திருமலை திருப்பதி - ஒரு பரவச அனுபவம்

  இரண்டு நாள் விடுமுறையில் பெருமாளை சேவிக்க திருப்பதி  சென்று வந்தது  பல்வேறு அதிர்வலைகளை மனசுக்குள் ஏற்படுத்தியது.  பெருமாளை வழிபட எத்தனையோ கோவில்கள் உண்டென்றாலும் திருப்பதி சம்திங் ஸ்பெஷல்.  பெருமாளுக்கும் நமக்கும் ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் இடம் போல விளங்குவதுதான் இதன் சிறப்பு.

வருடம் முழுதும் பெருமாள் இங்கு படு பிஸியாக இருக்கிறார். ஆரம்ப காலத்தில் தரிசனம் செய்யும் முறைகளிலிருந்து இப்போது நிறையவே நவீன படுத்தப்பட்டு இருக்கிறது. நம்முடைய ஊரிலிருந்தே தரிசனம் செய்யும் நேரத்தை முன் பதிவு செய்து விட்டு வரலாம். (TTD- THIRUMALAI TIRUPATHI DEVASATANAMS  முக்கிய ஊர்களில்  இந்த  சேவையினை வழங்குகிறது. )  இணையத்தில் கூட  முன் பதிவு செய்யலாம். அப்படி இருந்தும் நாள் முழுக்க காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம் இங்கு மிக அதிகம்.

நாங்கள் சென்ற இந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் திருமலையில், ஓய்வெடுக்க அறைகள் கிடைக்காமல்,  கோவிலை சுற்றியுள்ள  பாதைகளிலும், மரத்தடிகளிலும்,  தங்கி  உறங்குவதை பார்க்கும் பொழுது  அவர்களது பக்தியின் அளவீடு மலைக்க வைக்கிறது. தரிசனத்திற்கு மட்டுமில்லாது முடி காணிக்கை செய்யும் கல்யாண கட்டாவிலும் கட்டுக்கடங்கா கூட்டம். மொட்டை அடிக்க ஒரு நாள் முழுதும் கியூ வில் நிற்கும் ஜனத்திரளை பார்க்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. .

திருப்பதியே பொறுத்த வரை சரியான திட்டமிடலும், முன் பதிவும் மிக அவசியம். நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முன் பதிவு செய்திருந்ததால் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்காமல் சற்று விரைவாகவே கோவிலுக்குள் நுழைந்துவிட்டோம். எந்த வித  முன்பதிவும்  செய்யாமல், ஒரு தீடிர் தோன்றலில் திருப்பதி வருபவர்கள் உடனடியாக தரிசனம் செய்ய வாய்ப்பே இல்லையா என நீங்கள் கேட்கலாம். அதற்கென ஒரு புதிய திட்டத்தை அமல் செய்திருக்கிறார்கள்.  300  ரூபாய் கட்டணத்தில் "சீக்கிர தரிசனம்"  என்கின்ற பெயரில் 1  - 2  மணி நேரத்தில் தரிசனம் செய்து விடலாம்.


கோவிந்தா கோவிந்தா என்றபடி கோவிலுக்குள் மெல்ல நகரும் வரிசையில் வடக்கு, தெற்கு பேதமில்லாமல் எல்லா மாநில மக்களும்  கலந்திருக்க, எல்லோருடைய கண்களிலும் உச்ச கட்ட ஆர்வமும், பக்தியும் வழிய,  கோவிலின் உள் பிரகாரத்தில் நுழையும் போது நம்மையும் அறியாமல் ஒரு பரபரப்பும், பயமும் இயல்பாய் தொற்றி கொள்கிறது. மெல்லிசான தீப வெளிச்சத்தில், சாம்பிராணி புகைக்கு மத்தியில்  தூரத்தில் கர்ப்பகிரகத்தினுள்  நெற்றி நிறைய நாமம் இட்டு கம்பீரமாய் பெருமாள் வீற்றிருக்க பார்க்கும் நமக்கு உடல்  சிலிர்த்து, அந்த சிற்சில நொடிகளில் வைகுண்டத்திற்கே வந்தது போன்ற உணர்வை  தரும் அற்புதம் இங்கு மட்டுமே.   கோவில் சேவா ஊழியர்கள் நம்மை நிற்க விடாமல் தள்ளி துரத்துவது  சங்கடமாக இருந்தாலும் பின்னால் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களை நினைக்கும் போது வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. அந்த சில நொடி நேர அனுபவத்திற்காக  எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம், தவறில்லை.

