Posts

Showing posts from March, 2010

சுறா - இசை விமர்சனம்

Image
 விஜய் பட பாடல்களின் வழக்கமான பார்முலாவில் இருந்து துளியும் விலகாமல் இருக்கிறது சுறா படத்தின் பாடல்களும். ஹீரோ துதி பாடும் ஓபனிங் சாங். மூன்று டூயட்டுகள், அப்புறம் அநியாயத்தை தட்டி கேட்க புறப்படும் ஹீரோவை உசுப்பேற்றும் புரட்சிகர பாட்டு. இறுதியில் ஹீரோயினின் திறமையே நாட்டுக்கு உணர்த்தும் குத்து பாடல் ஒன்று.  இதில் சோகமான விஷயம் என்னவென்றால்.. வேட்டைக்காரன் அளவிற்கு கூட  எந்த பாடல்களும் எளிதில் கவரவில்லை என்பதே.. எலெக்ட்ரிக் கிடாரின்  பீட்டோடு தொடங்கும்.."நான் நடந்தால் அதிரடி" ஓரளவிற்கு தேறுகிறது. "தஞ்சாவூர் ஜில்லாகாரி " ஏற்கனவே கேட்ட சாயல் இருந்தாலும் பரவாயில்லை, ரசிக்க முடிகிறது. மீதமுள்ள நான்கு பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. BELOW AVERAGE. மணி ஷர்மா இம்முறை  விஜய் காலை வாரி விட்டார் என்றே  தோன்றுகிறது. எனினும் சன் டிவி யின் உபயத்தாலும் , F . M  புண்ணியத்திலும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து பாடல்களை ஹிட்டடித்து விடுவார்கள்.காதுகள் பத்திரம். VERDICT : 1 .5 STARS   - உப்பு சப்பில்லாத  சுறா .

அங்காடி தெரு - விமர்சனம்

Image
 மனதுக்கு பிடித்த ஒரு ஷர்ட் - ஜீன்ஸ் எடுக்க எத்தனை நேரம் செலவழிப்போம் ? பொருளின் தரம் பற்றியும் அதன் விலை பற்றியும் அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கும் நாம், அதை தேர்வு செய்ய உதவிடும் கடை ஊழியர்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் கொஞ்சமேனும் நினைத்து பார்த்திருப்போமா...? பளபளக்கும், பிரம்மாண்டமான நுகர்வு கலாச்சாரத்திற்கு  முன் மொத்தமாய் அமுங்கி போகிறது அவர்களது  முகங்களும், அவர்களின்  வேதனையான தினசரி வாழ்கையும். பிளஸ் டூ வில் பள்ளியில் முதலாவதாக வரும் ஜோதி லிங்கம் (அறிமுகம் மகேஷ்), விபத்தொன்றில் தனது தந்தையே இழக்க,  குடும்ப பொறுப்பின் காரணமாய் T - நகர் ரங்கநாதன் தெருவிலிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் தனது நண்பன் மாரி முத்துவுடன் வேலைக்கு சேர்கிறான். அங்கு அவன் சந்திக்கும் நிகழ்வுகளும், மனிதர்களும் அவ்விடத்தின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இடையில், அங்கு பணிபுரியும் கனியுடன் (அஞ்சலி) முதலில் மோதல், பின் காதல் என அதை தொடர்ந்து  நடக்கும் சம்பவங்களே கதை. பொளேர் என செவிட்டில் அறைகிறது... படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள்... பல் பொருள் அங்காடிகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள்  ந

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 4

Image
1 பொன்னியின் செல்வன் - அமரர்.கல்கி. தமிழின் மிக சிறந்த புதினம்... இப்போதும்... எப்போதும்... இன்னொரு நூல் இது போல என்றும் வருவதற்கில்லை. 1950 ல் எழுதப்பட்ட இந்நூல் பல தலை முறைகளை கடந்தும் அதன் கம்பீரம் மாறாமல் இன்னமும் விரும்பி வாசிக்க படுகிறது. பொன்னியின் செல்வன் ஒரு அபாயமான சுழல் போல... நம்மை அப்படியே  உள் இழுத்துகொள்ளும். ஐந்து பாகங்கள்.. தொண்ணுற்று ஒன்று  அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஒரு புதினத்தை ஒரே மூச்சில் படிக்க செய்திடும்  மந்திர எழுத்துக்கள். இரவு, பகல், தெரியாமல்... பசி, தூக்கம் மறந்து இந்த புத்தகமே கதி என கிடக்க வைக்கும் அனுபவம்  எனக்கு மட்டுமல்ல படித்தவர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். ஆச்சரியமான விஷயம்.. இப்போது நம் கைகளில் ஐந்து பாகங்களும் ஒரு சேர இருக்கிறது.. ஒரே மூச்சில் படித்து விடுகிறோம். அனால்.. இந்த கதை எழுதப்பட்ட காலத்தில், ஒரு தொடராக சுமார் 3 1/2 வருடங்கள்,  வாரம் ஒருமுறை நம் மக்கள் பொறுமையாய் காத்திருந்து படித்தது வியப்பான ஒன்று. வேறெந்த ஒரு தொடரும் லட்சகணக்கான மக்களை இவ்வளவு வருட காலம் வசீகரித்து வந்தததில்லை. வந்திய தேவன், அருள்மொழி,

