ஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)



நான் தேவ்.... இந்த கதையின் நாயகன். நாயகன் என்றவுடன் ரொம்ப நல்லவன் ஏழை பங்காளன் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நான் கொஞ்சம் வேறு மாதிரி. எல்லா சராசரி மனிதனுக்கும் எதாவது ஒன்றில் தனிப்பட்ட ப்ரியம் இருக்கும். இசையின் பால்..  புத்தகங்களின் மீது.. கிரிக்கெட்,அளவில்லாத பணம், ஸ்டாம்ப் கலக்ஷன், ஓவியம் இப்படி எதாவது ஒன்றில். எனக்கு பெண்கள் மேல்.... சிரிக்காதீர்கள்!  பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் என் விருப்பங்கள் கொஞ்சம் ஆழமானவை. ஆரம்ப காலங்களில் உங்களை போலவே எனக்கும் புரியாத புதிர்தான் பெண்கள்! இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மிச்சமிருக்கிறது... கடலின் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் போல... நிச்சயம் சில விசேஷங்கள் வாய்த்திருக்கிறது அவர்களிடத்தில்! அதுதான் என்னை வெறித்தனமாய் இன்னமும் அவர்களுக்குள் தேட வைத்துக்கொண்டிருக்கிறது.  சரியான எண்ணிக்கை இல்லையென்றாலும் 
பத்து அல்லது பன்னிரண்டு இருக்கலாம் இதுவரை. என் கேள்விகளுக்கு விடை சொன்ன எந்த பெண்ணும் இப்போது உயிரோடு இல்லை. என்னை பொறுத்த வரை பெண்கள் என் ஆராய்ச்சி கூடத்து எலிகள்.  இல்லை ... இல்லை... முயல்கள்! விரல்களால் வருடும் போது காது சிலிர்க்கும் அழகான முயல்கள்! ஹலோ பாஸ்... வெயிட்.. வெயிட்.. அவசர அவசரமாக நான் ஒரு ரேப்பிஸ்ட் என்று முடிவு செய்து விடாதீர்கள். என் தேடல்கள் அதற்க்கு மேலும் இருக்கிறது. ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா... நான் வேறு ஜாதி!   


பெண்களின் அனடாமியே மிகவும் ஆர்வத்துக்குரியதுதான். அந்த மிருதுவான தேகம். நகம் பட்டவுடன் உடனே சிவக்கும் அவ்வளவு மென்மை அவர்களுக்கு மட்டுமே உண்டான சாத்தியம். முழுதாய் உடல் மறைத்த கிளியோபட்ராவின் கால் கட்டை விரலை யதொச்சையாய் ஒரு போர் வீரன் காண நேர்ந்தால் கூட உடனே உணர்ச்சிவசப்பட்டு விடுவானாம் கிரேக்க காலங்களில். தீயையும் மழையையும் தனக்குள் ஒரு சேர வைத்திருக்கும் விசித்திரங்கள் அவர்களது உடல்கள். அது மட்டுமல்ல, மெலிதாய் எட்டிபார்க்கும் வெளிச்சம் படாத பிரதேசங்களின் வெண்மை, நீளமான விரல்கள்... அதில் கவனம் ஈர்க்கும் அந்த நெய்ல் பாலிஷ் வாசனை, முகத்தில் மிக மெல்லிதாய் படர்ந்திருக்கும் பூனை மீசை, எப்போதும் ஈரமான உதடுகள், சின்னஞ்சிறு பூப்போட்ட கை குட்டை, அதில் பரவியிருக்கும்  வித்தியாசமான  வியர்வை வாசனை என எல்லாமே எனக்குள் ஏற்படுத்தும் கிளர்ச்சிகள் எண்ணிலடங்காதவை. உயிர் போன பின்பு கூட அந்த கண்களில் தெரியும் வெளிச்சம்... பெண்களுக்கு மட்டுமே உண்டான சாத்தியம். 


காதல் அல்லது காமம் இந்த இரண்டை தவிர ஒரு இளம் பெண்ணை பார்த்தவுடன் வேறு எதாவது உங்களுக்கு தோன்றுமா.. ? வாய்ப்பே இல்லை. ஆரம்பங்களில் நானும் உங்களை போல ஒருவன். சாப்ட்வேர் குப்பைகளுக்கு மத்தியில் மூளையில் காதல் என்கின்ற பூ பூக்க.. காதலை அவளிடம் சொன்ன போது, சற்றும் தாமதிக்காமல் அந்த பெண், ஐந்து விரல்களையும் மடக்கி நடு விரலை மட்டும் உயர்த்தி காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்.........? எனக்கும் அப்படிதான் இருந்தது. நீண்ட நாள் யோசனைக்கு பிறகு, ஒரு மழை அடித்த இரவில் அவளை கடத்தி வந்து விட்டேன். 