அடுத்த நாள் சுப்ரபாத தரிசனத்தின் போது, நான் பெற்ற அனுபவம் இதற்க்கு நேர்மாறானது. ஒரு நாளில்  150 நபர்கள் மட்டுமே அனுமதி. கர்ப்பகிரகம் மூடபட்டிருக்க கோவில் உள் பிரகாரத்தில் கூட்ட நெரிசலின்றி அமைதியாய் காத்திருக்கிறோம். 90 % பிராமினர்களால் நிரம்பியிருக்க, பெண்கள் பெருமாளை துயில் எழுப்ப  அழகாக பாடுகிறார்கள். சரியாக 3 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு கருவறை திறக்கபடுகிறது, கர்ப்பக்கிரகத்தின் கடைசி வாயில் வரையிலும் பக்தர்கள் அனுமதிக்க படுகிறார்கள். அவ்வளவு கிட்டத்தில், எளிமையான அலங்காரத்துடன் பெருமாளை  பார்க்கும் போது நம் ஊர்  கோவில் பெருமாளை காண்பது போலவே இருக்கிறது. சுப்ரபாத தரிசன வாய்ப்பு கிடைத்தால் தவற விடதீர்கள், அது ஒரு வேறு மாதிரியான அனுபவம்.

நிச்சயம் திருப்பதி நம் மனதை RE-FRESH செய்யும் ஒரு அற்புதமான ஆலயம். இன்னும் 200-300 வருடங்கள் கழிந்தாலும், நம் கொள்ளு பேரன், பேத்திகள்  சுஜாதா சார் தனது திமலா சிறுகதையில் சொல்வது போல பெருமாளை கண்டு " ITS AMAZING" என்பார்கள், சத்தியம்.



வரவேற்க்கத்தக்க மாற்றங்கள் 

வயதானவர்களும், மாற்று  திறன் படைத்தோரும், குழந்தைகளும், விடுதலை போராட்ட தியாகிகளும்  எளிதாக சாமி கும்பிடும் வகையில் கோவிலுக்கு முன்புறம் தனியாக ஒரு கியூ வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவில் தரிசனம் செய்யலாம்.

உலக புகழ் பெற்ற ப்ரசாதமான  லட்டு  வாங்குவதற்கெனவே  ஒரு தனி காம்ப்ளெக்ஸ் அமைக்கபட்டுள்ளது. நூற்றுகணக்கான கவுன்ட்டர்கள் மூலம் எளிதில் லட்டு கிட்டும்.

அதே போல எக்ஸ்ட்ரா லட்டு வாங்கவும் இந்தியன் வங்கி சார்பில் ஒரு தனி கவுண்ட்டர் அமைக்கபட்டுள்ளது. 100 ரூபாய்க்கு 4 லட்டு என்கின்ற அளவில் வேண்டிய அளவில் பிரசாதம் வாங்கலாம்.

Comments

  1. அருமை :-)

    Srini

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள், நன்றி.

    ReplyDelete
  3. //90 % பிராமினர்களால் நிரம்பியிருக்க//

    அதானே கோவில் கட்டியது நம்மாட்கள், அனுபவிப்பவர்கள் அவாள்கள்.

    இந்த தரிசனம் காண என்ன procedure ?

    ReplyDelete
  4. //DEAR MR.PARITHI,


    THANKS FOR VISIT MY PAGE. FOR SUBRAPATHA THARISANA, YOU CAN BOOK NEAR YOUR TTD CENTRE.(THE TTD CENTRE LOCATED IN NEAR PERMUAL KOVIL TEMPLE,PAPANAYAKKAN PALAYAM,CBE) OTHER WISE YOU HAVE TO SEND A D.D. IN FAVOUR OF "THE EXECUTIVE OFFICER - TTD, TIRUMALA FOR RS.120/-HEAD. BEFORE SEND THE D.D. PLS CHECK WITH THE TTD CUSTOMER CARE THE TICKETS ARE AVAILABLE IN THE PARTICULAR DATE OR NOT.

    THANKS / REGARDS,

    MANO//

    தகவலுக்கு நன்றி மனோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....