங்களா, அங்கு குடி வரும் குடும்பம், இரண்டு குழந்தைகள், ஒரு வேலைக்காரி, சந்தேகத்திற்கிடமான தோட்டக்காரன். சுற்றிலும் எந்த வீடுமில்லாத தனிமை.  மெல்ல நின்று நின்று நகரும் கேமரா, பீதியே கிளப்பும் பின்னணி இசை  என எல்லா பேய் படங்களிலும் வரும் பார்முலா அட்சரம் பிசகாமல் இதிலும் இருக்கிறது.  வா அருகில் வா, 13ம் நம்பர் வீடு, உருவம், என எல்லா படங்களிலும் இருந்து காட்சிகளை சுட்டது போல மிக அரத பழசான திரைக்கதை.  முதற் பாதி முழுதும் வீட்டை ஒரு அங்குலம் விடாமல் சுற்றி சுற்றி வருகிறார்கள்....,  தீடிர்  தீடிரென கருப்பு நைட்டியில், தலை விரி கோலமாய், முகத்தில் கருப்பு பெயிண்ட் அடித்து ஒரு பெண்ணை காட்டுகிறார்கள். அவர்தான் பேயாம். அதை பார்த்ததும் நாம் பயந்து விட வேண்டுமாம், போங்கடா டேய்...இதெல்லாம் 20 வருசத்துக்கு முன்னாடியே  தக்காளி சீனிவாச அண்ணன் படத்தில பார்த்தாச்சு... இரண்டாம் பாதியில் சம்பந்த சம்பந்தமே இல்லாமல் இழவு மேல்  இழவாக விழுகிறது... எவன் சாகிறான், எதுக்கு ச

தோனி அடித்த அடி - IPL SPECIAL

Image
 நல்ல கிரிக்கெட் தெரு முனையில் விளையாடப்பட்டாலும் நின்று ரசிப்பவன் நான். ஆனால் IPL போட்டிகளை ஆரம்ப காலங்களில் நான் விரும்பவில்லை. காரணங்கள் ஒன்றல்ல நூறு.  கபில் தேவ் என்னும் சாதனையாளன் புதிய கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதற்காக ICL என்று ஒரு அமைப்பை தொடங்க, அதை முடக்க அவசர அவசரமாக உருவாக்கியதுதான் IPL . கபிலுக்கு மீடியா சப்போர்ட் ஏதும் இல்லை. நவீன மைதானங்கள் கிடைக்க வில்லை. பிசிசிஐ யுடன் அரசியலும் சேர்ந்து விளையாட ICL ஓரம் கட்டப்பட்டது. அந்த பார்முலாவை அப்படியே காப்பி அடித்து IPL  இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.  ரெண்டாவது, கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக விளையாடாமல் பணத்திற்காக விளையாடுவது. இப்போதெல்லாம் தேசிய அளவில் விளையாடுவதற்கு  கூட யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. வருடம் ஒருமுறை IPL சீசனில் பங்கேற்றாலே போதும். கோடிகணக்கில் வருமானம்.டப்பு மாமே டப்பு. மூன்றாவது நாட்டுப்பற்று. கிரிக்கெட்டை இந்தியன் ஓவ்வொருவனும் நேசிக்க  அதனுடன் இணைந்த தேசிய பற்றும் ஒரு முக்கிய காரணம். பாகிஸ்தானுடன் விளையாடும் போதெல்லாம் இரண்டுபடி அதிகமாகவே ரத்தத்தில் சுரக்கும். IPL போட்டிகளில் அதற்க்கெல்லாம் வாய்ப்பே இல

வாடா, அம்பா சமுத்திரம் அம்பானி - இசை விமர்சனம்

Image
  வாடா. படத்திற்கு ஒரு பாடல்  மட்டும் ஹிட் கொடுக்கும் இமான் இதில் " மெஸ்மரிசம் " என்னும் பாடலில் மெஸ்மரிசம் செய்கிறார். நல்லதொரு ரொமாண்டிக் டூயட் இது. மகா கவி பாரதியின் "அக்னி குஞ்சொன்று கண்டேன்"  ஷங்கர் மகா தேவனின் குரலை ஒத்த MLR கார்த்திகேயன் குரலில் கவர்கிறது. பாரதியின் வரிகளுக்காக கேட்கலாம். ஆனால் சுந்தர் C படத்தில் இந்த பாடலா என்பதுதான் பீதியே கிளப்புகிறது. பாடலின் பின்னணியில் சுந்தர் C பிகினியில் ஓடும் ஹீரோயினை மணல்  தெறிக்க துரத்தாமல் இருந்தால் கோடி புண்ணியம்.  சுந்தர்.C,  இமானின் பரம்பரை பழக்கமாக ஒரு ரீ-மிக்ஸ் . "என்னடி ராக்கம்மா " இந்த ரீ மிக்ஸ் கலாச்சாரத்தை இவர்கள் விடவே மாட்டார்களா.?   மற்றபடி எண்ணிக்கைக்கு பாடல்கள் அவ்வளவே...  VERDICT  : 2 STARS ------------------------------------- அம்பா சமுத்திரம் அம்பானி   கருணாசின் இசை அவதாரம்.. "பூ பூக்கும் தருணம் " கருணாசின் பழைய பக்கா பாப் சாங். அப்படியே இந்த படத்திற்காக உருவியிருக்கிறார். ஆல்பத்தில் இந்த பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்றவை.. ம்ம்ம்ஹூம்.  இதில் கொடுமை என்னவென்ற

