விண்ணை தாண்டி வருவாயா... - ஒரு இசை அனுபவம்


ஒரு புதிய இசை அனுபவத்திற்கு நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார்  A.R.R.

'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்கின்ற பாரதியாரின்  வரிகள் அழகாய் நினைவுக்கு வந்து  போகின்றன...

"ஓமனப் பெண்ணே..."  என பென்னி தயால் ஆரம்பிக்கும் போதே மழையில் நனைந்த சந்தோஷம்.

"அன்பில் அவன்" பாடலில் ஆரம்பிக்கும் உற்சாகம் "கண்ணுக்குள் கண்ணை" பாடலில் டாப் கியர் எடுத்து வேகம் பிடிக்கிறது.
"மன்னிப்பாயா" பாடலில் திருக்குறளை இணைத்திருக்கும் அழகு அற்புதம்.

''செல்லமே" (AAOROMALE) எனும்  பாடல் நீங்கள் இதற்க்கு முன் எங்கும் கேட்டிருக்க முடியாத அசத்தல் டியுன் . அப்படியே மனசை உருக்குகிறது.

இந்த ஆல்பத்தின்  டாப் RATING  "ஹோசனா" இந்த வருடத்தின் முக்கிய கலர் புல்  காலர்டியுன் .

குத்து பாடல், துதி பாடல்  கலாச்சாரத்தில் சிக்கி நொந்து நைந்து போன நமக்கு ஒரு இதமான  தலை வருடலை இந்த பாடல்கள் தருகிறது.

தமிழுக்கு மட்டுமல்ல உலகம் முழுதிற்கும் பொதுவான ஒரு இசை ஆல்பம் இது.

MY RATING : 7.2/10

Comments

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....