காதலாகி...கசிந்துருகி...

Image
ஒரு சிறுவன் இருந்தான்... யதார்த்தமானவன் இயல்பை விட்டுக்கொடுக்கதவன்  அதிகம் கவலை பட தெரியாதவன்... சந்தோஷமாகத்தான் இருந்தான்.. வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள் என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்.. எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்.. சிறுமி சிரித்தாள் அவன் தலை கலைத்தாள் நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள் பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள்  உலகின் நீள அகலம் உணர்த்தினாள் அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள்  அவனின் இன்னொரு தாயானாள் அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள் அக்கறை மிகுந்தாள் தினம் அவனோடு விளையாடினாள் அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான்.  அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான்.  மழை பெய்தது.  அவன் கண்களில் உலகம் அழகானது.  சிறுமி ஒருநாள் வரவில்லை.  முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான்.  ஒருமுறை சரியாய் பேசவில்லை.  கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான்.  உன்னோடு "கா" ,  'இனி பேசாதே' என்றான். தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக்  கொட்டினாள் எல்லாம் மறந்தான்... தன்னையும் சேர்த்து.. இப்படி ஒவ்வொருமுறையும் '

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 3

Image
 4 . விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா  எங்கள் வாத்தியார் ஒரு  தீர்க்க தரிசி என்பதை பறை சற்றும் ஒரு அற்புதமான  சிறுகதை தொகுப்பு. 20 - 25 வருடங்களுக்கு முன்  கற்பனையாய் எழுதிய விஷயங்கள்  இப்போது நிஜத்திற்கு மிக அருகில். ஆங்கிலத்தில் மட்டுமே பழக்கப்பட்ட SCIENCE FICTION சமாச்சாரங்கள் முதன் முதலில் தமிழில், பிரமிக்க வைக்கும் எழுத்து நடையில் அமைந்த நூல் இது. இதில் வரும் "ஜில்லு" என்னும் சிறுகதை நிச்சயம் உங்களை தூங்க விடாது. 3 . ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் - சுஜாதா ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் ஒரு பொக்கிஷம். கதைகள் என்பதையும் தாண்டி ஒரு அழகான வாழ்வியல் அனுபவம். நமக்குள் ஒளிந்து கிடக்கும் நுண்ணிய உணர்வுகளை மயிலிறகு கொண்டு எழுப்புவதை போல  சிநேகமான எழுத்துக்கள். படிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு சேர சிரிக்கவும் வைக்கும், அதே சமயத்தில் கண்ணீர் சிந்தவும் வைக்கும் ஆச்சர்யம் இது. காதல், நட்பு, கடவுள், அரசியல், கிரிக்கெட் என எல்லா இடங்களையும் தொட்டு செல்லும் எழுத்து நதி இந்த புத்தகம். சாரலாய் தூறும் மழையில் நனைந்த படி உங்கள் மனம் பிடித்தவரின் கைகள் கோர்த்து நடக்கும் போது

ரெட்ட சுழி - இசை விமர்சனம்

Image
மிக  நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டு வந்திருக்கிறார் கார்த்திக் ராஜா.  பவதாரணி குரலை ஒத்திருக்கும் ரீட்டாவின் "பர பர பம் பம் காற்று"   மெட்டிலும்,  இசையிலும்,அக்மார்க் பழைய கார்த்திக் ராஜா ஸ்டைல். இருந்தும் நம்மை வசீகரிக்கிறது.  பட்டாளம் பாருடா... குழந்தைகள் பாடும் பாடல்... பெரிதாய் ஈர்ப்பு இல்லை.  ராகுல் நம்பியார், தீபா மரியம் பாடியிருக்கும் "பர பர கிளி " இந்த அல்பத்தில் கவனிக்கத்தக்க பாடல்.. மெலடி பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வரிகளும் அழகு. "பூச்சாண்டி " பாடல், ஹரிஹரன் குரலிலும், பெல்லி ராஜ் குரலிலும்  இருமுறை வருகிறது, சட்டென மனசில் ஒட்டாவிடினும் கேட்க கேட்க பிடிக்கின்ற ரகம். "நான் என்ற சொல்" ஹரி ஹரன் அவர்களுடய குரலில்   ஒரு மொக்கையான  சோக பாடல்...  அவ்வளவே.., ரெட்ட சுழி, ஒரு AVERAGE ஆல்பம். கார்த்திக் ராஜா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம். VERDICT : 2.5 STARS