காதலையும் காமத்தையும் மீறி புது புது ஆர்வங்களும் உணர்சிகளும் பிறந்தது அந்த இரவில்தான்! மறக்க முடியாத இரவு அது. நாற்காலியோடு உடல் முழுதும் பிணைக்கப்பட்டு, வாய் கட்டப்பட்ட அவளால் அதிக பட்சம் அழ மட்டுமே முடியும் என்கின்ற நிலைமை. நிறைய நேரம் அவளின் பயந்த...கெஞ்சும் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் கடக்க கடக்க மூளை துறு துறுக்க ஆரம்பித்தது. மெல்ல  அவள் வலது கையின் நடு விரலை மட்டும் விடுவித்து உயர்த்தி பிடித்தேன். ஒரு வெண்மையான துணியில் பாட்டிலில்  இருந்த பெட்ரோலை நனைத்து விசேஷமான அந்த நடு விரலில் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு சுற்றினேன். தீக்குச்சியே பற்ற வைக்கும் தருணத்தில் அவள் விரல்களை போலவே என் விரல்களும் நடுங்கியது ஒரு முரணான கவிதை. அது விஷமா... அல்லது வரமா... அனுபவங்களின் நீட்சியில் உடல் எடை இழந்து காற்றோடு காற்றாய் மிதந்த நொடிகள்... அவளின் அலறல் என் அறை சுவர்களில் மோதி, எனக்குள் நுழைந்து, மயிர் கால்கள் சிலிர்த்துக்கொள்ள... அசுர வேகத்தில் என் ரத்த நாளங்களில் பயணம் செய்து என் மூளையின் உணர்வு கதவுகளை பலமாக தட்டிய போது... ஹையோ..... அதுதான் சொர்க்கமா? இரண்டு ஹெவி டோஸ் பெத்தடின் உங்கள் உடலில் நுழைந்தாலும் அத்தனை இன்பம்... அந்த அனுபவம் கிட்டுமா... தெரியவில்லை. அன்றைய இரவு முழுவதும் நாங்கள் இருவருமே தூங்கவில்லை. என்னையும் அறியாமல் அதிகாலையில் உறங்கி எழுந்த போது, அந்த பெண் செத்துவிட்டிருந்தாள்.  ஏனோ அவள் மீது எவ்வித கழிவிரக்கமோ, அனுதாபமோ எந்த இழவுமே தோன்றவில்லை. 




அதன் பின்னான என் வேட்டைகள் சில நேரங்களில் பசித்த புலியின் வேகத்தோடு ஒத்திருக்கும்.. அல்லது பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா போல மெல்ல மெல்ல உருகி வழிந்து நாள் முழுதும் மிதந்து போகும். சில நாட்களில் தரை முழுதும் ரத்தம் நிறைந்து அதன் இளஞ்சூடு கால்களில் குறுகுறுக்கும் போது உடல் அப்படியே சிலிர்த்துக்கொள்ளும். ஒருவேளை பெண்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும்? நிச்சயம் அந்த உலகத்தில்  நான் ரொம்ப நல்லவனாக இருந்திருப்பேனோ என்னவோ.. ? என் வேலை, என் புத்தகங்கள், எனக்கான இசை என்று. ஆனால் நிஜம் இன்று வேறு. என் அடுத்த வேட்டைக்கான யோசனையில் இருந்த போதுதான் மொபைல் போன் என் கவனம் கலைத்தது.. டிஸ்ப்ளே "விஷ்ணு இன்பார்மர் " என மிளிர... கேள்விக்குறியோடு எனக்குள் கேட்டுக்கொண்டேன் "எவன்டா விஷ்ணு ?.....






