மின்னல் தருணங்கள்..

 

நாடி பார்த்த
வைத்தியர்
முகத்தில்
குழப்ப ரேகைகள்.....


எப்படி
ஒரு சில
வினாடிகளில் மட்டும்


ரத்த ஓட்டம்
உயர்ந்து
தாழ்ந்ததே
என்று..


பாவம்
அவருக்கு
எப்படி தெரியும்..?


அந்த
குறிப்பிட்ட
சில நொடிகளில்...


உன்
புன்னகை முகத்தை
நான்
நினைவு கூர்ந்து
பார்த்தது...!

----

Comments

  1. சில நொடிகள் மட்டும் தானா?

    கவிதை நல்லயிருக்கு

    ReplyDelete
  2. இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முடிஞ்ச வைத்தியரால், உங்க மன ஓட்டத்தை கண்டுபிடிக்க முடியலை பாருங்க!

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு.nice thinking.

    ReplyDelete
  4. பயத்துல பிரஷர் ஏறிருக்கும் போல,அதான்

    கவித செம செம மனோ :)

    ReplyDelete
  5. கவிதை நல்லாவே வந்துருக்கு நண்பா :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....