செக்கிடோ
பீட்டர் பெஞ்சமின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப்டிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர். மருத்துவ ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம், ஆயிரக்கணக்கில் வெற்றிகரமான SRS சர்ஜரிகள். மருத்துவ துறையின் வாழ்நாள் சாதனையாளர், மொத்த புகழும் இப்போது காணாமல் போக போகிறது...ஒரே ஒரு சின்ன தப்பு, தான் புதிதாய் கண்டுபிடித்த மருந்தே தமக்கு இப்போது வேட்டு வைக்க போகிறது. மருந்தின் முழு தாக்கத்தையும் உணராமல் மூன்று நபர்களுக்கு செலுத்தியது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. அவரது உதவி டாக்டர் ஸ்டீபன் கதவை திறந்து கொண்டு உள் நுழைய, பீட்டர் பரபரப்பானார். "ஸ்டீபன்" அந்த மூன்று பேரது முகவரிகளையும் கண்டறிந்து விட்டாயா, இன்னும் இரு தினங்களுக்குள் அவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாக வேண்டும்"
"நிச்சயம் டாக்டர்" அந்த மூவர்க்கும் மெயில் அனுப்பி விட்டேன். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்றைக்குள் பிடித்துவிடலாம்".
"நல்லது, பிரச்சனை வெளியில் தெரிவதற்கு முன் இதை தீர்த்தாக வேண்டும்"
"டாக்டர், நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் கேட்கிறேன்" எல்லா பரிசோதனைகளையும் கடந்து, அவர்களது ஒப்புதலுடந்தானே இதை நாம் செலுத்தியிருக்கிறோம். பின் பிரச்சனை எப்படி வரும் என்று நினைக்கிறீர்கள்."
பீட்டர் முன் வழுக்கை தலையே தேய்த்து கொண்டார். "ஸ்டீபன் YOU KNOW VERY WELL THAT, ஒரு முறை அந்த மருந்தை உள் செலுத்திவிட்டால் அதை முறியடிக்க கூடிய ஆண்டி பயாடிக் இன்னனும் நாம் கண்டு பிடிக்க வில்லை".
"இது அவர்களுக்கும் தெரியும் தானே, இதற்க்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே தானே இந்த மருந்தை நாம் செலுத்தினோம்"
பிரச்சனை அவர்கள் மூலமாக இல்லை,
"பின்னே ...?"
"ஸ்டீபன்" நம்முடைய .... / மன்னிக்கவும், கதையில் குறுக்கிடுவதற்கு.. இந்த கதைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கு சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இந்த இடத்தில் அது ஒரு முக்கியமற்ற சம்பவம் எனினும் அதை பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
சுமதி, பட்டு சேலை சரசரக்க காரில் இருந்து இறங்கினாள். ஒரு மாதிரியான பயம் தோன்றி வயிற்றை கலக்குவது போல இருந்தது. கோவிலில், ராஜேஷும் அவனது பெற்றோரும் இவர்களுக்கு முன்பாகவே காத்துக்கொண்டிருந்தனர். சுமதி கோவிலுக்குள் நுழையும் போது பல ஜோடி கண்கள் தன்னை கவனிப்பதை உணர்ந்தாள். நெஞ்சு பட படவென அடித்துக்கொள்ள அம்மா பின்னால் பிரகாரத்துக்குள் நுழைந்து கண்களை மூடிக்கொண்டாள். "பெருமாளே, ரொம்ப பயமாக இருக்கிறது. எல்லாம் சரியாக நடக்க வேண்டும், எனக்கு தைரியத்தை கொடு. அவர்களுக்கு என்னை பிடிக்க வேண்டும்". உனக்கு என் கையால் மாலை கட்டி சாத்துகிறேன்"
அந்த பெண் பார்க்கும் வைபவம் ரொம்பவுமே அழகாக நடந்தது, சுற்றி இருப்பவர்கள் தன்னையே உற்று பார்ப்பது சுமதியால் உணர முடிந்தது. குனிந்த தலை நிமிராமல் அமர்ந்தவள் கால்கள் மெல்லிசாக நடுங்க, உதடுகள் உலர்ந்து தாகம் எடுத்தது. என்ன மாதிரி அவஸ்தை இது. பரவசமா, தண்டனையா, "இது என் பையன் ராஜேஷ் " என ஒருவர் அறிமுகப்படுத்த " எல்லோருக்கும் வணக்கம், என் பேரு ராஜேஷ் " என்ற குரல் பிசிறில்லாமல் கேட்டது. குரலில் ஒரு கம்பீரமான ஆண்மை மிளிர, கொஞ்சம் தைரியம் பெற்று, ஆர்வம் உந்தி தள்ள தலை உயர்த்தினாள்.ராஜேஷ் நல்ல உயரமாக போட்டோவில் பார்த்ததை விடவும் அழகாக இருந்தான்.
"எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு " என்ற ராஜேஷின் குரல் சுமதியின் உடலில் சொல்ல இயலாத சிலிர்ப்பை ஏற்படுத்த " பெருமாளே THANKS" என்றாள்.
அன்று இரவே, ராஜேஷிடமிருந்து போன் வந்தது..
"என்னை பிடிச்சுருக்கா ?
"ம்ம்"
நிஜம்மா...??!!
"ம்ம்ம்.."
"நான் நிறைய வாயடிப்பேன், என்னை பொறுத்துக்கணும்!
"ம்ம்ம்.."
நீ ரொம்ப அழகு..
"ம்ம்"
உனக்கு மியூசிக் பிடிக்குமா?
"ம்ம்"
ம்ம்.. தவிர தமிழில் வேற என்னென்ன வார்த்தைகள் தெரியும்..?
"பயமா இருக்கு."
HOW SWEET... லுக் சுமி, நான் உன்னை கல்யணம் செஞ்சுக்க போறவன். DONT WORRY ABOUT ANYTHING... BUT நீ வெட்கப்படறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. ஐ லைக் யு அண்ட் "ஐ லவ் யு"
சுமதி, சடாரென போனை துண்டித்து விட்டாள். உடல் முழுதும் வியர்த்து கொட்டி நடுங்கியது. இதுவரை எந்த ஆணும் அவளிடம் ஐ லவ் யு சொல்லியது இல்லை. நெஞ்சு பட பட வென என அடிப்பது நன்கு கேட்டது. உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்பட.. அவன் I LOVE YOU என்று சொன்னது சந்தோஷமாக இருந்தது.
அடுத்தடுத்த தினங்களில் அவர்களது தொலைபேசி உரையாடல் மணிக்கணக்கில் நீள இருவரது ரசனைகளும், விருப்பங்களும், நிறைய I LOVE YOU களுக்கு இடையில் பரிமாறப்பட்டது. சுமதி மிக சந்தோஷமாக உணர்ந்தாள். அவன் அவளுள் ஆழப்பதிந்து அவளுடைய உலகமானான்.
நிச்சயத்திற்கு இரண்டு நாள் முன்புதான், அசந்தர்ப்பமான அந்த நிகழ்வு ஏற்பட்டது. புரோக்கர் சொன்னதை முதலில் சுமதியால் நம்ப முடிய வில்லை. " பையன் வீட்டில் நிச்சயம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க" நம்மளை விட வேற ஏதோ பெரிய வரன் வந்திருக்காம். பொண்ணு அமெரிக்காவில் டாக்டருக்கு படிச்சவளாம்"
ராஜேஷை தொடர்பு கொள்ள முயற்சிக்க அவன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டிருந்தது. மூன்று நாள் தொடர் முயற்சிக்கு பின் ராஜேஷ் அவளுடன் பேசினான். " லுக் மிஸ் சுமதி, உங்களை எனக்கு பிடிச்சிருந்தது. I ACCEPT THAT, BUT இப்போ என்னோட காரியர் எனக்கு ரொம்ப முக்கியம், என்னுடைய வாழ்கையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு. அந்த மொபைல் பேச்சுகளுக்கெல்லாம் பெரிசா முக்கியத்துவம் கொடுக்காதீங்க, SORRY AND GOOD BYE "
சுமதிக்கு, முதலில் ஒன்றும் புரியவில்லை. ராஜேஷ் ஏகமாய் அவள் மனசை கலைத்து போட்டு விட்டு சென்றிருந்தான் . அவன் நினைவுகள் அழிக்க முடியாதபடி அவளுள் கலந்து கிடக்க, கடவுளே, நான் உன்னை மட்டும்தானே நம்பினேன்.என் பிரார்த்தனைக்கு நல்ல பலன் கொடுத்திட்ட.. இனி உன்னை கும்பிட மாட்டேன் என்ற அவளது கண்ணீரும், விசும்பல்களும் யாருக்கும் கேட்க வில்லை. ஒருவேளை பெருமாளுக்கு கேட்டிருக்கலாம்.
