ஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)




G.D.R. ENGINEERING COLLEGE - FRIDAY - 1:30 PM

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த தனியார் கல்லூரி மதிய வெயிலில் அனாமத்தாய் காய்ந்து கொண்டிருந்தது. நீண்ட அசோக மர நிழல்களுக்குள்  பதுங்கியிருந்த  மாணவிகள்   என்ஜீனியர் ஆகும் கனவில் கதைத்துக்கொண்டிருக்க, அதை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டிருந்த மாணவர் கூட்டம் அந்த மாணவிகளுக்கு எப்படி கணவன் ஆகலாம் என்கின்ற கனவில் அதி தீவிர யோசனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

உதய், மதிய வகுப்பை கட் அடித்து விட்டு  படத்திற்கு  போகலாமா,  அல்லது சரக்கடிக்க  போகலாமா என்கின்ற  யோசனையில்  குழம்பி,  தெளிந்து  பின்  இரண்டையுமே  செய்யலாம்  என்கின்ற  முடிவுக்கு  வந்தவனாய் ஹோண்டாவை உதைக்க எத்தனிக்க.. 

மாப்ள..! என அலறிக்கொண்டே ஓடிவந்தான் சுகுமார். 

"ஏன்டா...?" ஏன் தெரு நாய்  துரத்தர மாதிரி ஓடி வர...  ?"

"டேய் மாமா, ஒரு கண்டக்டர்  பன்னாடை  என்னை                                                    அசிங்கப்படுத்தீட்டாண்டா! மவனே அவனை சும்மா விடக்கூடதுடா."

"மச்சான்... பொறு... என்ன நடந்துச்சு... தெளிவா சொல்லு." 

"மத்தியானம் லீவ் போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பினேன்..கோயம்பத்தூர் போற பஸ் அது. பஸ்சில ஏறின பிறகு, நான் இறங்க வேண்டிய தெக்கலூர்ல நிக்காது...இறங்குன்னு அட்டுழியம் பண்றான் அந்த கண்டக்டர்.நான்,"இறங்க மாட்டேன்.. ஏன் அங்க பஸ் நிக்காது? அங்க  இருக்கிறவன் எல்லாம் மனுஷன் இல்லையா"ன்னு பதிலுக்கு எகிற...
 பரதேசி என்னை கெட்ட வார்த்தையில் திட்டி...  வண்டியில இருந்து தள்ளி விட்டுட்டாண்டா..   அவனை சும்மா விடக்கூடதுடா...  சுகுமார் சொல்லும்போதே இயலாமை ஆத்திரமாய் வெளிப்பட அவன் கண்களில் கண்ணீர் கட்டிக்கொண்டு வந்தது." 
 
"மச்சான், டென்ஷன் ஆகாதே... . வண்டி நம்பரை நோட்  பண்ணினியா... ?"

"ம்... இருக்கு... TN37M9870, சேலம் TO கோயம்புத்தூர்...  கவர்ன்மென்ட் வண்டி. "

 "கவலைய விடு.. மணி இப்போ 1:30. இன்னும் ஒரு மணி நேரத்துல அந்த பஸ் கோயம்புத்தூர் போய்டும். ரெண்டேமுக்கால் மூணு மணிக்கு அது கிளம்பி நாலு மணிக்கு இங்க வந்திடும்... பசங்க நாம எல்லோரும் சேர்ந்து அந்த பஸ்ஸை மறிக்கிறோம். அந்த கண்டக்டர் பொறம்போக்கை உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கிறோம். o.k....."

"நிச்சயம் பண்றம்டா.... ஸ்டுடன்ட்ஸ் பவரை அந்த பரதேசிக்கு   காட்டுறோம்." 

கண்டிப்பாடா.. நான் பசங்களுக்கு  தகவல் சொல்லி எல்லோரையும் 
தயார் படுத்துறேன்.



அமைச்சர் ராஜ துரை இல்லம் - கோயம்புத்தூர் - 2:00 PM


விஷ்ணு, மேசை மேல் பரப்பி வைத்திருந்த  வெள்ளை  நிற  பாக்கெட் பொட்டலங்களில் ஒன்றை உடைத்து கொஞ்சமே கொஞ்சம் தன் நாவில் வைத்து சுவை பார்த்தான்... கசந்தது...