மதராச பட்டினம், கோரிப்பாளையம்- இசை விமர்சனம்

Image
மதராச பட்டினம் அறிமுக படத்திலேயே அசத்தலான பெயர் வாங்கிய G .V  பிரகாஷ் அந்த பெயரை காப்பாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.  பீரியட் பிலிம் என்பதாலோ என்னவோ இசை கருவிகளில் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கும் பிரகாஷ் பச்சக்கென கேட்டதும் ஒட்டிக்கொள்ளும் மெட்டுக்களை போட்டிருந்தால்...அவருக்கு இது ஒரு முக்கியமான ஆல்பமாக அமைந்திருக்கும்.  "பூக்கள் பூக்கும் தருணம் " ரூப் குமார் ரத்தோட் குரலில் அழகான மெலடி. ஆல்பத்தில் சிறப்பான பாடலும் இதுவே. "வாம்மா துரையம்மா" பாடலில் எப்போதும் தமிழை கடித்து தின்று துப்பும் உதித் நாராயண் கொஞ்சம் புரியும் படி பாடியிருப்பது ஆறுதல். M.S.V., சீயான் விக்ரம், நாசர் சேர்ந்து பாடியிருக்கும் "மேகமே" கேட்க கேட்க பிடிக்கலாம். தமிழில் மிக சிறப்பான பாடகர்கள் இருந்தாலும், ஏன் வட இந்திய பாடகர்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஆல்பத்திலும் பெரும்பாலோர் ஹிந்தி பாடகர்கள். ஹிந்தியில்  முக்கிய பாடகரான சோனு நிகாம் தமிழில் "ஆருயிரே" என்பதற்கு பதிலாக "ஹருயிரே" என்கிறார்.  முடியல... பாடல்கள் நீளம் அதிகம

என்னுயிர் காதலிக்கு...

Image
பார்க்கும் பெண்கள் எல்லாம் உன்னை ஞாபகபடுத்தினாலும்... உன் வெட்கம் கலந்த புன்னகை யாருக்கும் வாய்க்காதது.. அதில் மிளிரும் காதல் எனக்கானது என்பதில் எனக்கு சற்று கர்வமே. .. நீ பேசும் போது உன் முக பாவங்களையே ரசித்துக்கொண்டிருப்பதால் வேகமான ரயில் பெட்டிகளை போல கடந்து விடுகிறது நீ சொல்லி சென்ற விஷயங்கள்....  நீ அதை திருப்பி கேட்கும் பொழுது அசடு வழிவதில் உள்ள சுகம் ... சொர்க்கம் .  குறுந்தகவல்களில் கொஞ்சி பேசும் நீ... நேரில் பார்க்கும் போது மௌனமாகி விடுகிறாய்... உள்ளுக்குள் கெஞ்சுகிறேன் நான்.. ஒரு முறையாவது கொஞ்சேன்....! வேறு பெண்களை பற்றி சிலாகித்து  பேசும்பொழுது.. பார்வையால்  எரிக்கிறாய் நீ ...  சுகமாய் எரிவது நானும்....  சுட்டேரிந்து போவது.. பாவம் அந்த பெயர் தெரியா பெண்களும்..   பின் சீட்டில் அமர்ந்து என் தோள்களை இறுக பற்றிகொள்ளும் போது.. நான் த்ராட்டிலை திருகும்  வேகத்தில் தெறிக்கின்றன நமக்குள்  இருக்கும்  காதல்களும்... மறைந்திருந்த   உற்சாகங்களும்.. .. உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறேன்..  உன் உதடுகளுடனான சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கின்ற பேராசை