நிற்க, பீட்டர் பெஞ்சமின், தன் சகாவிடம் எதோ சொல்கிறார், "ஸ்டீபன்" ஒரு ஆணை பெண்ணாக மாற்றும் நம்முடைய SEX RE-ASSIGNMENT SURGERY யில், வெஜினோ பிளாஸ்டி செய்து முடித்தவுடன் என்னுடைய புதிய மருந்தான '' செக்கிடோ" ஒரு பெண்ணுக்குரிய ஹோர்மோன்களை முழு அளவில் உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகிறது. இதன் மூலம், ஒரு பெண்ணுக்குரிய வளர்ச்சிகள் மட்டுமின்றி மன அளவிலும் அவன் ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்து கூடிய விரைவில் பெண்ணாக மாறி விடுவான். இப்போது பிரச்சனை என்னவென்றால், அவர்களது செக்ஷுவல் லைப். அப்படி பெண்ணாக மாறியவர்கள் இன்னொரு ஆணுடன் உறவு கொள்ளும் போது, நம்முடைய மருந்து அவர்களது உடலுக்கும் பரவுகிறது... இதை பரிசோதிக்காமல் நாம் மூன்று பேருக்கு அந்த மருந்தை செலுத்தியிருக்கிறோம். இதன் மூலம் அவர்களிடம் உறவு கொள்ளும் ஆண்களுக்கும் செக்கிடோ பரவும் ஆபாயம் இருக்கிறது. இதனை எப்படியும் தடுத்தாக வேண்டும்"
அதற்குள், ஸ்டீபன்னது செல் போன் சிணுங்க, எடுத்து பேசியவன், டாக்டர், அந்த மூன்று பேரில் இருவர் இருக்குமிடம் அறிந்தகிவிட்டது. மீதம் உள்ள ஒருவன், உங்களிடம் மருத்துவம் படித்தவனாம், இந்தியாவிற்கு பறந்துவிட்டனாம்.
"ஆம் ஸ்டீபன், என்னுடைய ஸ்டுடென்ட் ஒருவன் பெண்ணாக மாறி வாழ விரும்பி இந்த சர்ஜெரி செய்து கொண்டவன்,, அவன் பெயர் என்ன.?
"ரத்தன் மல்ஹோத்ரா"
இந்த சம்பாஷனை நடந்த அதே சமயத்தில், ரத்தன் மல்ஹோத்ரா என்ற பெயரை கெஜட்டில் ராதிகா மல்ஹோத்ரா என மாற்றிக்கொண்டு, தேனிலவு முடித்த களைப்பில் தன் கணவனின் தோள்களில் சாய்ந்து உறங்கிகொண்டிருக்க, அந்த கணவன் ராஜேஷ், முந்தய இரவில் நடந்த இனிய நிகழ்வுகளை நினைத்து பார்க்க, உடனே கன்னம் சிவந்து வெட்கத்தில் தன் இரு கைகளையும் முகத்தில் மூடிக்கொண்டான்.
கதை நல்லா இருக்கு
ReplyDeleteபடிப்பதற்கு மிகவும் விறு விறுப்பாக இருந்தது!
ReplyDeleteEnkayoo othakuthe...
ReplyDeleteSupera irukku boss. But writing Style konjam change panneenganna innum interestinga irukkum.
ReplyDeleteகதை மிகவும் அருமை... உங்களது எழுத்து நடை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்ம்ம் நல்ல சைன்ஸ் கதை(sci-fi) தான்
ReplyDeleteவிருவிருப்பா இருக்கு
\\ தன் இரு கைகளையும் முகத்தில் மூடிக்கொண்டான். \\
அசத்தல் ஃபினிஷ்
கதை நன்றாக உள்ளது..
ReplyDeleteபெருமாள் இப்படி தண்டிச்சுட்டாரே ;)
nice story mr. mano
ReplyDelete