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 2

Image
7 . நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்   நெடுங்குருதி.. யதார்த்தத்தின் மீதான ஒரு பிரம்மாண்டமான பயணம்.  இக்கதை மாந்தர்களோடு  சேர்ந்து நாமும் ஆறு பருவ காலங்களை கடக்கிறோம் வேம்பலை என்னும் ஒரு கனவுலகத்தில் நம்மையும் அறியாமல் அமிழ்ந்து போய் எது நிஜம் எது பொய் என பிரித்தறிய முடியா ஒரு தாக்கத்தை இப்புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தும். படித்து முடித்து பல நாட்கள் ஆகியும் அந்த சூழ்நிலையை விட்டு வெளி வர முடியாமல் தவிப்பதே இந்த புத்தகத்தின் வெற்றி. 6 . சொர்க்கம் என் பையில்  - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்       THE WORLD IN MY POCKET - 1959 வேகம், வேகம், கொலை வெறி பிடித்த வேகம்,  50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையா இது? படிக்க ஆரம்பித்தவுடன் பற்றிகொள்ளும் பரபரப்பு படித்து முடிக்கும் வரையிலும் விடாமல்  தொடரும்.... மில்லியன் கணக்கில் பணம் நிரம்பிய TRUCK. அதை கொள்ளையடிக்க முயலும் ஐவர். கற்பனைகெட்டா சாகசங்களும், திருப்பங்களும் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி இந்த புத்தகம்.  5.வந்தார்கள் வென்றார்கள்..  - மதன்.  பள்ளி நாட்களில் வரலாறு ஒரு போர் அடிக்க கூடிய சப்ஜெக்ட். இந்த புத்தகம் அந்த நாட்களில் கிடைத்திருந்

யாதுமாகி.. - விமர்சனம்

Image
விதி வலியது... வேறென்ன சொல்ல... தம்பிக்கு இந்த  ஊரு.. மாத்தி யோசி படங்களின் விமர்சனங்கள் ஏற்கனவே பீதியே கிளப்பியதால் மீதமிருக்கும் ஒரே OPTION யாதுமாகி..  நம்பி தியேட்டர்க்கு போனேன்பா... சும்மா 2.5 மணி நேரம்.... கதற கதற.. மொக்கை போடுறாங்க...  கதை... பொன்னேட்டில் பொரித்து வைக்க வேண்டிய கதை. ஹீரோ சமூக சேவை காரணமாக அடிக்கடி பிரச்சனையில் சிக்கிக் கொண்டு காடாறு மாதம், நாடாறு மாதம் என வசிப்பவர். அதாவது.. வீட்டில் 15  நாள். மேன்ஷன்  நண்பர்களுடன் 15 நாள். விளம்பர நிறுவனத்தில் PHOTOGRAPHER.ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பிரச்சனை காரணமாக பழைய மேன்ஷனில் இருந்து புது வீட்டிற்கு  குடி போகிறார். வீட்டு உரிமையாளர் மகள் நம்ம ஹீரோயின். ஹீரோயின் நம்ம ஹீரோவை ஒரு தலையாய் லவ்வுகிறார். நம் ஹீரோ, ஹீரோயினை அவரது வேண்டுகோளுகிணங்க எடுத்த புகைப்படம் ஒன்று அவரது விளம்பர நிறுவன சகா மூலமாய் உள்ளாடை விளம்பரங்களில் மார்பிங் முறையில் பயன்படுத்தபடுகிறது. இதை அறியாத ஹீரோ வீட்டில் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க.. லவ்வை சொல்லாத ஹீரோயின் மனமுடைந்து தன் தந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார். மீண்டும் ஒரு சம

