காதல் சொல்ல வந்தேன் - இசை விமர்சனம்
காதல் சொல்ல வந்தேன் - இசை விமர்சனம்
காதலை கொண்டாட யுவன் இசையில் வித விதமாய் 5 காதல் பாடல்கள். யுவனின் வசீகர மெட்டும், நா. முத்து குமாரின் மயக்கும் வரிகளும் கலந்த அழகான காதல் பொக்கே இந்த ஆல்பம்.
ஆரம்பமே அமர்க்களம்.... ஓ ஷலா.. என யுவனின் குரலில் காதலின் உற்சாகம் பொங்கி வழிகிறது... மிக எளிதாக ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி உண்டு.
அன்புள்ள சந்தியா... கார்த்திக் குரலில்.. ஒரு காதல் கடிதம் படித்த உணர்வு.. சரணத்தில் முத்து குமாரின் வரிகள் அவ்வளவு அழகு. காதல் என்றாலே மனுஷன் பின்னி எடுக்கிறார்.
ஒரு வானவில்லின் பக்கத்திலே - உதித் நாராயண் குரலில் குறும்பும், இளமை துள்ளலும் நிறைந்திருந்தாலும் தமிழை அவர் உச்சரிக்கும் விதம்தான் வயிற்றை ஏதோ செய்கிறது.
என்ன என்ன ஆகிறேன்.. விஜய யேசுதாஸ் குரலில் மென்மையான காதல் பயணம்.
சாமி வருகுது - அட ராமா... என்ன கொடுமை இது. "எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது" என்கின்ற ஐயப்ப சாமியின் பிரபலமான பாடல் மெட்டில் காதல் பாடல்... ஐயப்பன் மன்னிப்பாராக...
ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு ஆல்பம் முழுதும் காதலால் நிரம்பி கிடக்கிறது. THANKS TO YUVAN AND NA.MUTHU KUMAR.
SONGS CAN LISTEN :
ஓ ஷலா..அன்புள்ள சந்தியா..
VERDICT : 3.0 / 5.0
அருமையான விமர்சனம் வாழ்த்துகள்...
ReplyDeleteஉங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html
அன்புள்ள சந்தியா பாட்டும்,அதன் வரிகளும் நன்றாக இருந்தன!
ReplyDelete