அட்ட கத்தி - விமர்சனம்
ஒரு பெண்ணின் மனசு போலத்தான் இந்த படமும்..... நிறைய ஆச்சரியங்கள்... ரகசியங்கள்... கிறங்கடிக்கும் கள்ள பார்வைகள்.... குட்டி குட்டி சந்தோஷங்கள்... எளிதில் புரிந்து கொள்ள முடியா... குழப்பியடிக்கும் நடவடிக்கைகள் என திரைக்கதை நம் இளமை கால நினைவுகளை ஒரு முறை மறு ஒலி -ஒளி பரபரப்பு செய்கிறது
பிறந்ததில் இருந்து... ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்த்து.. பழகி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் யார் என தேடினால் உலக உருண்டையில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்கள்...... நான் உட்பட...
மூன்றாவது படிக்கும் போது கர்லிங் ஹேர் வைத்த யசோதா... ஐந்தாவதில் சாய்ரா பானு... கல்லூரி காலங்களில் எதிர் வீட்டு ப்ரியா... அப்புறம் என் அக்கா பெண் என எனக்கும் நீண்ட காதல் எபிசோடுகள் உண்டு..எல்லாமே சொதப்பல்கள்தான்!. அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால் மூன்று மாதங்களுக்கு இந்த பதிவு நீளும் என்பதால் நேராய் படத்திற்கு வருவோம்...
அதேதான்.. புனிதமான காதல்.. அமரக்காதல் என நாம் ரீல் சுற்றுவதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி என காதல் ஜிகினாவை கிழித்திருக்கிறார்கள்... ஒப்புக்கொள்ள கொஞ்சம் மனசு வலித்தாலும் நிதர்சனம் அதுதானே என நினைக்கையில் புன்முறுவல் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.
ஹீரோ அட்டகத்தி தீனாவாக புதுமுகம் தினேஷ்.. டுட்டோரியல் காலேஜில் இங்கிலீஷ்
பாஸ் செய்வதில் தொடங்கி கல்லூரியில் ரூட் தலையாக கால மாற்றத்திற்கேற்ப
ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டே இருக்கிறார். ஆனால், காதல் பாடத்தில் மட்டும்
தொடர்ச்சியாய் அரியர். கஜினி போல திரும்ப திரும்ப வெவ்வேறு பிகர்கள் மீது
படை எடுத்தாலும் வெற்றிக்கனியே ருசிக்க முடியாத சென்னை புறநகர் இளைஞனாக
வாழ்ந்திருக்கிறார். Nice performance .
ஹீரோயின் என ஒற்றை பெண்ணை மட்டும் அடையாளம் காட்டாமல் ... காட்டிய பெண்கள்
எல்லோரையும் ஹீரோயின் போல நினைக்க வைத்திருக்கும் காஸ்டிங் வெகு அழகு.
பூர்ணிமா.. நதியா.. திவ்யா... என நம் இளமை காலத்தில் தூக்கம் தொலைக்க வைத்த
அத்தனை பெண்களையும்... அவர்களின் தேசிய குணமான... ஓரக்கண் பார்வை..
திருட்டுத்தனமான ரசிப்பு.... காதல் என நெருங்கும் போது... "அண்ணா" என்கின்ற
ஆயுதத்தால் பின் மண்டையே பிளக்க வைத்து எஸ்கேப் ஆகும் புத்திசாலிதனங்களை
புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.
இயக்குனர் ரஞ்சித் ரசனையான முன்பகுதி காட்சிகளில் வெகுவாக ஸ்கோர் செய்கிறார். புறநகர் வட்டார பேச்சு வழக்கு.. யதார்த்தமான நண்பர்கள்.. ஹீரோவின் குடும்பம்....நம் பக்கத்துக்கு வீட்டு பிகர்கள் போல நினைக்க வைத்த ஹீரோயின்கள் என நிறைய ஹோம் வொர்க் செய்ததில் படத்தின் மீதான அவரின் காதல் நன்கு புலப்படுகிறது. சோகம் வராமல் அதை வலுக்கட்டாயமாக வர வைக்க துடிக்கும் ஹீரோ, கராத்தே கற்கும் காட்சிகளில் உள்ள நான் லீனியர் திரைக்கதை, சினிமாவாக அல்லாமல் ஒரு ரியலிச அனுபவத்தை தரும் காட்சியமைப்புகள் என ஆரம்ப படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். அதுவும் கிளைமாக்ஸ் இறுதியில் தீனாவின் மனைவி யார் என ஒரு ஆர்வத்தை தூண்டி அதை காட்டாமலேயே end கார்டு போட்டிருப்பது டைரக்டர் டச்.
இயக்குனர் ரஞ்சித் ரசனையான முன்பகுதி காட்சிகளில் வெகுவாக ஸ்கோர் செய்கிறார். புறநகர் வட்டார பேச்சு வழக்கு.. யதார்த்தமான நண்பர்கள்.. ஹீரோவின் குடும்பம்....நம் பக்கத்துக்கு வீட்டு பிகர்கள் போல நினைக்க வைத்த ஹீரோயின்கள் என நிறைய ஹோம் வொர்க் செய்ததில் படத்தின் மீதான அவரின் காதல் நன்கு புலப்படுகிறது. சோகம் வராமல் அதை வலுக்கட்டாயமாக வர வைக்க துடிக்கும் ஹீரோ, கராத்தே கற்கும் காட்சிகளில் உள்ள நான் லீனியர் திரைக்கதை, சினிமாவாக அல்லாமல் ஒரு ரியலிச அனுபவத்தை தரும் காட்சியமைப்புகள் என ஆரம்ப படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். அதுவும் கிளைமாக்ஸ் இறுதியில் தீனாவின் மனைவி யார் என ஒரு ஆர்வத்தை தூண்டி அதை காட்டாமலேயே end கார்டு போட்டிருப்பது டைரக்டர் டச்.
ஆடி போன ஆவணி" கவிதை கானா பட்டாசாய் வெளிச்சம் கொடுத்திருக்கிறது
படத்திற்கு... ரியலிச சினிமாவிற்கு தேவையான.. அளவான பின்னணி இசை என
சதீஷ் நாராயணன் ஒரு புதிய இசைக்கு விதை போட்டிருக்கிறார்.
கொஞ்சம் மெதுவான முன்பகுதியும்... இரண்டாம் பாதியில் வரும் சில பல
சில்லுண்டி காட்சிகளும் சுவாரசிய சினிமாவை.... டிராமா போல ஆக்கி
விட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஹீரோவின் காதல் போலவே படமும் சில இடங்களில்
நம் மனசில் ஒட்டியும் ஒட்டாதது போல ஒரு பீலிங் கொடுத்திருப்பது மைனஸ்.
இருந்தாலும் வழக்கமான காதல் படங்களுக்கு மத்தியில் இது கொஞ்சம் வித்தியாச
சினிமாதான்.
(+) பிளஸ்
களம்
வசனங்கள்
ஹீரோயின்கள்
இசை
யதார்த்தமான அத்தனை கேரக்ட்டர்களும்
(-) மைனஸ்
மெதுவாய் நகரும் திரைக்கதை
கிளைமாக்ஸ்
VERDICT : இன்னமும் ஆழமாய் பாய்ந்திருக்கலாம்.
RATING : 4.7 / 10.0
EXTRA பிட்டுகள்
இந்த படம் நன்றாக இருந்தாலும் ஒரு அதீதமான தாக்கத்தை மனதில்
ஏற்படுத்தாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால்... நிஜத்தில் நாம்
புனிதமான... ஒரு அமரத்துவமான ஒரு காதலை எதிர்பார்க்கிறோம்...
சூழ்நிலைகள்..... கால மாற்றங்கள் அதற்க்கான வாய்ப்பை நமக்கு கொடுக்காமல்
போனாலும் அந்த காதல் என்கின்ற ஒரு உணர்வு நம்முள்ளே அப்படியேதான்
இருக்கிறது. ஆட்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை... ஏகப்பட்ட காதல்
எபிசோடுகளை கடந்த பின்னும்... அதே காதலோடு இப்போது நான் என் மனைவியே நேசிப்பது
போல...
Comments
Post a Comment