அய்யனார் - இசை விமர்சனம்


குத்து பாட்டில் கூட வெஸ்டர்ன் டைப் இசையே மட்டுமே  கொடுத்து வந்த தமனுக்கு முதல் பரீட்சை. அய்யனார்  வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளையராஜாவின் உதவியோடு கொஞ்சம் சமாளித்திருக்கிறார்.

முதல் பாடலான, "குத்து குத்து"  முன் வரிசை ரசிகர்களை ஆட வைக்கும் குத்து எனினும், சரணம், கரகாட்டகாரன் "ஊரு விட்டு ஊரு வந்து" மெட்டில்  அட்சரம் பிசகாமல்  TRAVEL செய்வதை தமன் கவனித்திருக்கலாம். 

 ஈரத்தில் ஐஸ் கிரீம் குரலில் செவிகளை நனைத்த ரஞ்சித் இதில்  பிரியதர்ஷினியுடன்  இணைந்து பாடும் "பனியே" ஒரு அழகான ஜில் ஜில் டூயட்.    பாடல் முழுதும் வரும் வயலின்கள் பீட்டும்,  ரகசியமான அந்த  ரொமான்ஸும் ரொம்ப அழகு. இதிலும் ராஜா சாரின் சாயல் வருவது ஏனோ..? 

"ஆத்தாடி " தமனின் அடுத்த பட்டாசு.  கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைல் மெட்டும்,  கிராமிய காதல் வரிகளும்  கொண்ட ஒரு பக்கவான காக்டெயில்.   நவீனின் குரலில் இனி அடிக்கடி F .M களில் கேட்கலாம்.  


ராகுல் நம்பியார் குரலில் வரும் " பச்சை கிளி" குடும்ப உறவுகளின் உன்னதத்தை சொல்லி செல்கிறது. கொஞ்சம் சுமாரான மெட்டுதான். 


புது புது கதை களங்களை தேர்ந்தெடுத்து இசையமைக்கும் போதுதான் இசையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர முடியும். இது தமனின் முதற் படி. "பனியே" "ஆத்தாடி" பாடல்கள் மூலம் பாஸ் மார்க் வாங்கினாலும் இன்னும் போக வேண்டியது நிறைய இருக்கிறது. 

SONGS CAN LISTEN :

 "பனியே" - ரஞ்சித,பிரியதர்ஷினி
 "ஆத்தாடி " - நவீன்


VERDICT  : 2 .7  / 5 .00    


Comments

  1. நல்ல படைப்பு நல்ல விமர்சனம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....