Posts

Showing posts from December, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

Image
காதல் எங்கும் நிறைந்திருப்பது. தன்னுள் நுழைந்த காதலை, சந்தேகத்தின் பேரில் தொலைக்க நினைக்கும் ஒருவனும் , தான் தொலைத்த காதலை தன் நட்பிடமும், தன்னை சுற்றியிருப்பவரிடமும் தேடும் ஒருவனும் முட்டிக்கொள்ள நேரிடும் போது ஏற்படும் குழப்பங்களும், கவிதைகளுமே மன்மதன் அம்பு.  அம்பு சாக்ஷி பல பேரின் தூக்கம் கெடுக்கும் பிரபல நடிகை. கிசுகிசுக்களால் நிரம்பி வழியும் அவள் திரையுலகை வாழ்கையே வெறுக்கும் அவளின் மல்டி மில்லியனர் பணக்காரன் மதனகோபால். காதல் என்னும் தேவதையையும் மீறி, சந்தேகம் என்னும் குட்டிச்சாத்தான் மனசுக்குள் முளைக்க, அவளை வேவு பார்க்க ஒரு டிடெக்டிவை நியமிக்கிறான்.  தன் நண்பனின் கேன்சர் ட்ரீட்மென்ட் செலவுக்காக இந்த உளவு பார்க்கும் வேலையே மேற்கொள்ளும் மேஜர் R மன்னார், மதனகோபால், அம்பு ஆகிய மூவரின் உளவியல் மாற்றங்களை படு சுவாரசியமாக காமெடி கடலில் நீந்த விட்டிருக்கிறார்கள். உள்ளுரிலேயே எடுத்துவிடக்கூடிய கதை.... ஆனால்  தயாரிப்பாளர் பசையுள்ள பார்ட்டி என்பதால் உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்கள், ஸ்டார் குருஸ் என புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.   கமலஹாசன் என்னும் மஹா கலைஞனுக்கு இந்த வேடமெல்

கவிதாயினி....

Image
  ஒரு கவிதை வாசிக்க உன் உடலில் வரிகள் தேடுகிறேன்.. எத்தனை வாசித்தும்  பூர்த்தியாகவில்லை இந்த கவிதை. மிச்ச வரிகளை எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய். ? ...

ரத்த சரித்திரம் -2 - விமர்சனம்

Image
படம் முழுக்க யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டோ  அல்லது சுட்டுக்கொண்டோ இருக்கிறார்கள். திரை முழுதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இரண்டு மணி நேரம் அமர்ந்து படத்தை பார்க்க முடிவதற்கு காரணம் வர்மாவின் கதை சொல்லும் ஸ்டைலும் அதற்க்கு உறுதுணையாய் இருக்கும் வசனங்களும்.  இரண்டரை மணி நேர முதல் பாகத்தை,  முதல் 20 நிமிடத்தில் சுருக்கியதால் படம் ஆரம்பத்தில் தோட்டா வேகத்தில் பறக்கிறது. சூர்யாவின் வருகையும் அதற்க்கு பிறகான காட்சிகளும் இன்னமும் சூடு கிளப்ப இடைவேளை வரை ஒரே ரணகளம்தான். பிரதாப் ரவி என்னும் தனி மனித சாம்ராஜ்யத்தை வேரறுக்க நினைக்கும் சூர்யாவின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் அதற்க்கான விடையும் தான் இரண்டாவது பாகம். உண்மை சம்பவங்களை சுவாரசியமாக சொல்வதென்பது ஒரு சவாலான விஷயம். ஆனால் தனக்கு தோதான கிரௌண்ட் என்பதால் வர்மா இதில் பேயாட்டம் போட்டிருக்கிறார். முக்கியமாக சூர்யா  கோர்ட்டில் தன்னை கொல்ல முயற்சிக்கும் எதிரிகளை கண்டுணர்வது முதல் அவர்களை வீழ்த்துவது வரை மிக டீடெய்லாக காட்சிபடுத்தியிருப்பதில் வர்மாவின் திறமை மின்னுகிறது.   மற்ற படங்களில் எல்லாம் சட சடவென ஆக்க்ஷன் காட்ச