விஸ்வரூபம் - விமர்சனம்
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பெளத்த மதங்களின் வரிசையில் இன்னொரு முக்கியமான மதம் உண்டு. சினிமா என்கின்ற மதம்... உலகம் முழுதும் பல கோடி பேரால் விரும்பப்படும் இந்த மதத்தின், மிக முக்கிய தீவிரவாதிதான் கமல்.
நல்ல சினிமாவை உடனே பார்க்க வேண்டும், அது கொடுக்கும் அனுபவத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என என்னும் ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் ரொம்பவே அதிகம். அதனால்தான், தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் என்ன...மாநிலம் விட்டு மாநிலம் தாவலாம் என வரிசை கட்டிக்கொண்டு பயணித்த வாகனங்களில் எனது பிரேக் பிடிக்காத ஓட்டை டிவிஎஸ் 50 யும் அடக்கம். கொளுத்தும் வெயில்.. மொட்டை காடு..., பழுதடைந்த சாலைகள் என பயணத்தை சிரமமாக்கும் இடர்கள் பல இருந்தாலும்... கோயம்புத்தூர் டு வேளந்தாவளம் (கேரளா தமிழக எல்லை) பயணம் எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற தீவிர சினிமா பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான சவாரியாகத்தான் நேற்று இருந்திருக்க கூடும்.
அவரின் இந்த புதிய படைப்பு நிறைய சாதனைகள், கொஞ்சம் சர்ச்சைகள், சந்தேகங்கள் என கலந்து கட்டிய ஒரு பொட்டலமாய் நமக்கு வழங்கபட்டிருக்கிறது. வெறும் வாயிற்கு அவல் கிடைத்தாலே சந்தோஷப்படுவான் ரசிகன்... இது உலக தரத்தில் தயாரிக்கப்பட்ட செமத்தியான தீனி. முதல் காட்சியில் இருந்தே அதன் சுவையில் மூழ்க ஆரம்பித்து இறுதி வரைக்கும் அதே ருசியுடன் விருந்தை பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கமல்.
கொஞ்சம் ஹை லெவல் திருடன் போலீஸ் விளையாட்டு. வில்லன்கள் கூட்டத்தில் ஒரு உளவாளி கலந்து அவர்களின் சதி திட்டங்களை முறியடிக்கும் ஜெய்சங்கர் கால கதைதான். ஆனால் அல் கொய்தா, தாலிபான் தீவிரவாதிகள் , நியூயார்க் என அதற்க்கு ஹை டெக் வடிவம் கொடுத்து... அந்த வடிவத்திற்கு உண்டான நியாயமான களங்களை காட்சிகளில்... கூர்மையான வசனங்களில் விவரித்திருப்பதுதான் கமலின் திறமை.
கதக் நடன கலைஞனாக கமலின் நடிப்பு நிச்சயம் பிரமிப்பான விஷயம்தான்.. முக பாவங்கள்... வார்த்தை பிரயோகங்கள்.... உடல் மொழி.. நடை என எல்லாவற்றிலும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால்.... ஆப்கான் மற்றும் ரா அதிகாரி போர்ஷன்களில் பெரிய தனித்துவம் ஒன்றும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மிக தரமான ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு ... சிறப்பான லொக்கேஷன்கள்...நேர்த்தியான காட்சியமைப்புகள்... மிக மெச்சூர்டான.. ரசிக்க வைக்கும் வசனங்கள்.. என எல்லாவற்றிலும் இருக்கும் தரம் திரைக்கதையில் ஓரிரு படிகள் குறைந்திருப்பதை மறுக்க முடியாது. நண்பர் சிபி செந்தில்குமார் "இயக்குனரிடம் சில கேள்வி"களுக்காக இரண்டு குயர் A4 பேப்பர்களை சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. படம் பார்க்கும் போது ஏன் எதற்கு எப்படி என பல கேள்விகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் அதை எல்லாம் மறக்க செய்யும் ஒரு மெஸ்மரிஸம்....ஒரு மேஜிக்... படத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டு படம் முழுதும் வியாபித்திருக்கிறது. எனவே.. "மனம் கவர்ந்த இடங்கள்" பகுதிக்காக, நண்பர் இன்னமும் ஒரு நாலு குயர் பேப்பர் கட்டுக்களை எடுத்து வைத்துக்கொள்வதும் நலம்.