ம்ம்ம்.. சுத்தமான ஆப்கான் விளைச்சல்... இன்னும் கொஞ்சம் இரத்தத்துக்குள் போனால் கால் தரையில் இருக்காது. காத்தோட காத்தா மிதக்க ஆரம்பிச்சிடுவோம்...   FIRST CLASS சரக்கு.  


ராஜ துரை , " விஷ்ணு, இதோட மதிப்பு துல்லியமா எவ்வளவு இருக்கும்? "

விஷ்ணு பெருமூச்சுவிட்டான். சினி பீல்ட், I.T., பெரிய இடத்து பிள்ளைகள்,  காலேஜ் ஸ்டுடன்ட்ஸ்  என  எல்லோருக்கும்  இந்த  ராஜ போதை தேவையா இருக்கு.  இன்னைக்கு தேதிக்கு ஒரு கிராம் முதல் தர  ஹெராயின், ஒரு கிராம் தங்கத்தின் விலையே விட அதிகம். அப்படி பார்த்தால் எப்படியும் இதன் சந்தை  மதிப்பு ஐம்பது கோடியே தாண்டிடும். அதையே   நாம கள்ள மார்க்கெட்டில் விற்கும் போது இதோட VALUE    ரெண்டு மடங்காகிடும். 


ராஜதுரை எச்சில் விழுங்கினார்.  "விஷ்ணு, நாம கண்டிப்பா இதை அவங்ககிட்ட கொடுக்கனுமா... நாமளே
வச்சுகிட்டா என்ன..?


ஐயா... அமைச்சரே... உங்க அரசியல் புத்தி   ஏன் இப்படி கோக்குமாக்கா சிந்திக்குது.. இதில் சம்மந்தப்பட்டவங்க எல்லோரும் பெரிய தலைகள்... பெரிய நெட்வொர்க்.  நிறைய மாபியா கும்பல்கள் இதில் கலந்திருக்கு. நாம அவங்களை ஏமாத்தனும்னு நினைச்சா  கூட போதும்... போட்டு தள்ளிடுவாங்க... பணத்தின் மேல் ஆசைப்படலாம். ஆனா பேராசை பட கூடாது. நமக்கு  இதில் இருந்து வரும் 2 பர்சென்ட்டே போதும். நாம செட்டில் ஆகிடலாம். 


"ஆனா  எப்படி இந்த சரக்கை அவங்ககிட்ட ஒப்படைக்கிறது.? S .P கோகுல் வேற இதை மோப்பம் பிடிச்சுட்டு ஊரு பூர வேட்டை நாய் போல தேடிட்டு இருக்கான். எப்படி பாதுகாப்பா கை மாத்தி விடறது?

தப்பான இன்பர்மேஷன் கொடுத்து, போலீசை  திசை  திருப்பி    ஏர்  போர்ட்டில் இருந்து எப்படி இதை கொண்டு  வந்தோமோ அதே  போலத்தான்...  என்னோட    யோசனை  சரியாய்   இருந்துட்டா இன்னைக்கே  இதை  சிரமம்  இல்லாமல்  அந்த  பார்ட்டி   கிட்ட ஒப்படுச்சுடலாம். OK. முதலில் இந்த சரக்கு  எல்லாத்தையும்  அந்த  புத்தகங்களில்  மறைச்சு  வச்சு  கிளியரா  பேக்  பண்ணிடலாம். 




 SUPERIDENT OF POLICE HEAD OFFICE - COIMBATORE - 2.30 PM

S.P.கோகுல் தீவிர சிந்தனையில் இருப்பதை அவரது நெற்றியில் தோன்றி மறைந்த சுருக்கங்கள் உறுதிபடுத்தியது.  "எங்கேயோ தப்பு நடக்கிறது... உளவு துறை கொடுத்த தகவலின்படி பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் கோயம்பத்தூரில் இருந்து கை மாற போகிறது. ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.  விஷ்ணு கொடுத்த தகவல் உண்மை இல்லை என்றால்... ஒன்று, விஷ்ணுவிற்கு தவறான தகவல் கிடைத்திருக்கலாம். அல்லது விஷ்ணு தவறான தகவலை என்னிடம் கொடுத்திருக்கலாம். இந்த இரண்டிற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. காலையில் இருந்து என் போனை வேறு அட்டென்ட் செய்ய மறுக்கிறான். SO WE HAVE TO FOLLOW VISHNU TOO...

