Posts

Showing posts from June, 2010

அய்யனார் - இசை விமர்சனம்

Image
குத்து பாட்டில் கூட வெஸ்டர்ன் டைப் இசையே மட்டுமே  கொடுத்து வந்த தமனுக்கு முதல் பரீட்சை. அய்யனார்  வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளையராஜாவின் உதவியோடு கொஞ்சம் சமாளித்திருக்கிறார். முதல் பாடலான, "குத்து குத்து"   முன் வரிசை ரசிகர்களை ஆட வைக்கும் குத்து எனினும், சரணம், கரகாட்டகாரன் "ஊரு விட்டு ஊரு வந்து" மெட்டில்  அட்சரம் பிசகாமல்  TRAVEL செய்வதை தமன் கவனித்திருக்கலாம்.   ஈரத்தில் ஐஸ் கிரீம் குரலில் செவிகளை நனைத்த ரஞ்சித் இதில்  பிரியதர்ஷினியுடன்  இணைந்து பாடும் "பனியே" ஒரு அழகான ஜில் ஜில் டூயட்.    பாடல் முழுதும் வரும் வயலின்கள் பீட்டும்,  ரகசியமான அந்த  ரொமான்ஸும் ரொம்ப அழகு. இதிலும் ராஜா சாரின் சாயல் வருவது ஏனோ..?  "ஆத்தாடி " தமனின் அடுத்த பட்டாசு.  கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைல் மெட்டும்,  கிராமிய காதல் வரிகளும்  கொண்ட ஒரு பக்கவான காக்டெயில்.   நவீனின் குரலில் இனி அடிக்கடி F .M களில் கேட்கலாம்.   ராகுல் நம்பியார் குரலில் வரும் " பச்சை கிளி" குடும்ப உறவுகளின் உன்னதத்தை சொல்லி செல்கிறது. கொஞ்சம் சுமாரான மெட்டுதான்.  புது புது கதை

நண்பனை இழந்து விட்டேன்.

Image
 நான்கு வருட சிநேகிதம் எங்களுடையது....பால்ய கால நண்பர்களை விடவும் மிக குறுகிய காலத்தில் என்னுடன் நெருக்கமானவன்,  எப்போதும் என்னுடன்  ஒட்டிக்கொண்டு திரிவான்.  பெற்றோர் வைத்த பெயர் வேறெனினும் நான் எப்போதும்  உரிமையாய் அழைக்கும் பெயர் "டேய் மாப்பு ".  நிறைய வித்தைகள் செய்வான்.. என் காதலுக்கு தூது போவான்,  என் தனிமை பொழுதுகளை இசையால் நிறைப்பான், சிறு சிறு  விளையாட்டுக்களால் என்னை உற்சாகப்படுத்துவான். எனக்கான பல விஷயங்களை தன் ஞாபக செல்களில் வைத்துகொண்டு தேவையான பொழுதுகளில் நினைவூட்டுபவன்  இப்பவும் நம்ப முடியவில்லை அவனை இழந்து விட்டேன் என்பதை.. என் எல்லா சுக துக்கங்களிலும் என்னோடு பயணிக்கும் அவனை போன்ற ஒரு நண்பன் உங்கள் எல்லோருக்கும் இருக்க கூடும். சொல்ல மறந்து விட்டேன்.. அவன் பெற்றோர் அவனுக்கு வைத்த பெயர் NOKIA 6233 . ரொம்பவுமே நெருங்கி பழகிய ஒன்றை ஒரு விநாடி நேரத்தில் இழப்பதன் வலி சற்று கொடுமையான விஷயமே. எப்படி அவனை தவற விட்டேன் என்பது இது கணமும் விளங்கவில்லை, ஒரு இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது.. அவன் என்னுடன் இல்லை என்பதை நான் உணர.. உடனே தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.. இருக்கிற

தமிழ் செம்மொழி மாநாடு

Image
மொத்த தமிழ்நாட்டின் பார்வையும் இப்போது கோயம்புத்தூர் நோக்கி... உலக தமிழ் செம்மொழி மாநாடு நாளை (23.06.10) ஆரவாரத்துடன் கோவையில் துவங்குகிறது. நாளை துவங்கும் மாநாடு ஞாயிறு (27.06.10) வரையிலும் களை கட்ட இருக்கிறது.. பல்வேறு கருத்தாய்வுகள், பட்டி மன்றங்கள்..கலை நிகழ்சிகள்.. என தமிழ் கடலில் தொபுக்கடிர் என குதித்து நீச்சலடிக்க அன்புடன் அழைக்கிறோம்.. வாருங்கள் நண்பர்களே.... கொண்டாடுவோம் தமிழை...