டாக்டர்.குண்டு ராவ், M.B.B.S

Image
  "ஐயோ" என  இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வெளியேறிய என் கூக்குரல் என் வீட்டை கடந்து இரண்டாவது தெரு திருப்பத்தில் நுழைந்து  கரைந்தது. மாவு அரைக்கும் மெஷினை ஒத்த குறட்டை ஒலியுடன் தூங்கிகொண்டிருந்த   என் மனைவி கட்டில் அதிர எழுந்தமர்ந்து  நீண்ட பெரு மூச்சுடன் என்னை முறைத்தாள். "ஏன்னா  இப்படி தினம்  அலும்பு பண்றேள், ராத்திரியில் கூட இந்த பொம்பளை அவ புருஷனை போட்டு அடிச்சு கொடுமை பண்றாள்னு பக்கத்தாத்துல இருக்கறவா எல்லாம் என்னை சந்தேகமா பாக்கறா... " "முடியலேடி ரமா... வலி பிராணனை போறது..." இந்த பைல்ஸ்  இப்படி படுத்தும்னு நினைக்கல..." "நல்ல டாக்டர் கிட்ட காட்டுங்கோன்னு சொன்னா  கேட்க மாட்டேன்கறேள். ரோட்ல போறவன்கிட்ட காசு குறைச்சல்னு  களிம்பு வாங்கி தடவினேள்...இப்போ பாருங்கோ அப்பளம் போல பொரிஞ்சு கிடக்கு" மருத்துவமனை செல்வது என்பது ஆதி காலத்தில் இருந்தே எனக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது... அதன் டெட்டால் வாசமும், வலி நிரம்பிய முகங்களும் என்னை மருத்தவமனையே விட்டு நூறு அடி தள்ளியே வைத்திருந்தது. ஆனால், இனிமேலும் முடியாது. பின் புறத்தில் சிவப்பு வி

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....

Image
பழனி -  தமிழ் கடவுள் குடி கொண்டிருக்கும் புண்ணிய  ஸ்தலம்.  தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம். வருடத்திற்கு 70 லட்சம் மக்கள் வந்து வழிபடும் இடத்தில் பக்தர்களிடம் வழிப்பறி கொள்ளை போல நூதன முறைகளில் பணம் பிடுங்கும் செயல்கள் இங்கு அதிகம். நமக்கு ஒரு கஷ்டம்னா, மன நிம்மதிக்காக  கோயிலுக்கு போறோம். ஆனா அங்க போனா...  ஊர்ல இருக்கிற அத்தனை கஷ்டமும் சுத்தி நின்னு டான்ஸ் ஆடினா எப்பிடி இருக்கும். அந்த நிலைமைதான்.. இங்கு வர்றவங்களுக்கு... முடிந்த வரை எச்சரிக்கையாக இருக்க சில குறிப்புகள். வழிப்பறி # 1   எதாவது ஒரு கடையில போய் பூஜை சமான் எல்லாம் வாங்கறீங்க, எல்லா பொருட்களையும் PACK  பண்ணி கொடுத்துட்டு, 150 ரூபாய் சார் என்று சொல்லியபடியே அனுமார் வால் போல நீளமான ஒரு லிஸ்டை கொடுப்பார். லிஸ்டை CHECK  பண்ணாமல் பணம் கொடுத்தால்.. பணம் போயே போச்.. ஒருவேளை நீங்கள் லிஸ்டை CHECK செய்தால்.. உங்களுக்கு உங்கள் தமிழ் மொழியே மறந்து போக கூடும். சாம்பிளுக்கு ஒரு லிஸ்ட்.  பூ         -   XXXXX  பழம்   -   XXXXX  சூடம்   -  XXXXX  விபூதி - XXXXX கனி      - XXXXX வாழை - XXXXX தேங்காய் - XXXX ஊது பத்தி - XXXX எலுமிச்சை -XX

பையா - விமர்சனம்

Image
லிங்கு மீது எனக்கு ஒரு விதமான பயம் உண்டு. ரன், சண்டை கோழி போன்ற பரபரக்கும் படங்களை கொடுத்து கை தட்டவும் வைப்பார். அதே சமயத்தில் ஜி, பீமா போன்ற படங்களை  கொடுத்து சீட்டை பிராண்டவும் செய்வார். ஆனால் இம்முறை ஒரு CLEAN ENTERTAINMENT கொடுத்திருக்கிறார். தமிழில் ROAD TRIP  படங்கள் மிக குறைவு.  லிங்குவின் இந்த பயணம் ACTION, சேஸிங், காதல், என எல்லா தளங்களிலும் பயணிக்கிறது. பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். எதிர்பாராத ஆச்சர்யங்களையும்  புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை யாருக்குதான் பிடிக்காது. தான் நேசிக்கும் பெண்ணுடன் நீண்ட பயணம் செய்யும் வாய்ப்பினை பெற்ற இளைஞன்  சந்திக்கும் சவால்களும்,   சாகசங்களுமே கதை. அதில் காதலை சர்க்கரை தடவி கொடுத்திருக்கிறார்கள்..  பெங்களூரில் பார்த்த முதல் பார்வையில் காதல் வயப்படும் கார்த்தி, பிடிக்காத கல்யாணத்திலிருந்து தப்பித்து மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் சேர துடிக்கும்  தமன்னா.  இருவரையும்  விதி,  பயணம்  என்னும் ஒரு புள்ளியில்  இணைத்து வைக்க, பின்னால் துரத்தும் வில்லன்கள் கூட்டம், சேஸிங் என ஆக்சிலேட்டரை அட்டகாசமான டெக்னிக்கல் சமாச்சரங்களுடன்