நொறுக்கு தீனி


பார்த்ததும் - படித்ததும் - கேட்டதும் 
ஜான் ஷெப்பர்ட் பாரோன்   லண்டனில்  காலமாகி விட்டார். யோசிக்காமல் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிடுங்கள். ஏன், எதற்கு என்று கேட்பவர்களுக்கு....  இவர் கண்டுபிடித்த ATM மெஷின் தான் நேரம், காலம் பார்க்காமல் நமக்கு பணம் எடுக்க இப்போது உதவியாய் இருக்கிறது.  நினைத்து பாருங்கள், ATM  இல்லாத தினங்களில் வங்கிகளில் கால் கடுக்க நின்றதும், விடுமுறை தினங்களிலோ,  தீடிர் தேவைக்காகவோ பணத்துக்காக அல்லாடிய பொழுதுகளும்...இந்த  மனிதருக்கும் அந்த காலத்தில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நினைத்தாராம்.... சாக்லேட்டுகளை  கொட்டும் மெஷின் போல பணம் கொட்டும் மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என...  அதன் பின்னர் முழு ஈடுபாட்டுடன் உழைத்து இவர் கண்டுபிடித்த ATM மெஷின் முதன் முதலில் ஜூன் 27 1967 லில்  லண்டன் BARCLAYS  வங்கியில் நிறுவப்பட்டது. 

அப்படியே, அவர் மனைவிக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் ஜான் முதலில் ATM  பாஸ் வோர்டை 6  இலக்க  எண்களாகத்தான்  தான் உருவாக்கினார். ஆனால் அவர் மனைவிக்கு முதல் 4  இலக்க எண்கள் மட்டுமே ஞாபகம் இருந்ததால் 4 இலக்க எண்கள் மட்டுமே பாஸ் வோர்டாக பயன்படுத்தப்பட்டு இப்போதும் உலகம் முழுவதும் அதே முறை பயன்படுத்த படுகிறது.
-------------------------------------

இன்றைக்கு 7 படங்கள் ரிலீஸ். ஆனால் எதுவுமே அதிக எதிர்பார்ப்பை தூண்டும் படி இல்லாதது ஒரு குறையே. நீண்ட நாளைக்கு பிறகு  CRAZY மோகன் சார் வசனத்தில் "கொல கொலயா முந்திரிக்கா" வருகிறது. இப்போதைக்கு என் எதிர்பார்ப்பு அந்த படத்திற்கே...

---------------------------------------

செம்மொழி மாநாட்டிற்காக கோவை புது பொலிவுடன் தயாராகி கொண்டு இருக்கிறது. மாநாடு முடிந்த பின் கோவையின் கதியே நினைத்தாலே பயமாக இருக்கிறது. எல்லாம் அவசர கோலம். நேற்று போட்ட ரோடு இன்று பெய்த மழையில் பல்லிளித்து கொண்டு நிற்கிறது. சாலையே அகலப்படுத்துகிறேன் என்று இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி மொட்டை அடித்து விட்டார்கள். அதற்க்கு பதிலாக செயற்கை மரங்களை ஆங்கங்கே நடுவதை பார்த்தால்  சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. 5 வருடங்களுக்கு முன் எல்லாம் கோவைக்குள் நுழைந்தாலே சிலு சிலு வென வீசும் காற்றும், மெல்லிசாய் தூறும் மழையும் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். இப்போது எல்லா மரங்களையும் வெட்டி விட்டதால்.. அடிக்கிற வெயில் சட்டையே கிழித்து கொண்டு திரிய வைக்கிறது.  இந்த லட்சணத்தில் துடியலூர் முதல் மேட்டுபாளையம் வரை மரம் வெட்ட டெண்டர் விட போகிறார்களாம். இந்த கதியில் போனால் உலகம் சீக்கிரமே அழிந்து விடும்.
----------------------------------------------


Comments

  1. A great salute to ஜான் ஷெப்பர்ட் பாரோன்...last one is very very sad news....

    ReplyDelete
  2. தமிழ்நாட்டின் சார்பாக என் சல்யூட்
    கண்டிப்பா அவர் கண்டுபுடிக்கலன்னா என்ன ஆகும்,நினைத்துக் கூட பார்க்க முடியாது

    தமிழுக்கு வாழ்வு மரங்களுக்கு சாவா
    என்ன நியாயம் இது

    ReplyDelete
  3. போஸ்ட்டை விட தத்துவ முத்தை ரசிச்சேன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....