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 1

Image
புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள  தொடர்பு, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் ஒரு அன்யோனியத்தை போன்றது . பொம்மையை இறுக்கி அணைத்து   தூங்கும்  குழந்தை போல புத்தகங்களோடு நான் நெருங்கி இருக்கின்றேன். புத்தகங்கள் எனக்கொரு உருவை, ஒரு தைரியத்தை, ஒரு தெளிவை தருகின்றன என்பதை நம்புபவன் நான். பின் வருபவை நான் மிக மிக நேசிக்கும் புத்தகங்களின் வரிசை. இதை விட மிக சிறந்த புத்தகங்கள் தமிழில் உள்ளன என்றாலும் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை மட்டும் இங்கே வரிசைபடுத்துகிறேன்.  10 . தண்ணீர் தேசம்  - வைரமுத்து.  கடல் பற்றிய ஆச்சரியங்களை அழகான காதல் கலந்து சொன்ன படைப்பு. கவிதை நடையில் ஒரு நாவல். திகட்ட திகட்ட தமிழ் கடலில் மூழ்கி எழுந்த அனுபவம் இந்த புத்தக வாசிப்பில் கிடைக்கும். கவிதை மூலமாகவே  ஒரு பரபரக்க வைக்கும் கதை சொல்ல முடியும் என்பதை வைரமுத்து அவர்கள் அழுத்தமாய் நிரூபித்த படைப்பு இது.  09 . பிருந்தாவனமும் நொந்த குமாரனும் - பி.கே.பி. நம்புங்கள், இந்த புத்தகத்தை 12 - 15  வருடங்களுக்கு முன்,  பழைய புத்தககடையில் இரண்டு ரூபாய்க்கு வாங்கி  படித்தேன்.  PKP அவர்கள் எத்தனையோ காதல் கதைகள், துப

TOUR SPOT - நெல்லியம்பதி

Image
 நெல்லியம்பதி - ட்ரக்கிங் பிரியர்களுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் ஒரு சேர ஏற்ற இடம். வருடம் முழுதும் ஒரு  ஐடியல் கிளைமேட் நிலவுவது (குளிர் காலத்தில்  - குறைந்த பட்சம் 15 டிகிரி. வெயில் காலத்தில் - அதிக பட்சம் 30 டிகிரி ) இதன் சிறப்பம்சம். சுற்றிலும் டீ எஸ்டேட்டுகள், இன்னமும் மனிதர்கள் காலடி படாத வனச்சிகரங்கள், தீடிர் ஆச்சரியங்களாக ஆங்காங்கே தென்படும் சிற்றாறுகள் என நெல்லியயம்பதி நிறைய சுவாரசியங்களை கொண்டிருக்கிறது... பாலக்காடு மாவட்டம் நெம்மரா டவுனிலிருந்து 25 KM  மலை பாதையில் அமைந்துள்ளது நெல்லியம்பதி. மலை அடிவாரத்திலேய நம்மை வரவேற்கிறது பொத்துண்டி அணை.     பொத்துண்டி அணை    19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக பழமையான இந்த அணை சிமெண்ட் ஏதுமின்றி வெறும் கற்களும், இரும்பு கலவைகளும் கொண்டு அமைந்தது.   ஆசியாவில் சிமெண்ட் இன்றி கட்டப்பட்ட 2  வது அணை என்ற பெருமை இதற்குண்டு. மாம்பாறை : நெல்லியம்பதியின் TOP MOST ATTRACTION  மாம்பாறை எனப்படும்  VIEW பாயிண்ட். கடல் மட்டத்திலிருந்து   5250 அடி உயரத்தில் அட்டகாசமாய் பச்சை கார்பெட் விரித்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது இயற்க

பிக் பாக்கெட்

Image
 பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே மழை பிடித்துக்கொண்டது.... அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடிகளை அடைப்பவர்களிடையே "அப்பா, அப்பா, மழை பார்க்கணும் ஜன்னலை மூடாதீங்க" என்கின்ற குழந்தையின்  கோரிக்கை அதட்டலுடன் நிராகரிக்கப்பட்டது . மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். மழை அமிர்தம், நனைதல் வரம் என்கின்ற வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது ...  படித்துறை தாண்டுவதற்குள் பேருந்து நிரம்பி வழிய, கண்டக்டர் வாய் ஓயாமல் எல்லோரையும் முன்னுக்கு வர சொல்லிகொண்டிருந்தார்... மழை நனைத்த கோழிகுஞ்சாய் ஒரு பாட்டி நடுங்கியபடியே இடம் தேட ... எழுந்து, அமர்வதற்கு இடம் கொடுத்தேன்.  எங்கே போகணும்...? டவுன் ஹால் .... ஒரு டிக்கெட்...  டிக்கெட் கொடுத்தவர்.... மீதி சில்லறை கொடுக்காமல் நகர, சார், ஐம்பது பைசா மிச்சம் கொடுக்கணும் என கேட்க தோன்றியது. கேட்கவில்லை.  கேட்க விடாமல் தடுத்தது    தாரளமா.. இல்லை யாராவது சிரிப்பார்கள் என்கின்ற கூச்சமா?  உள்ளுக்குள் புகைந்த கோபம் ஒரு கெட்ட வார்த்தையாய் சத்தமில்லாமல் வெளிப்பட....நகர்ந்து வந்து படியருகே நின்று கொண்டேன்... மழை சாரலை முகத்தில் வாங்கிக்கொண்டு திரும்பும் ஒரு அசந்தர்ப்பமான நொடியில்த