நீங்கள் ராஜேஷ் குமார் படித்திருக்கிறீர்களா.? விவேக்கை உங்களுக்கு தெரியுமா.. ? தெரியாது என இடம் வலமாக தலையாட்டினால் மேற்கொண்டு இதை நீங்கள் தொடர்வதே அபத்தம். இங்கேயே விலகி விடுங்கள். நான் விஷ்ணு. கிட்டத்தட்ட விவேக்கின் ஜெராக்ஸ் போல. என்ன ரூபலா போன்ற அழகான பிகர்தான் கூட இல்லை. விடுங்கள்... நமக்கு கடமையே விட காதலா முக்கியம்? வெறும் மூன்று சென்டிமீட்டர் உயரம் பற்றாமல் போலீஸ் வேலைக்கு மறுக்கப்பட்டவன்.(165 cm) ஷெர்லாக் ஹோம்ஸ், துப்பறியும் சாம்பு, சுபா, PKP என தொடங்கி  கடைசியாய் சுஜாதா வரை எல்லா சாகச நாவல்களையும் கற்று தேர்ந்திருக்கிறேன். துப்பறியும் ஆர்வம் கூடவே பிறந்து வளர்ந்ததால் வருமானம் குறைவாக இருந்தாலும் பிரைவேட் டிடெக்டிவ் என ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறேன். அதற்காக என் திறமையே குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.. பாதி எரிந்த ஒரு சிகரெட்டின் மிச்சத்தை தடயமாக வைத்துக்கொண்டு  ஒரு கொலை குற்றவாளியே கண்டறிந்திருக்கிறேன் தெரியுமா.. ?   அது எப்படி என கேட்பவர்களுக்கு.. இந்த கதை பாதி எரிந்த சிகரெட்டின் மிச்சத்தை  வைத்துக்கொண்டு ஒரு கொலையாளியே கண்டுபிடித்ததை பற்றியல்ல... தேவ் என்னும் ஒரு கூறுகெட்ட சைக்கோவை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதை பற்றியது. SO அந்த சாகச நிகழ்வை பிறிதொரு தருணத்தில் சொல்கிறேன். இப்போதைக்கு தேவ்... 


MR.கோகுல், S W H2 6F இதுதான் குறியீடு, கவனம்- விஷ்ணு. துண்டு சீட்டில் எழுதி நான்காக மடித்து வைத்து கொண்டேன்.  முதலில் இந்த விஷயத்தை கோகுலுக்கு தெரியப்படுத்திவிடலாம். கோகுல் கெட்டிக்காரர். நிச்சயம் விரைந்து வந்து அவனை பிடித்து விடுவார்.
அப்பப்பா... எவ்வவளவு பெரிய கம்மனாட்டி பையன் இந்த தேவ். ராட்சசன், யதொட்சையா இவன் ரூமுக்குள் நுழைஞ்சு இவன் டைரியே படிச்ச எனக்கே வயித்தை கலக்குதே.. இவன் கையிலே மாட்டுன பொண்ணுக கதி?  இவனை போலீசில் சிக்க வைப்பதால் எத்தனை எத்தனை பெண்கள் இந்த விஷ்ணுவால் காப்பற்றபடுகிறார்கள். ஊர்ல இருக்கிற அத்தனை பொண்ணுகளும் சேர்ந்து தெரு முக்குல  எனக்கு சிலை வச்சாலும் ஆச்சரியம் இல்ல.. 


என் வெண்கல சிலை உருவத்தை பற்றி மனசுக்குள் சிலாகித்து கொண்டிருந்த போதே பின்னந்தலையோடு சேர்த்து விழுந்தது அந்த அடி.. 


கழிசடை நாயே.. என்னையா போலீசில் மாட்டி விட பாக்கிற.. நீ இங்கிருந்து உயிரோடு வெளிய போனதானே... 


தேவ்... நான் பிரைவேட் போலீஸ்... என் மேல கை வைக்காதே... மரியாதையா சரண்டர் ஆயிடு....


ங்..***********......  உன் சாவு இன்னைக்கு என் கையாலதான்... 


டேய்....ப்ளீஸ்... ப்ளீஸ்... கழுத்தை நசுக்காதடா.... ஹக்..  MR.GOKUL  D K M 35W " DEV IS KILLING ME"  SAVE ME... ஹக்..ஹக்..


உயிர் போகும் போது கூட மெசேஜ் அனுப்புவியா... சாவுடா நாயே..! 





அரசு மருத்துவமனை...தலைமை மருத்துவர் அறை.


யார் சார் இந்த அரை கிறுக்கன் ? ஒரு வாரமா நம்ம உயிரை எடுத்துட்டு இருக்கான். உங்க ட்ரீட்மென்ட் மூலமா எதாவது விஷயம் கிடைச்சுதா?


எரிச்சலோடு கேட்ட இன்ஸ்பெக்டரை பார்த்து ஆம் என்பது போல தலையாட்டினார் சீப் டாக்டர். 