இண்டர்காமில், "வைத்தி, கோகுல் பேசறேன், விஷ்ணுவோட E -மெயில் IDயே ஹேக் பண்ண சொல்லியிருந்தேனே... என்னாச்சு...?"

"சார், நீங்க கொடுத்த I.D.யில் இன்னைக்கு காலையில இருந்து இப்ப வரைக்கும் ஒரே ஒரு மெயில் தான் அனுப்பபட்டிருக்கு. விஷ்ணு நமக்கு அனுப்பின மெயில் மட்டும்தான் அது . வேற எந்த  மெயிலும் வரவும் இல்லை, அனுப்பபடவும் இல்லை".


கோகுலின் குழப்பம் அதிகரித்தது, பின் சடாரென யோசனை உதித்தவராக, வைத்தி, இன்னொன்னும் செஞ்சிடுங்க... அவனோட I.P அட்ரசை ட்ரேஸ் செஞ்சு அந்த முகவரியில் இருந்து வேற எதாவது   இ-மெயில் i.d.க்கு மெயில்ஸ் போயிருக்கா இல்லை வந்திருக்கான்னு செக் பண்ணுங்க...
i need this information immd, make it fast....


பத்து நிமிட இடைவெளியில் வைத்தி கூவினார்...


"சார், அந்த bastard நம்ம கிட்ட டபுள் கேம் ஆடியிருக்கான்.  நமக்கு  அவன்  மெயில் அனுப்பின டைம் மார்னிங் 10.30,   10.35க்கு அவனுடைய I.P அட்ரசில் இருந்து வேறொரு email   id   மூலமா இன்னொரு   மெயில் அனுப்பபட்டிருக்கு
வெயிட்...அந்த ரெண்டு மெசேஜ் காப்பிகளையும் பிரிண்ட் எடுத்துட்டு வரேன்." 

தன் மேசையின் மீது இருந்த இரண்டு குறிப்புகளும்,  திரைக்கதையே தெளிவாக கூறியது கோகுலுக்கு.  இப்போது எல்லாம்  புரிந்துவிட்டது.  விஷ்ணு கொடுத்த குறியீடை கொண்டு  ஒரு கஞ்சா பொட்டலத்தை கூட பிடிக்க முடியாது.  துரோகி, விலை போயிருக்கிறான்.  அதே சமயம் கோகுலின் செல்போன் ஒலிக்க... டிஸ்ப்ளே "விஷ்ணு INFORMAR" என்றது. 

" சொல்லு விஷ்ணு... "

"சார், உங்க  மிஸ்டு  கால்  பார்த்தேன்... டிரைவிங்கில் இருந்ததால் அட்டென்ட் பண்ண முடியல... சொல்லுங்க சார்...

ஒரு பத்து நிமிஷம் என் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா.. ?

SURE SIR... இப்பவே கிளம்பி வரேன்...

கோகுல்   மொபைலை கட்  செய்தபடி, வைத்தி,  விஷ்ணு  இப்ப  இங்க  வரான். போலீஸ்காரனை  ஏமாத்தினா  என்ன  நடக்கும்னு
தெளிவா  அவனுக்கு  புரிய  வைக்கணும்.  ரூமை  ரெடி  பண்ணிடுங்க.  இன்னைக்கு அவனை மிதிக்கிற  மிதியில்  எல்லா  உண்மைகளையும்  அவன்  கக்கனும்.  BYTHEWAY,   இந்த இன்னொரு மெயில் யாருக்கு அனுப்பபட்டிருக்குனு கண்டுபிடிச்சுடீங்களா... ? 

Yes sir, But the news is bad. அது நம்ம அசிஸ்டன்ட் கமிஷனரோட பர்சனல்  E-MAIL I.D

 கோகுல்  அழுத்தம் திருத்தமாக அந்த நான்கெழுத்து கெட்ட வார்த்தையே சத்தம் போட்டு சொன்னார்.