என் சிறு மூளைக்கு எட்டிய வரை.. கமல் இந்த படத்தை நேரடியாக ஆங்கிலத்தில் எடுத்திருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சமரசம் செய்து கொள்ளாமல் இன்னமும் படத்தில் பர்பெக்ஷன் கொண்டு வந்திருக்கலாம். (உதாரணம்.. ஆப்கான் தீவரவாதிகள் தமிழ் பேசுவது... நம்மூரில் அவர்கள் தமிழ் பேசினாலும்.... "இன்னாபா ஆப்கான்காரன் தமிழ் பேசுறான் என கிண்டலடிப்பார்கள்.. அவர்கள் உருது பேசினாலும்... "என்னப்பா, தமிழ் படத்திலே இப்படி இந்தி பேசுறாங்க" எனவும் நம் மக்கள் வாருவார்கள் ) அதே போல... இரண்டாம் பாகம் இருக்கிறது என்பதற்காய்... நிறைய விஷயங்களுக்கு பதிலே சொல்லாமல் படத்தை முடித்திருப்பதும் ஒரு ஏமாற்றம்
உண்மையான இஸ்லாமியனும் , இஸ்லாம் மதமும் வன்முறையே ஆதரிப்பது இல்லை. அவர்கள் தாலிபான்கள், அல் கொய்தா அமைப்பினரின் ரத்தம் சிந்தும் போராட்டங்களை வெறுக்கவே செய்கின்றனர். இந்த படமும்
அல் கொய்தாவிற்க்கும் தாலிபான்களுக்கும் எதிரான படம்தான் . இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. இஸ்லாம் மதம் பற்றியும்...இந்திய இஸ்லாமியர் பற்றியும் எந்த கருத்துக்களோ... விமர்சனங்களோ இல்லை. இதில் வில்லன்களாய் சித்திரிக்கபட்டிருப்பவர்கள் அல் கொய்தா அமைப்பினரே தவிர இஸ்லாமிய மதம் அல்ல. இந்த படம் சட்டபூர்வமாய் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, படம் பார்த்த பின்னர், வெகுஜனம், "இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்" என நிச்சயம் நினைக்கும் .... போராட்டத்தை பற்றி மட்டுமல்ல.... படத்தை பற்றியும் கூட...
அல் கொய்தாவிற்க்கும் தாலிபான்களுக்கும் எதிரான படம்தான் . இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. இஸ்லாம் மதம் பற்றியும்...இந்திய இஸ்லாமியர் பற்றியும் எந்த கருத்துக்களோ... விமர்சனங்களோ இல்லை. இதில் வில்லன்களாய் சித்திரிக்கபட்டிருப்பவர்கள் அல் கொய்தா அமைப்பினரே தவிர இஸ்லாமிய மதம் அல்ல. இந்த படம் சட்டபூர்வமாய் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, படம் பார்த்த பின்னர், வெகுஜனம், "இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம்" என நிச்சயம் நினைக்கும் .... போராட்டத்தை பற்றி மட்டுமல்ல.... படத்தை பற்றியும் கூட...
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், டெக்னிக்கல் விஷயங்கள், தரமான மேகிங் போன்றவற்றுக்காய் விஸ்வரூபம் தமிழில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான படம்
(+) பிளஸ்
வசனகர்த்தா கமல்
(+) பிளஸ்
வசனகர்த்தா கமல்
இயக்குனர் கமல்
நடிகர் கமல்
மேக்கிங்
ஒளிப்பதிவு
கலை
ஒலிப்பதிவு
(-)மைனஸ்
சாமானிய ரசிகனை எளிதில் புரிய வைக்காத திரைக்கதை.
லாஜிக் ஓட்டைகள்..... ஒரு வேலை இந்த படம் எவ்வித பிரச்னையும் இன்றி வெளி வந்திருந்தால் நிறைய பேர் இதன் லாஜிக் ஓட்டைகளை பற்றி அடித்து துவைத்து காயப்போட்டிருப்பர்கள். நல்லவேளை.... போராட்டம், பிரச்சனை என திசை மாறியதால் படம் தப்பித்து கொண்டது.
VERDICT : AN IMPORTANT FILM IN TAMIL FOR TECHNICAL ASPECTS
RATING : 5.9 / 10.0
EXTRA பிட்டுகள்
வேளந்தாவளம் தனலட்சுமி டாகீஸ் தீடிரென சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு மாறியதை அந்த ஊர் சேட்டன்களும் , ஏட்டன்களும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். இதுவரை அந்த தியேட்டர் கேட்டில் ஹவுஸ் புல் போர்டை அவர்கள் பார்த்ததே இல்லையாம்.