காதல் நுழைந்த வழி...

Image
ஒற்றையடி பாதையில்... நான் செல்வதற்காய் நீயும்... நீ செல்வதற்காய் நானும்... வழி விட்டு  நிற்க... அப்போது எந்த இடையூருமில்லாமல் அங்கு   நம் காதல் பயணித்தது தெரியுமா... !

உலகின் சின்னஞ்சிறு காதல் கதை...

Image
ஹாவென கொட்டாவி விட்டபடி தலையே திருப்பிய போதுதான் அவள் பேருந்துக்குள் ஏறி நான் அமர்ந்த திசை நோக்கி வர ஆரம்பித்தாள். என் கண்கள்  ட்யுப் லைட் போட்டது போல பிரகாசமாக... நடந்து வந்தவள் எனது பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.  அந்த பெண் மிக அழகாக இருந்தாள். மிக அழகாக இருந்தாள் என ஒற்றை வரியில் கூறி விடுவது அவள் அழகையும் எனது பழகு தமிழையும் அவமதிப்பது  போலாகிவிடும். எனவே அவளை பற்றி குறைந்தது நான்கு வரிகளாவது வர்ணிப்பது இங்கே அவசியமாகிவிடுகிறது.. மெல்லிய தேகம், சரித்திர நாவல்களில் வரும் பெண்களுக்கு இருப்பது போல நீண்ட நெடிய கருங்கூந்தல். அப்பழுக்கற்ற கண்கள்.. குப்தா ஸ்வீட்ஸ் குலோப் ஜாமுன்களை நினைவுபடுத்தும் சிவந்த கன்னம்..காதுகளில் சின்னஞ்சிறு ஜிமிக்கி. நெற்றியில் குங்கும தீற்று. கண்களை உறுத்தாத சுடிதார்..பஞ்சு கால்களுக்கு சுமை ஏற்படுத்தாத மெல்லிய கொலுசு.. நேர் வகிடு எடுத்து சீவிய தலையில் மல்லிகை பூ,  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற பேரிளம் பெண்களுக்குரிய குணங்கள் அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாய் போட்டு அடித்தது போல சாந்தமான முகம். லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்திருந்த உதடு, அதன் கீழே மெ

கிரிக்கெட் - தொடர்பதிவு

Image
  00   மிக மிக மிக மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர் -  சச்சின்... 1. பிடித்த கிரிக்கெட் வீரர்          யுவராஜ் சிங் : ஒரு அலட்சியம் கலந்த  BATTING ஸ்டைல்.... + 6 பந்துக்கு 6 சிக்சர் கொளுத்தி வான வேடிக்கை காட்டியதால்...     2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்   சைமன்ட்ஸ் &  பாண்டிங் : திமிர், செருக்கு, ஆணவம், அகங்காரம்,அகம்பாவம், கர்வம், தலைக்கனம்  (இன்னும் தமிழில் இது தொடர்பான எத்தனை வார்த்தைகள் உள்ளனவோ அத்தனையும் சேர்த்துக்கொள்க..)       3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்    ஷேன் பான்ட்   & ப்ரீட் லீ       : யப்பா எம்புட்டு வேகம்...     கர்ட்லி ஆம்ரோஸ்                   :  பந்து வீசும் போது அவர் கண்ல ஒரு கொலை வெறிய  பார்க்கலாம்..   வாசிம் அக்ரம்                              : 6 பந்தும் 6 விதமா வரும்.          4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் : முகத்தில் ஆக்ரோஷத்தை காட்டாத பிஞ்சு மூஞ்சி... (EXCEPT WORLD CUP QUARTER  FINAL WITH PAK)    5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்      அணில் கும்ப்ளே - மறக்க முடியுமா  - டெல்லி டெஸ்ட்... 10 விக்கெட்கள்