நொறுக்கு தீனி -6 (10.06.12)

அம்பாள் நகர்


சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு. கொஞ்சமே கொஞ்சம் குறுகலான சாலை. அதில் எதிரும் புதிருமாக மீன் பாடி வண்டியிலிருந்து டேங்கர் லாரி வரை பயணிக்கிறது.  அதற்க்கு நடுவே என்னை போன்ற பாதசாரிகள் ஒரு ஆயிரம் பேர். அதிலும் மாலை வேளையில் ஒரு வாக் போய் பாருங்கள் பிரதான சாலை முடிவிலிருந்து மெயின் ரோடு வந்து சேர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிறது. (ஆனால் வெறும் ஐந்து நிமிடங்களில் கடந்து விடக்கூடிய தூரம்தான்). எப்போதுமே திருவிழா கூட்டம்.  இடையே, சில பல பெண்கள் ஹாஸ்டல்கள் வேறு இருப்பதால்... அதில் வேறு  கவனம் தொலைத்து.. ஹி... ஹி... டாபிக் மாறுகிறது. ஆமாங்க.. சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு


 விஸ்வரூபம்   - முதல்  பார்வை 








பார்த்தவுடன் புருவம்  உயர்த்த  வைக்கும்  புகைப்படம். இன்னும்  இந்த   ஆள்   எதைத்தான்   மிச்சம்   விட்டு   வைப்பார்   என  தெரியவில்லை.  பார்வையில் அத்தனை  நளினம் அது பக்கத்தில் நிற்கும் ஆண்ட்ரியாவிடம் கூட இல்லாதது ஒரு நகை முரண். ஆனால் ட்ரைலர் தான் கொஞ்சம் பீதியே கிளப்புகிறது. கமலின் இயக்கத்தை பொறுத்தவரை ஹே ராம் ஆகட்டும் சண்டியர் ஆகட்டும்... குழப்பமான திரைகதையே கூட நன்கு தெளிவாய் சொல்ல முயற்சித்திருப்பார். அது விஸ்வரூபதிலும் தொடரலாம். all the best for a good cinema.




தத்து பித்து




 ஒரு ஏ.சி வாங்கவேண்டும் அல்லது ஒரு கார் வாங்க வேண்டும்  என்கின்ற எண்ணத்தை  எனக்குள் விதைப்பது எது? அதிகப்படியான வரவா... அல்லது சமூகத்தில் நாமும் ஒரு தரமான நிலைக்கு வரவேண்டும் என்கின்ற சுய முன்னேற்ற முயற்சியா... அல்லது   சூழ்நிலையா.... முதலாவது,  நான் வாங்கும் சம்பளத்திற்கு   ஒத்து வராத விஷயம். பத்தாவது தேதி கடப்பதற்குள் பேங்க் பேலன்ஸ் கரைந்துவிடுகிறது கடலில் கொட்டிய உப்பு போல. ரெண்டாவது.. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய செய்யவே அடுத்த அத்தியாவசிய தேவை காலிங் பெல் அடிக்காமலேயே கதவை தட்டி விடுகிறது. அதனூடே கட்டி புரண்டு சண்டையிட்டு முடிப்பதற்குள் அடுத்த மாதம் வந்து விடும். அப்புறம் என்ன.. முதலில் இருந்து... வாடகை... மளிகை.. பால்... தண்ணி... இதில் எங்கே சமூகத்தில் நம்  முன்னேற்றத்தை பற்றி யோசிக்கிறதாம். மூன்றாவது... சூழ்நிலை.. இப்போதிருக்கும் நம் வாழ்க்கை முறையில் இதுதான்  ஒரு பொருள்  அல்லது சேவைக்கான தேவையே அதிக  அளவு  தீர்மானிக்கிறது என்பது அடியேனின் கருத்து. வாங்கும் தகுதியோ வசதியோ இல்லாவிடினும் வாங்க தூண்டும் சூழ்நிலைகளை நாம் சந்தித்து கொண்டேதான் இருக்கிறோம். சரியான சமயத்தில் ஒரு போக்குவரத்து வசதி அமையாமல் போகும் நேரத்தில்... குடும்பத்துடன் நெரிசலில் பயணம் செய்ய நேரும் நரக நேரங்களில்... குழந்தை... வெக்கையின் வலி தாங்காமல் தூக்கம் தொலைத்து அழ ஆரம்பிக்கும் இரவு பொழுதுகளில்.. . இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலைதான் நம்மை வாங்க தூண்டுகிறது... கிரெடிட் கார்டு அப்ளிகேஷன்களில் கையப்பம் இட வைக்கிறது. ஆடம்பரமான விஷயங்கள் கூட அத்தியாவசியமான தேவைகள்  ஆகி விட்டதுதான் இந்த  உலகத்தின் வளர்ச்சியா...?


விகடன் பக்கம்

அனுபவங்கள்... அனுபவங்கள்... வித விதமான ரக ரகமான அனுபவங்கள்... அதுதான் ராஜு முருகனை நாற்பது வாரங்களுக்கு மேலாகியும் அதே சுவாரசியம் குன்றாமல் எழுத  வைக்கிறது. இந்த வாரம் கோடை விடுமறை நாட்களை பற்றி பகிர்ந்து கொண்ட வட்டியும் முதலும் அவ்வளவு அழகு. எல்லோருடைய சிறு வயது கோடை விடுமறை தினங்களை, திரும்ப நினைவு கூற வைத்து பெருமூச்சு விட செய்தது. அதிலும் அந்த கடைசி வரி " நான் கடவுளாக இருந்திருந்தால் அவளுக்கு பரிசளித்து இருப்பேன்... இப்போதே இன்னொரு கோடை விடுமுறையே!    என்பது கவிதை...


