Posts

Showing posts from August, 2011

தமிழ் சினிமாவில் தற்போது முனுமுனுக்க வைக்கும் சூப்பர் ஹிட் பாடல்கள் - ஒரு பார்வை.

Image
இசையால் வசமாகா இதயமுண்டோ....?  காலை நேர வாக்கிங்கில்  நம்மோடு ஆரம்பித்து, அலுவலகம் செல்லும் வழி எங்கும் கூடவே பயணம் செய்து, இடைவேளைகளில்       இளைப்பாற வைத்து...  மாலை நேர உற்சாகங்களை இரட்டிப்பாக்கி... இரவு நம்மை தூங்க வைத்து தாலாட்டும் வரை... இசை ஒரு தாய்.  எத்தனை டென்ஷன் இருந்தாலும், கவலைகள் இருந்தாலும், ராஜாவோ, ரஹ்மானோ, யுவனோ.......  நம் செவி வழி நுழைந்தால் போதும்...... மனம் லேசாகும். நம் உடலையும்... மனசையும் RE-FRESH செய்யும்  நல்ல மருத்துவர்கள் அவர்கள். இசையால் நம்மை வசப்படுத்த, தமிழ் சினிமாவில் நிறைய புதியவர்கள் வந்திருப்பது, இசை பிரியர்களை சந்தோஷபடுத்தும் நல்ல செய்தி. எழுத  நேரம் கிடைக்காத காரணத்தினால், நிறைய நல்ல ஆல்பங்களை பற்றி பகிர்ந்து கொள்ள முடியாமலேயே போய் விட்டது. தற்போது என்னை முனுமுனுக்க  வைக்கும் சில பாடல்கள் உங்களுக்காக.... கார்த்திக்கின் குரல் எப்போதுமே ஸ்பெஷல். அதுவும் காதல் பாடல்கள் என்றால்.... ஐஸ் க்ரீமாய் கரையும். "வேங்கை"யில்   வரும்  "காலங்கார்த்தாலே" பாடல் வெரி இம்ப்ரசிவ்.     தேவிஸ்ரீ பிரசாத்தின்  அழகான  பீட்டில் சரணத்தில் நீளும்

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

Image
படிக்கின்ற வயதில்,  பிட்டு படம் பார்ப்பதற்கு  நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது. தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில்  ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில்.    எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு  சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய்  குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும்.  அதற்க்கு ஏற்றார் போல்,  தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?"  என்பார்.   "ப்ரென்ட் வீட்டுக்கு போறேன் மாமா  " என சமாளித்தாலும், படவா... இந்த  வயசிலேயே மலையாள

மங்காத்தா - இசை விமர்சனம்

Image
வெங்கட் பிரபு,  யுவன் கூட்டணி என்றாலே உற்சாகமான இசைக்கு குறை இருக்காது. இதில் அஜித் வேறு இணைந்தவுடன் எதிர்பார்ப்புகள் எவரெஸ்ட்  உயரத்திற்கு எகிற... மங்கத்தா இந்த எதிர்பார்ப்புகளை முழுமை படுத்தியிருக்கிறதா.... ?  முதல் பாடல் "விளையாடு மங்காத்தா " ஏற்கனவே ஒற்றை ஆல்பமாக வெளிவந்து ரசிக கண்மணிகளின் பல்ஸ் பார்த்தது. தல ரசிகர்களை மட்டுமே உசுப்பேற்றும் அந்த பாடல் இசை ரசிகர்களை அவ்வளவாக இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பதே உண்மை. அனால் அந்த ஆரம்ப இசை செம மிரட்டல்.  ஆல்பத்தின் இரண்டாவது பாடல் " நீ நான் " நல்ல மெலடி. SPB  குரலில் இருக்கும் ஒரு தனித்துவம்  அவரது மகன் குரலிலும் தொடர்வது சிறப்பு. நிரஞ்சன் பாரதியின் அழகான வரிகளும், சரண், பவதாரணி மயக்கும் குரல்களும்  இப்பாடலின் ஸ்கோரை ஏற்றுகிறது. பல்லவியில் ஆரம்பிக்கும் வசீகரம், சரணத்தில் தொலைந்து போவதுதான் கொஞ்சம் வருத்தம்.   கோவாவில் கேட்ட " இடை வழி " பாடல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து இதில் "வாடா பின்லேடா" ஆகியிருக்கிறது. சுசித்ரா குரலில் இருக்கும் ஒரு போதை இப்பாடலின் பிளஸ்.   ஆர்கேஸ்ட்ட்ரஷனில் நிறைய பரிச