G.D.R. ENGINEERING COLLEGE -  3.00 PM

உதய், தன் செல்போனை ஆப்  செய்து கொண்டே... "மாப்ள.. பஸ் கோயம்பத்தூர் 
ரீச் ஆயிடிச்சு.  இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பி 4:30 க்கு இங்க வந்திடும்.  நம்ம பசங்க எல்லாம் ரெடியா...?

"ரெடி டா மச்சான்".


அமைச்சர் ராஜ துரை இல்லம் - கோயம்புத்தூர் - 3:05 PM
ராஜதுரை, "விஷ்ணு,  கோகுல்   நம்மை மோப்பம் பிடிச்சிருப்பான்னு நம்பறியா?"

"இல்லை!  பட்  அதுக்கும்   வாய்ப்புகள் இருக்கு.  நான் இன்னும் அரை மணி நேரத்தில S.P. ஆபிசுக்கு போயிடுவேன்.  அதுக்கு முன்னாடியே சரக்கு பதுக்கி  வச்சிருக்கிற பார்சலை நம்ம பிளான் படி அனுப்பிடறேன்.    நாலு மணிக்குள்ள என் கிட்ட இருந்து எந்த தகவலும் வரலன்னா நான் கோகுல் கஸ்டடியில்  இருப்பேன்னு  அர்த்தம்.   நம்ம A.C. யே வச்சு  என்னை  வெளிய  கொண்டு வர பொறுப்பு உங்களுடையது."

"நிச்சயமா!"


SUPERIDENT OF POLICE HEAD OFFICE - COIMBATORE - 4.00 PM

 சொல்லு விஷ்ணு... LET TO BE FRANK... எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு. சரக்கு எங்கே ?

சார், நீங்க சொல்றது ஏதும் எனக்கு புரியல...

நொடி தருணத்தில், கோகுலின் கை விஷ்ணுவின் கன்னத்தை அசுர வேகத்தில் தாக்கியது.  உதடு  கிழிந்து  ரத்தம்  வெளிப்பட  நாவில்  பட்டு  புளித்தது. 

A.C  உன்கூட இருக்கார்ன்னு தைரியமா விஷ்ணு...? இப்பவே  உன்னை இங்கே   உயிரோட புதைக்க முடியும்.   

"அது ரொம்ப கஷ்டம் MR.கோகுல்" என்று சொல்லிக்கொண்டே A.C. பத்மநாபன் அந்த அறையில் நுழைந்தார்.

சார், என இருக்கையிலிருந்து கோகுல் எழுந்து நிற்க...

"என்னோட உத்தரவு படிதான் விஷ்ணு செயல்   பட்டுட்டு இருக்கிறார். " you should release him now"

ஆனா சார், இந்த கேசை நான் நேரடியா விசாரணை செய்துட்டு  இருக்கேன்.
எனக்கு ஏன் சார், தப்பான தகவல்களை கொடுக்கணும் ?

"சில டிப்பார்ட்மென்ட் ரகசியங்களை வெளியே  சொல்லிக்கொண்டிருக்க முடியாது MR.கோகுல். நீங்க கமிஷனர் கிட்ட போனாலும் இதே நிலைமைதான் என்று சொல்லி மெலிதாய் புன்முறுவல் பூத்தார். நீங்க இந்த கேசை மேற்கொண்டு துருவாதீங்க... உங்க நேர்மை  மீதே  மத்தவங்க  சந்தேகப்படற  மாதிரி  காட்சிகளை  மாற்ற  முடியும்.  Leave from this,  அதுதான் உங்களுக்கு நல்லது.  உடனே விஷ்ணுவை வெளியே விடுங்க..."

தன் துப்பாக்கியே எடுத்து A.C., விஷ்ணு என  எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும் என்கின்ற வெறி கோகுல் கண்களில் தெரிந்தது. உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என எல்லோரும் பணத்திற்கு மண்டியிட்டு கிடக்கும் போது நீதி நேர்மை போன்றவை எல்லாம் ஒன்றுக்கும் உதவாத வஸ்துக்கள்தான். இயலாமை நொறுங்க.... " வைத்தி, RELEASE THAT BASTARD" என்றார்.


G.D.R. ENGINEERING COLLEGE -  4.15 PM


உதய், செல்போனில் வந்த தகவல்களை உறுதிசெய்து கொண்டு, "டேய், அந்த பஸ் அவினாசி தாண்டி வந்துட்டு இருக்கு, இன்னும் பத்து நிமிஷத்தில் நம்ம
காலேஜ் கிட்ட வந்திடும். LET'S MOVE".

மாணவர் கூட்டம் மெல்ல தேசிய நெடுஞ்சாலையே அடைந்து குறுக்காய் அரண்
அமைத்து நிற்க,  

சுகுமார் சொன்ன பேருந்து தூரத்தில் புள்ளியாய் தெரிந்து விரிந்து , பின்  மாணவர் கும்பலை பார்த்து வேகம் குறைத்து நின்றது.

மாணவர்கள் பேருந்தை சுற்றி வளைக்க... ,

"டேய் கண்டக்டர், இறங்குடா முதல்ல.."

"தம்பிகளா... எதுக்கு இவ்வளவு பேர் பஸ்ஸை மறிக்கிறீங்க... என்ன பிரச்சனை?"

"எங்க பையனை திட்டி கீழே தள்ளிட்டு... இந்த ரூட்ல இனிமேல் நீ
போயிடுவியா... ஒழுங்கா அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு..."

"மன்னிப்பா... தம்பிகளா.. நீங்க ஒரு ஆயிரம் பேர் இருப்பீங்களா... நாங்க அரசாங்க போக்குவரத்து துறை ஆளுக மட்டும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இருக்கோம்.நாங்க திரண்டு வந்தா நீங்க தாங்க மாட்டீங்க... தமிழ்நாட்டுல ஒரு பஸ் கூட ஓடாது. போய் படிக்கிற வழியே பாருங்க
தம்பிகளா.. செத்தாலும்  நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்". டேய் மணி, நம்ம ஆளுங்க, மீடியா பசங்க எல்லோரையும் போனை போட்டு இங்க வர சொல்லு. ஸ்டுடண்ட்டுங்குற பேர்ல இவனுக பண்ற ரௌடித்தனம் எல்லோருக்கும் தெரியட்டும்.

வாக்குவாதம் முற்றிய ஒரு உஷ்ணமான  நொடியில்...  முதல்  கல்  பஸ்சின்  முன் பகுதி கண்ணாடியே பதம் பார்த்தது.


அமைச்சர் ராஜ துரை இல்லம் - கோயம்புத்தூர் - 5:00 PM

 ராஜ துரை, "இனி அந்த கோகுல் பைய நம்ம வழில வரமாட்டானே...?"

"வரக்கூடாது, இந்த ஹெராயின் SMUGGLING கேசை நான் டேக் ஓவர் பண்ண போறேன். கொஞ்ச நாள் நடத்தற மாதிரி நடத்தி  அந்த கேசை மூடிடலாம்" என்றார் பத்மநாபன்.

விஷ்ணு  உதட்டில்  பட்ட  காயத்தை  துடைத்துக்கொண்டே,  "நேர்மையான
 ஆளுங்களையெல்லாம் எதுக்கு சார் உங்க டிப்பார்ட்மென்ட்டில் சேர்க்கறீங்க ... பாருங்க.... எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருக்கு "

பத்மநாபன் சிரித்துக்கொண்டே, "ஓகே விஷ்ணு  சரக்கை  எப்படி  சேலத்துக்கு அனுப்பிச்சே"  

ரொம்ப பெரிசா எல்லாம் திட்டம் போடலை,   கொரியர் சர்வீஸ் போல  இங்கிருந்து சேலம் போற பஸ்ஸில் நம்ம பார்சலை கொடுத்து ஐம்பது ரூபா தனியா டிரைவருக்கு வெட்டின போதும் பத்திரமா சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் நம்ம பார்சலை வாங்கிக்கலாம்.  பொதுவா அரசு பொது பேருந்துகளில் அவ்வளவா சோதனை இருக்காது. அப்படியே இருந்தாலும் போக்குவரத்து விதிகள் படி இப்படி பார்சல்கள் வாங்கிட்டு போவது தப்பு என்பதால் டிரைவர்கள் அதை வெளிய காட்ட மாட்டங்க.. பஸ்சின் மறைவான இடத்தில் அது பத்திரமா இருக்கும்.ரொம்ப சிம்பிளான கடத்தல்  டெக்னிக் இது.  