காதல் சொல்ல வந்தேன் - இசை விமர்சனம்

Image
 காதல் சொல்ல வந்தேன்  - இசை விமர்சனம் காதலை கொண்டாட யுவன் இசையில் வித விதமாய் 5 காதல் பாடல்கள். யுவனின் வசீகர மெட்டும், நா. முத்து குமாரின் மயக்கும் வரிகளும் கலந்த அழகான காதல் பொக்கே இந்த ஆல்பம்.  ஆரம்பமே அமர்க்களம்....  ஓ ஷலா.. என யுவனின்  குரலில் காதலின் உற்சாகம் பொங்கி வழிகிறது...  மிக எளிதாக ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி உண்டு.  அன்புள்ள சந்தியா.. . கார்த்திக் குரலில்.. ஒரு காதல் கடிதம் படித்த உணர்வு.. சரணத்தில் முத்து குமாரின் வரிகள் அவ்வளவு அழகு. காதல் என்றாலே மனுஷன் பின்னி எடுக்கிறார்.  ஒரு வானவில்லின் பக்கத்திலே - உதித் நாராயண் குரலில் குறும்பும், இளமை துள்ளலும் நிறைந்திருந்தாலும் தமிழை அவர் உச்சரிக்கும் விதம்தான் வயிற்றை ஏதோ செய்கிறது.  என்ன என்ன ஆகிறேன்.. விஜய யேசுதாஸ் குரலில் மென்மையான காதல் பயணம். சாமி வருகுது   - அட ராமா... என்ன கொடுமை இது. "எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது" என்கின்ற ஐயப்ப சாமியின் பிரபலமான பாடல் மெட்டில் காதல் பாடல்... ஐயப்பன் மன்னிப்பாராக...   ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு ஆல்பம் முழுதும் காதலால்  நிரம்பி கிடக்கிறது. THANKS TO

ராவணன் - விமர்சனம்

Image
 மணி சாரின் படங்கள் எப்போதுமே ரசனையாகவும் ரகளையாகவும் இருக்கும். சொல்ல வந்த விஷயத்தை வசனங்களின் உதவி இன்றி காட்சிகளின் தாக்கத்திலேயே உணர்த்தி விடும் திறமைசாலி. இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். கூழாங்கற்களை கூட வைரமாக மாற்றிக்காட்டும் கலைஞர்.   இவரின் புதிய படைப்பான ராவணன் பார்வையாளனுக்கு எத்தகைய அனுபவத்தை  தருகிறது என்பதை பார்ப்போம்.  "கதைக்காக நாம் வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை. ராமாயணம், மகாபாரதத்தில், இன்னமும் சொல்ல படாத கதைகள் ஆயிரம் உள்ளன.. அவற்றை சொன்னாலே போதும்" என்று கமல் தனது பேட்டியில் ஒரு முறை சொல்லியிருக்கிறார். புராண இதிகாசங்கள், நிகழ்கால சம்பவங்கள் இரண்டையும் இணைத்து கதை செய்வதில் மணிரத்னம் அவர்களின் கெட்டிக்காரத்தனம் வேறு யாருக்கும் வாய்க்காது. ராமாயணத்தின் அப்பட்டமான தழுவல் என்றாலும் காட்சிபடுத்துதல்களில் இருக்கும் வித்தியாசம் ரசிகனை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.  மேக்கிங்கை பொறுத்த வரை,  தான் ஒரு கிங் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நீருபித்திருக்கிறார் மனிதர். ஆங்கில படங்களை மிஞ்சும் காட்சியமைப்புகள் கண்களை இமைக்க மறந்து பார

அரிது அரிது - இசை விமர்சனம்

Image
 வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் தமன் ஒரு  முக்கியமான நபர். வித்தியாசமான மெட்டுக்களும், மெனக்கெடல்களும் தவறாது  இவரது இசையில்  இருக்கும். இவரின் புதிய ஆல்பம் இது. ஆறு பாடல்கள். எந்த ஒரு டூயட்டும்  இல்லாமல் ஆண் குரலில் 3 சோலோ. பெண் குரல்களில் 3 சோலோ.  பெண்கள் குரலில் வரும்  மூன்று  பாடல்களிலும் வெஸ்டர்ன் இசை கொடி கட்டி பறக்கிறது. இளசுகளை குறி வைத்து அடித்து துவைத்திருக்கிறார் தமன். ஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருந்த மதிவாணன்  இப்படத்தின் இயக்குனர். எல்லா பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார். ஆங்கில பாடல் வரிகளுக்கு மத்தியில் போனால் போகிறதென கொஞ்சம் தமிழ் வார்த்தைகளும் வருகிறது. முக்கியமாய் உஜ்ஜைனி குரலில் வரும்  "SATURDAY " பாடல் பார்ட்டி உற்சவம் என்றால், "மிஸ்ஸிங் யு" ரீட்டா குரலில் மென்மையான பீட்டோடு கண்கள் மூடி லயிக்க செய்யும் அசத்தல்      டியுன்.  இரண்டு பாடல்களுமே எதோ ஒரு பாப் ஆல்பம் கேட்கும் உணர்வை கொடுக்கின்றன. தமனின் ஆஸ்தான பாடகி சுசியின் குரலில் வரும்  "ஊ லலாளி"   வழக்கமான தமன் சமையல்.  ஆண் குரல்களில் வரும் மூன்று பாடல்களும் அப்படியே உல்டா.

