Posts

Showing posts from March, 2011

நான் ஏன் தொடர் கொலைகாரன் ஆனேன்.... ?

Image
கவனிக்க : உயிர் வதை காப்பாளர்கள்  இந்த கட்டுரையே தவிர்ப்பது நலம்.  இரவு.... ரம்மியமானது.... பகலின் உஷ்ணத்தையும்... வியர்வை வீச்சுக்களையும் கடந்து வரும் இரவானது எல்லாருக்கும் பிடித்தமானது... எனக்கும்! ரகசியம் சொல்லும் காதலி போல் நிலா அருகில் இருக்க... இளையராஜாவோ, ரஹ்மானோ... இசையாய் செவி நுழைந்து மனம் தொட....அதை  தொடர்ந்து வரும் தூக்கமும் வண்ணங்களை பகுத்தறியமுடியாத கனவுகளும் ஒவ்வொருவருக்கும் வரம். கிட்டத்தட்ட  பூலோக சொர்க்கம்.எங்கேயோ கேட்கும் ரயில் ஓசை,  குளிர் நெருங்கும் போதெல்லாம் போர்வையில் ஒளிந்து கொண்டு கதகதப்பாகும் உடல், கண்களை உறுத்தாத இருள் என இரவு எப்போதுமே ஒரு கவிதை. தினம் தினம் புதிதாய் வாசிக்க தூண்டும் கவிதை.  அனால் இப்போதெல்லாம்... இரவு நெருங்க நெருங்க மனசில் சொல்ல முடியாத அச்சம், படபடப்பு, கிட்டத்தட்ட மரண பயத்திற்கு ஒப்பான பீதி... நான் உறக்கம் தொலைத்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றது... இந்த இடைப்பட்ட இரவுகளில் எத்தனை ரத்தம்.... எத்தனை வலிகள்... எத்தனை உடல்கள்.. சென்னை தனக்குள் இப்படி ஒரு கோர முகத்தை வைத்திருக்கும் என்று நான்  கனவிலும் நினைக்கவில்லை.இவன் ரொம்ப நல்லவன் எ

தேகம் - புத்தக விமர்சனம்

Image
சென்னை புத்தக கண்காட்சியில் சாருவின் "தேகம்" வாழைக்காய் பஜ்ஜி போல சுட சுட விற்றுக்கொண்டிருந்தது. அப்போது என் நிதி  நிலைமை சற்று சிறப்பாக இல்லாத படியால் வாங்க முடியாமல் போய் விட்டது.  இடையில்... என் நண்பனொருவன்... புத்தகங்களின் மீது அதிகப்படியான ஈடுபாடு இல்லாதவன், என் தொடர் நச்சரிப்பின்  காரணமாக புத்தகம் படிக்க ஆரம்பித்து   சுஜாதா, கல்கி மூலமாக புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை நிறையவே வளர்த்திருந்தான். புதிததாய் கல்யாணமான தன மனைவியுடன் திருப்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றவன்... அங்கிருந்து செல்பேசியில்... என்ன புத்தகம் வாங்கலாம்... சொல்லுடா என்றான். நானும்.... இரண்டு மூன்று நல்ல சுஜாதா புத்தகங்களை சொல்லிவிட்டு... கடைசியாய்... சாருவின் தேகம் கிடைத்தால் வாங்கி படி..  ரொம்ப நல்ல இருக்குதாம் என்றேன். கணவன் மனைவி சகிதம் நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி.. தேடியலைந்து ஒரு வழியாய் 'தேகம்' வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறான். அன்றிரவே... எனக்கு போன்... எடுத்தால்... எழுத்தில் சொல்ல முடியாத தூய தமிழ் கெட்ட வார்த்தைகள் நான்கைந்தை சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.  இரண்டு நாட்களுக

நடு நீசி நாய்கள் - விமர்சனம்

Image
இப்படி ஒரு கப்பித்தனமான  படத்தை கௌதமிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கதை என்ற பெயரில் வக்கிரத்தை வாந்தி எடுத்து வைத்திருக்கும் அவரது இந்த படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு கருப்பு புள்ளி.  அதீத சகிப்புத்தன்மை,  வித்தியாச சினிமா மீதான காதல், போதுமான  தலைவலி மாத்திரைகள்  என, என்ன காரணங்கள்  உங்களிடம் இருந்தாலும் இந்த படம் உங்களுக்கு வேண்டாம். காரணம்.... மனித மனம் விலங்கு என்றாலும்.... மிருகமாகிவிடக்கூடது என்றுதான் நாம் வளர்க்க படுகிறோம்... நம் ஆறாவது அறிவும் அதைதான் பன்படுத்துகிறது... இந்த படம் நம்மை... நம் மனதை  மிருகமாய் மாற்ற செய்யும் ஒரு கூறுகெட்ட முயற்சி.   ரசனையான தலைப்பு, அட்டகாசமான மார்க்கட்டிங், கெளதம் மேனன் என்னும் லேபிள்,  என பலபேரை தியேட்டருக்கு உள்ளே வரவழைத்தாலும் வந்த வேகத்தில் பின்னங்கால் பிடரி அடிக்க ஓடவைக்கும் திரைக்கதையும், கன்றாவி காட்சிபடுத்தல்களும் போடங்..............தா என கௌதமிற்கு மிக பிடித்த வார்த்தையேயே நம்மையும் சொல்ல வைக்கிறது.  ஒரு வேளை, இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், நல்ல மனநல மருத்துவரை உடனே பார்க்கவும். (+) பிளஸ் ஒன்றுமே இல்லை (-) ம