மஸ் எழுதியிருக்கும் " உங்களையும் தாக்கலாம் இந்த நோய்"  மருத்துவர்களுக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் உள்ள உறவை புட்டு புட்டு வைத்து அதன் பலி ஆடுகள்  பொது ஜனமாகிய நாம்தான் என சுருக்கென ஊசி குத்துகிறது.  இதே விஷயத்தைதான் சத்யமேவ ஜெயதே வில் அமீர் கான் விமர்சித்து டாக்டர்களின் கண்டனத்திற்கு ஆளானார். இப்போது விகடன்.  மக்களுக்கு சேவை செய்யும் மருத்தவ துறை இந்த அளவிற்கு சீர் கெட்டு போனதற்கு யார் காரணம் என அலசினால்...  ஒரு மெடிக்கல் சீட்டிற்கு ஐம்பது லட்சம் வரை நிர்ணயிக்கும் நம் அரசியல்வாதிகளும் .. அவர்களின் பினாமிகளின் பேரில் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களும்தான்... அதற்க்கு மேல் என்றாலும் தர தயார் என்னும் நம் சமூகமும்தான்  என்றாகிறது.  பட்டர்ப்ளை EFFECT என்பது இதுதானோ ?





பெங்களூர் சொர்ணக்கா


பெங்களூரில் தன் காதலனை கொலை செய்ய ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையே ஏவி  விடும் அளவிற்கு ஒரு கல்லூரி பெண் சொர்ணக்கவாக மாறியிருக்கிறார்.  பெண்களை பற்றிய நம் மதிப்பீடுகளின் அளவு தாறுமாறாக மாற்றமடைந்து வருவதற்கு என்ன காரணம். ஊடகமா.. கலாச்சார மாற்றமா... எதுவாக இருந்தாலும் நிலைமை ஆரோக்யமாக இல்லை. தவறு செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல்.. எல்லா தவறுகளையும் செய்து விட்டு.. அதிலிருந்து தப்பிக்க... பின் விளைவுகளை பற்றி ஆராயாமல் மேலும் மேலும் மோசமான தவறுகளை செய்து இப்போது களி  தின்னும் அவலத்திற்கு உள்ளாகும் போதாவது புத்திக்கு உறைக்குமா... நாம் செய்தது தவறு என்று...?


கடமையுணர்ச்சியும்... விசுவாசமும்...

மேட்டுப்பாளையம்  காரமடை அருகே... ஒரு பெட்ரோல் பங்க் மேலாளர் வங்கியில் கட்டுவதற்காக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு பைக்கில் சென்றுகொண்டிருக்க... பின்னால் வேனில் வந்த கும்பல் ஒன்று வண்டியோடு அவரை இடித்து விட்டு பணத்தை திருடி செல்ல முயன்றிருக்கிறது. வேன் இடித்து கீழே விழுந்தவுடன் பணத்தை அவரிடம் இருந்து பிடுங்க முயற்சிக்கையில் அவர் தர மறுக்க துப்பாக்கியே காட்டி சுட்டு விடுவதாக மிரட்டியிருக்கிறார்கள். அந்த சூழ்நிலையிலும், உயிர் போனாலும் பரவாயில்லை பணத்தை தர மாட்டேன் என அந்த மனிதர் மறுக்க.. துப்பாக்கியால் அவர் காலில் சுட்டிருக்கிறார்கள்..  இதற்குள் அந்த வழியில் வந்தவர்கள் இந்த கொள்ளையே கண்டு தடுக்க முயற்சிக்க அந்த கும்பல் பணத்தை விட்டு விட்டு வேனில் தப்பியோடியிருக்கிறது. சினிமா போல நிகழ்ந்த
இந்த சம்பவத்தில்  நாம் கற்றுக்கொண்ட பல விஷயங்கள்... வெகு நாட்களாக நன்கு திட்டமிடப்பட்ட கொள்ளையர்களின் முயற்சியும்... உயிரை விட தன் முதலாளியின் பணம் முக்கியம் என விசுவாசம் காட்டிய அந்த ஊழியரின் கடமையுணர்ச்சியும்...   கண்ணுக்கு முன் நடக்கும் தப்பை கண்டவுடன், கொள்ளையர்கள்  துப்பாக்கி வைத்திருந்தாலும் அதை தடுக்க முற்சித்த சில மனிதர்களின் வீரத்தையும்... மனித நேயத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும்... இன்னமும் இந்த கொலை கொள்ளை சம்பவங்கள்... குறையாமல்... அதிகரித்துக்கொண்டே போவதுதான் நாளைய தினத்தை ஒரு வித பயத்துடன் எதிர்கொள்ள வைக்கிறது. 


இசை
தமனுக்கும் L.R. ஈஸ்வரிக்கும் ஒரு நல்ல அலைவரிசை செட்டாகியிருக்கிறது. கலசா கலசா பாடலுக்கு பின் தடையற்க தாக்க படத்தில் வரும் "நான் பூந்தமல்லிதான்" பாடல் சரியான குத்து பரோட்டா.

Comments

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....