ஓகே... வண்டி நம்பரை குடு.. நான் சேலத்தில் இருக்கும் நம்ம பார்ட்டிகிட்ட சொல்லிடறேன்.

 ,
"TN37M9870  ஆறரை மணிக்கு சேலம் ரீச் ஆகிடும்"

விஷ்ணு சொல்லிக்கொண்டே  யதோட்சையாய்    அருகில்           ஓடிக்கொண்டிருந்த  T .Vயே பார்க்க...  பிளாஷ் நியூசில்,  "அவினாசி அருகே 
 தேசிய நெடுஞ்சாலையில்,  தனியார்கல்லூரி மாணவர்களுக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும்  இடையே நடந்த மோதலில், கோவையில் இருந்து சேலம் சென்ற  அரசு பேருந்து ஒன்று மாணவர் கூட்டத்தால் தீ வைத்து எரிக்கப்பட்டது,  பேருந்தில்  இருந்த  அனைவரும்  ஆரம்பத்திலேயே  வெளியேற்றபட்டதால் உயிர் சேதம் ஒன்றுமில்லை"  என்ற வாசகங்கள்  மின்ன.... விஷ்ணு தனக்கு நெஞ்சு வலிப்பதை தெளிவாக உணர்ந்தான்.

-------------------------------------------------------------------------- 

டிஸ்கி - சவால் சிறுகதை போட்டிக்கான எனது  இரண்டாவது சிறுகதை. இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யுடான்சில்   பதிவு செய்யவும்.




Comments

  1. விறுவிறுப்பாய் நகர்கிறது வெற்றிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. சூப்பரா இருக்குங்க!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வெற்றிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. hai sailaja,


    Thanks for your comments.

    ReplyDelete
  5. இரண்டு தளங்களை நன்றாக இணைத்துள்ளீர்கள்
    நல்ல சிறுகதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @ hai sureka,

    @ hai pon siva,

    @ hai raja rajeshwari,

    @ hai nambikkai pandiyan

    Thanks for visiting my page and giving your sweet comments.

    mano

    ReplyDelete
  7. அனைத்து கதைகளிலும் உள்ள குழப்பம் எதுவும் இல்லாமல் உண்மையாகவே அருமையாக செல்கிறது

    ReplyDelete
  8. hai suryajeeva,

    thanks for your comments.

    ReplyDelete
  9. அதான சும்மாவச் சொன்னாங்க.. 'கெடுவான் கேடு நினைப்பான்..
    Good story all the best

    என்னோட முயற்சி இங்க வந்து பாத்துட்டுப் போங்க.

    ReplyDelete
  10. என்னலே இது..... மனோவும் களத்துல குதிச்சிட்டாரு..... எலேய் சின்றாசு கட்ரா வண்டிய இன்னிக்கு நானும் எழுதுறேண்டா கதைய.....

    ReplyDelete
  11. கதை நல்லா வந்திருக்கு, வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  12. /////டிஸ்கி - சவால் சிறுகதை போட்டிக்கான எனது இரண்டாவது சிறுகதை. இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யுடான்சில் பதிவு செய்யவும்.////

    முதல் கதை எங்கே....?

    ReplyDelete
  13. நாஞ்சில் மனோன்னு நெனச்சிக்கிட்டு கமெண்டு போட்டுட்டேனுங்க.... ஹி...ஹி.....

    அதுனால மறுக்கா வாழ்த்திக்கிறேன்.
    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  14. HAI MATHAVAN SRINIVASA GOPALAN,
    HAI RAMSAMY,
    HAI MIDDLE CLASS MADHAVI,

    THANKS FOR YOUR COMMENTS.

    ReplyDelete
  15. அம்மாடி....ஒரு மெகாஹிட் படம் பார்த்த திருப்தி....

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. Nice Story Da


    Thangamani ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....