நொறுக்கு தீனி - 2

 S.S.L.C தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன... வழக்கம் போல பெண் பிள்ளைகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்றாலும் நம்ம பசங்களும் சரி நிகராக வருவார்கள் என நம்புவோமாக.. ஆண் பிள்ளைகளுக்கு படிப்பதை தவிர நிறைய கடமைகள்  உண்டு. கிரிக்கெட், நண்பர்கள் வட்டம், சினிமா, என்று  பல பொறுப்புகள் இருக்கிறது.  இதை எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டே பசங்க  படிப்பதை நாம் பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு பெண் பிள்ளைகள் படிப்பதோடு ஒப்பிட கூடாது...அவர்கள் படிக்கும் முறையே வேறு.   இரு பாலருக்குமே என் வாழ்த்துக்கள். தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்வதில் இருக்கும் த்ரில்லும், பயமும் எப்போதுமே ஒரு  சுகமான  அனுபவம்தான். இப்போது போல இன்டர்நெட் சமாச்சாரங்கள் அப்போது இல்லை. இப்போது  நம்பரை டைப்பி ENTER கொடுத்தவுடன் மொத்த ஜாதகமும் வந்து விடுகிறது. நான் பத்தாவது படிக்கும் போது, நியூஸ் பேப்பரில்  எண்களை துழாவி, நம் நம்பரை கண்டதும் வரும் ஒரு உற்சாகம் சொல்லில் அடங்காதது. அதே போல மதிப்பெண் வாங்குவதற்கு பெற்றோருடன் வரிசையில்  நிற்கும் போது ஒரு பயம்  வந்து வயிற்றை கலக்குமே... அப்பப்பா..  வகுப்பு ஆசிரியர் ஓவ்வொரு மாணவனையும் ஓரக்கண்னால் பார்த்துக்கொண்டே  மதிப்பெண் சான்றிதழை கொடுப்பதும், அந்த கடைசி தருணம் வரை மதிப்பெண் தெரியாமல் மனசு தடுமாறுவதும்.. அது வேறு  மாதிரியான அனுபவம். 

--------------------------------------

பட்டா பட்டி படத்தில் ஹரிஹரன்,மஹதி பாடியிருக்கும் ஒரு டூயட் ரொம்பவே வசீகரம் செய்கிறது. "இது வரை இதுவரை " என தொடங்கும் பாடல் இரவு வேளைகளில் கேட்பதற்கு அருமையான தாலாட்டு. 
--------------------------------------

உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால். இனி வரும் நாட்களில் நான் கேட்கும் கேள்விக்கு ஐந்திலிருந்து பத்து நொடிகளுக்குள் நீங்கள் பதிலை சொல்லிவிட்டால் உங்களை நீங்களே தட்டி கொடுத்துக்கொள்ளுங்கள்.தமிழில் நீங்கள் கெட்டிக்காரர்தான்.
டம்ளர்  - இதற்க்கு தமிழில் என்ன?
உடனே கண்டுபிடித்து விட்டால் பின்னுட்டத்தில் குறிப்பிடவும்.
-------------------------------------------
வெயில் கொடுமை மண்டையே பிளக்கிறது. போபாலில் வெயிலுக்கு 3 மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை வீரர்கள் மயங்கி இறந்தது ரொம்பவே வருத்தமான சம்பவம். உலக வெப்பமயமாதல் குறித்து ஒரு கூட்டம் காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தாலும் இன்னமும் மரங்களை வெட்டி, பிளாஸ்டிக்குகளை அதிக அளவில் பயன்படுத்தி முடிந்த அளவு இயற்கையே  நாம் நாசப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறோம். எப்போ விழிப்புணர்வு வந்து.. எப்போ திருந்தி.. போங்கடா.. 
-------------------------------------------

Comments

  1. //ஆண் பிள்ளைகளுக்கு படிப்பதை தவிர நிறைய கடமைகள் உண்டு//

    ஆமாம் ஆம்பள சிங்கம்ல

    //நான் பத்தாவது படிக்கும் போது//

    அண்ணே பத்தாவது பாஸ் பண்ணிட்டீங்களா(ஹீ ஹீ ஹீ சும்மா)

    நாமலாவது நாலு மரம் நடுவோம்

    நல்ல செய்திகள்

    ReplyDelete
  2. HAI MUGILAN,

    YOU ARE EXACTLY RIGHT

    ReplyDelete
  3. hai jill thanni,

    eppadio thakki mukki patthavathu paas pannitten.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....