லூஸ்....

Image
லூஸ்... இப்படி  சொல்லித்தான் இதுவரையும் அழைத்திருக்கிறேன்.  எனக்கும் சரி அவளுக்கும் சரி நிஜ பெயர் சொல்லி அழைப்பது இருவருக்குமே பிடிக்காது. பட்ட படிப்பு முடித்திருந்தாலும் ஒரு குழந்தை போலதான் இருக்கும் அவளுடைய நடவடிக்கைகள்.... என் உடன் பிறக்கவில்லையே தவிர.. என் உயிரிலும் மேலான என் தங்கை... என் மீது அவள் செலுத்திய அன்பும், அக்கறையும், ஒரு தாயின் அன்பு போல.. விலை மதிப்பற்றது.. எந்நாளும்... பைக்கில் வேகமாக சென்றால் மிகவும் பயப்படுபவள்.. கண்களை மூடிக்கொண்டு  என் தோள்களை இறுக்கி பிடித்து, கடவுளை துணைக்கு அழைப்பாள். அந்த கவிதை சந்தோஷத்துக்காகவே  ஓவொரு முறையும் த்ராட்டிலை முறுக்குவேன்... காப்பிக்கோப்பையில் ஆரம்பித்து DAIRY  MILK  சாக்லேட் பட்டைகள் வரை பகிர்ந்து உண்ணும் எங்களது அன்பின் வெளிப்பாடுகள் எங்களை வளர்ந்த குழந்தைகளாய் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டினாலும் உண்மையில் எனக்கு அவளும், அவளுக்கு நானும் குழந்தையே....! என் மீதான அவளின் உரிமை.. என்னை யாரிடத்தும் விட்டு தராத அவளின் அன்புதான் நான் ஈட்டியதிலேய விலை மதிப்பற்ற சொத்து.. இப்போதும்.. எப்போதும்..  அம்மை என்றொரு பக்திக்கும், மருத்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க ! - ஒரு பார்வை

Image
தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்  பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்.  ஒரு நல்ல நண்பனிடம் யதார்த்தமாய் உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனசுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது. நம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கை   எல்லாவற்றிற்கும் பின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும்   தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு.  இது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே.  நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம்.  "சந்தோஷம் எதில் இருக்கிறது?  ரொம்ப சுலபம்.  சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது" "உங்களை அடுத்தவர் ரசிக்

கற்றது களவு - விமர்சனம்

Image
 சில படங்களை  எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கும் போது நிறைய  ஆச்சரியங்களை கொடுப்பதுண்டு. நல்ல ஸ்க்ரிப்டை சரியான முறையில் ப்ரெசென்டேஷன்  செய்யும் போது மிக எளிதாக நம்மை கவர்ந்து விடும். அப்படி  கவர்ந்திருக்கவேண்டிய இந்த  படம் சின்ன சின்ன லாஜிக் மீறல்களிலும், ரசிகர்களின் ரசனை பற்றிய புரிதலில் உள்ள குறைபாட்டிலும் கவர்ந்திழுக்க முடியாமல் போய் விட்டது. கதா நாயகன் கிருஷ்ணா, தன் ப்ராஜெக்ட் மூலம் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தையும், புகழையும்  வேறொருவன் தட்டிக்கொண்டு செல்ல, அவனை பழி வாங்க துடிப்பவன். கதாநாயகி வேணி, ஏர்  ஹோஸ்டல் பணியில் சேர விரும்பி வீட்டை விட்டு வெளியில் வந்தவள். யதோட்சையான சந்திப்பில் இனையும் இருவரும் பணம் ஈட்டுவதற்காக தேர்ந்தெடுக்கும் வழி களவு. சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் இருவரும் ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் ரகசியங்களை திருடி பணம் பறிக்க,  ரகசியம் வெளி வராமல் இருக்கவும், பழி வாங்கவும்  அரசியல்வாதி தன் அதிகார பலத்தால்  என்கவுன்ட்டர் மூலம் இருவரையும் கொல்ல முயற்சித்து துரத்த,  அவரிடம்  இருந்து திருடிய ரகசியத்தை தெரிந்து கொள்ள ஒரு லோக்