RATING : 5.9 / 10.0
EXTRA பிட்டுகள்
வேளந்தாவளம் தனலட்சுமி டாகீஸ் தீடிரென சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு மாறியதை அந்த ஊர் சேட்டன்களும் , ஏட்டன்களும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். இதுவரை அந்த தியேட்டர் கேட்டில் ஹவுஸ் புல் போர்டை அவர்கள் பார்த்ததே இல்லையாம்.
தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த ஜாக்பாட்டை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள். ஒரு பத்து பேருக்கு மட்டுமே கவுன்ட்டரில் 100 ரூபாய் டிக்கெட். மற்றெதல்லாம் ப்ளாக்கில் 300 - 400 என பறந்தது. வசூலான தொகையில் நிச்சயம் ஒரு மினி பட்ஜெட் மலையாள படமே எடுக்கலாம்
தியேட்டர் பக்கம் இருக்கும் TAILOR கடை, ஹோட்டல், ஒர்க்ஷாப் என எல்லா இடங்களிலும் ப்ளாக் டிக்கெட் விற்பனை அமோகம். நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருந்தவர்கள் பணம் பற்றி கவலை படாமல் படம் பார்ப்பது ஒன்றே லட்சியம் என நினைத்ததால் வந்த நிலை
வகுப்பு வித்தியாசமின்றி கிடைத்த இடத்தில் எல்லாம் அமர்ந்து, நின்று படம் பார்த்து தங்கள் லட்சியத்தை நிறைவேற்றி கொண்டார்கள் சினிமா ரசிகர்கள்.
I appreciate your efforts in seeing this movie and giving us a nice review. Thanks for all.
ReplyDeletethanks mr.mail ravanan
ReplyDeleteநேர்மையான விமர்சனம்!
ReplyDeleteதெள்ளத்தெளிவான நடையில் அழகான விமர்சனம்...!
ReplyDeleteSuperb!
ReplyDeletehi mathurai azhagu,
ReplyDeletethanks for your comments.
Mano
hi tamil amuthan
ReplyDeletethanks for your comments.
Mano
hi kozhi payan,
ReplyDeletethanks for your comments.
Mano
நீங்கள் விமர்சனத்தை படித்தேன் நண்பரே... உங்கள் விமர்சனத்தை படித்ததில் ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது. போராட்டங்களும் தடைகளும் தான் மக்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டது என்று நினைக்கிறேன்.
ReplyDelete//இந்த படமும் அல் கொய்தாவிற்க்கும் தாலிபான்களுக்கும் எதிரான படம்தான் . இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. இஸ்லாம் மதம் பற்றியும்...இந்திய இஸ்லாமியர் பற்றியும் எந்த கருத்துக்களோ... விமர்சனங்களோ இல்லை. இதில் வில்லன்களாய் சித்திரிக்கபட்டிருப்பவர்கள் அல் கொய்தா அமைப்பினரே தவிர இஸ்லாமிய மதம் அல்ல.// - அப்படியானால் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இசுலாமியர்கள்தான் தீவிரவாதத்தை ஆதரித்துத் தங்கள் மதத்தைத் தாங்களே இழிவுபடுத்துகிறார்கள்.
ReplyDeleteதாலிபான்களுக்கு அல்கொஇதாவினருக்கு உங்களுக்கு வித்யாசம் தெரியவில்லை. மெத்த படித்த மேதாவியான் உங்களுக்கே இந்த தடுமாற்றம் . படிக்காத பாமரனுக்கு எதனை பேருக்கு அல்கொஇதாவையும் , தாலிபானையும் தெரியும்? இந்த படத்தை பார்த்த பின் அவனுக்கு பக்கத்துக்கு வீட்டு காதற் பாயையும் , கறிக்கடை ஜாகிர் உசேன் பாயையும் காட்டு மிராண்டி போல பார்க்க தோன்றும்.
Deleteதீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே அதானே. இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.
ReplyDeleteநேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.
ReplyDeleteபள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.
அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.
கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே அதானே. இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.
ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.
மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.
இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?
ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?
கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .
இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.
ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .
எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .