வாடா, அம்பா சமுத்திரம் அம்பானி - இசை விமர்சனம்

 வாடா.

படத்திற்கு ஒரு பாடல்  மட்டும் ஹிட் கொடுக்கும் இமான் இதில் " மெஸ்மரிசம் " என்னும் பாடலில் மெஸ்மரிசம் செய்கிறார். நல்லதொரு ரொமாண்டிக் டூயட் இது.

மகா கவி பாரதியின் "அக்னி குஞ்சொன்று கண்டேன்"  ஷங்கர் மகா தேவனின் குரலை ஒத்த MLR கார்த்திகேயன் குரலில் கவர்கிறது. பாரதியின் வரிகளுக்காக கேட்கலாம். ஆனால் சுந்தர் C படத்தில் இந்த பாடலா என்பதுதான் பீதியே கிளப்புகிறது. பாடலின் பின்னணியில் சுந்தர் C பிகினியில் ஓடும் ஹீரோயினை மணல்  தெறிக்க துரத்தாமல் இருந்தால் கோடி புண்ணியம். 

சுந்தர்.C,  இமானின் பரம்பரை பழக்கமாக ஒரு ரீ-மிக்ஸ் . "என்னடி ராக்கம்மா " இந்த ரீ மிக்ஸ் கலாச்சாரத்தை இவர்கள் விடவே மாட்டார்களா.?  

மற்றபடி எண்ணிக்கைக்கு பாடல்கள் அவ்வளவே... 

VERDICT  : 2 STARS
-------------------------------------
அம்பா சமுத்திரம் அம்பானி 

கருணாசின் இசை அவதாரம்.. "பூ பூக்கும் தருணம் " கருணாசின் பழைய பக்கா பாப் சாங். அப்படியே இந்த படத்திற்காக உருவியிருக்கிறார். ஆல்பத்தில் இந்த பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்றவை.. ம்ம்ம்ஹூம். 

இதில் கொடுமை என்னவென்றால், இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் வாங்கியிருக்கிறது. நொடிக்கொருமுறை இந்த பட  பாடல்களை ஒலிபரப்பி நம் காதுகளில் ரத்தம் வர வைக்க போகிறார்கள். தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருக்கிறது. 

VERDICT  : 1 .5  STARS

Comments

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....