ரொம்ப பெக்குலியரா ஒன்னும் இல்லை. அவனை ஆழ்ந்த தூக்கத்தில் உட்படுத்தி அவன் ஆழ்மனசில் இருந்து சில விஷயங்களை சேகரிக்க முடிந்தது. சாப்ட்வேர் ஆசாமி, வேலை போனதில் இருந்து கொஞ்சம் மென்டலா டிஸ்டர்ப் ஆகியிருக்கிறான். அது போக நிறைய ஏமாற்றங்கள், நிராகரிப்புகள்... குறிப்பா பெண்கள் கிட்ட இருந்து. அதுதான் ஒருமாதிரி மனசிதைவு நோய்க்கு அவனை தள்ளியிருக்கு. 


அவன் டைரியே படிச்சதிலே, பெண்களை வித விதமா சித்ரவதை பண்ணி கொலை செஞ்ச மாதிரி இருக்கே.. அப்படி எதாவது செயல்களில் இவன் ஈடுபட்டிருக்கானா டாக்டர் ?


you know... இது வரைக்கும் இவன் யாரையும் கொலை செஞ்சதில்லை.தன் ஆழ் மன ஆசைகளை, வண்டல்களை டைரியில் கொட்டி  வச்சிருக்கிறான்...அவ்வளவே.   

ஆனா டாக்டர், அவன் ரூம் பூரா சின்ன சின்ன துண்டு சீட்டுக்கள், விஷ்ணுன்னு ஒருத்தன் யாரோ கோகுலுக்கு தகவல் சொல்ற மாதிரி.. ஒரு இழவும் விளங்கலை.. பாயே பிராண்ட வச்சுடுச்சு டாக்டர். 


ஒரு உண்மையே சொல்லட்டுமா... தேவ், விஷ்ணு இந்த ரெண்டுமே இவன் ஒருத்தன்தான். ரெண்டு வேறுபட்ட குணாதிசயங்கள்  இவன் மூளையில் ஆழ பதிஞ்சு ரெண்டு மனிதர்களா கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கிறான். உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா "MULTIPLE PERSONALITY DISORDER"  அந்த ரெண்டு கேரக்டரும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து  மாத்தி மாத்தி வெளிப்பட்ட  ஒரு குழப்பமான சூழ்நிலையில் அவனே தன் கழுத்தை தான் மயக்கமாகும் வரை நெருக்கியிருக்கிறான். நீங்க ஆரம்பத்தில் சொன்ன மாதிரி இவன் கழுத்தில் இவன் கைரேகைகள் மட்டுமே இருந்ததற்கு இதுதான் காரணம்.   


VERY STRANGE DOCTOR... அப்ப அந்த கோகுல்? 


கோகுல்னு ஒரு ஆளே இல்லைன்னுதான் நான் நினைக்கிறேன். அவன் படிச்ச புத்தகங்கள், அல்லது  பார்த்த சினிமா இதுல அவன் மனசை பாதிச்ச ஒரு நேர்மையான போலீஸ் உண்மையில் இருக்கிறதா நினைச்சுக்கிட்டு அவர் பேருக்கு துண்டு சீட்டில் தன் கண்டுபிடிச்சதா நினைச்ச சில விஷயங்களை கிருக்கியிருக்கிறான்னு நான் நம்பறேன். in fact ராஜேஷ் குமார் நாவல்களில் வர இன்ஸ்பெக்டர் பேர் கூட கோகுல்நாத் தான். அந்த பாதிப்பா கூட இருந்திருக்கலாம். 
  
அப்ப இந்த கேஸ் கோர்ட்டுக்கு போகாது.. கீழ் பாக்தான் போகும்னு சொல்றீங்க.... இல்லையா... டாக்டர்?  


 "ofcourse "


இவர்கள் விவாதித்து கொண்டிருந்த அதே நேரம், தனி அறையில் படுக்க வைக்கபட்டிருந்த அவன் ஒரு சிறிய துண்டுசீட்டில் கிறுக்க ஆரம்பித்தான்.. 
  
"SIR, 


எஸ்.பி.கோகுலுக்கு நான் தவறான குறியீடைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு. 


" ஹையோ... கழுத்து இன்னமும் வலிக்குது... துப்பறியும் வேலையே விட உயிர் ரொம்ப முக்கியம்."


---------------------------------------------


டிஸ்கி - இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யூடான்சில் மட்டும் பதிவு செய்யவும்.






Comments

  1. hai ponsiva,

    thanks for your comments

    ReplyDelete
  2. hai dubai raja

    thanks for your comments

    ReplyDelete
  3. hai sukumar

    thanks for your comments

    ReplyDelete
  4. அருமை.. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

    ReplyDelete
  5. அருமையான கதை.. நல்ல நடை...

    ReplyDelete
  6. hai vichu,

    hai parvaiyaalan...

    thanks for your comments

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....