வழக்கு எண் 18/9 - விமர்சனம்
வாழ்வியல்
யதார்த்தங்களை மீறிய மிகைபடுத்தப்பட்ட சம்பவங்களும், கற்பனை கூட செய்து
பார்க்க முடியா தனி மனித சாகசங்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
தமிழ் சினிமா.. இந்த பொய் பிம்பங்கள் யாவும் உண்மை என நம்மை நம்ப வைத்து
நம் மூளை மழுங்க செய்து, அதன் போதையிலேயே கனவில் வாழ்க்கை நகர்த்த வைக்கும்
வியாபார சினிமா தந்திரங்களுக்கு மத்தியில் இந்த மாதிரி படங்கள் கடவுள்
போல... காணக் கிடைக்கா வரம். தரையில் கால் வைத்து நடப்பதுதான்
யதார்த்தம். இந்த படைப்பு உங்கள் கை விரல் பிடித்து இரண்டரை மணி நேரம்
வாழ்வின் யதார்த்த அழகியலையும், அவலத்தையும் ஒருங்கே காட்டிச்செல்கிறது.
ஒரு
படத்தின் தரம் என்பது, ஐம்பது கோடி, நூறு கோடி பட்ஜெட், ஸ்டார்
வேல்யு, ஹை டெக் டெக்னாலஜி, வெளிநாட்டு லொக்கேஷன்கள் போன்றவைதான் என
தீர்மானிக்கும் கூட்டங்களுக்கு நடுவே, எந்த விதமான பிரம்மாண்டங்களும்,
ஸ்டார் வேல்யுவும் இன்றி, அறிமுக நடிகர்களை கொண்டு, அற்புதமாக கதை
சொல்லியிருக்கும் பாலாஜி சக்திவேல் உலக சினிமா இயக்குனர்கள் வரிசையில்
தானும் வரும் தகுதியே வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
விகடனில், "ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும் ? என்கின்ற கேள்விக்கு... மஹ்சன் மக்மல்பப் எனும் ஈரானிய இயக்குனர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன... "மக்களை பற்றி பேசுகிற எந்த படமும் நல்ல படம்தான்". ஒரு சூப்பர் ஹீரோ.. அவர் செய்யும் குரங்கு சேட்டைகள், சாதனைகள், வில்லன்களை துவம்சம் செய்தல்.. கிடைக்கின்ற இடைவெளியில், வெளுப்பான ஹீரோயினின் இடை வளைத்து காதல் செய்யும் கன்றாவி படங்களுக்கு மத்தியில்.. ஹீரோ, ஹீரோயின் என எந்த விதமான அடையாளங்களும் இன்றி, எளிமையான மனிதர்களை பற்றி பேசும் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆவணம்.
ஒரு பெண், முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்படுகிறாள், அதனை தொடர்ந்து வரும் போலீஸ் விசாரணை பயணத்தில், ஒரு ஏழையின் காதலும், பணத்திமிர் பிடித்த ஒரு வர்கத்தின் குரூரமும் ஒரே புள்ளியில் இணைய.. முடிவு என்னவென்பதே கதை.
மிக எளிமையான கதைதான்..... ஆனால் திரைக்கதையில் அதற்காக மெனக்கெட்டிருக்கும் உழைப்புதான்... ஷங்கர் படங்களிலும் கண்டிராத ஒரு பிரமிப்பை தருகிறது. முன் பாதியில் நிகழும் சம்பவங்கள் யாவும், பிற்பாதியில் வேறொரு பார்வையில் கமல்ஹாசனின் விருமாண்டி பட ஸ்டைலில் அட்சரம் பிசகாமல் மீண்டும் ஒரு முறை கடந்து போவது அபாரம்.
எதிர்பார்ப்புகளால் நிரம்பியதுதான் மனித வாழ்க்கை.. இப்படத்தில் வரும் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது..... காதல்... காமம்.... அங்கீகாரம்.... அளவில்லாத பணம் என்று.... எல்லாம் முடிந்து வீழ்ந்த பின்னும்.. காதல் மட்டுமே அப்படியே மிச்சமிருப்பதாய் நம்மை உணரசெய்யும் அந்த இறுதிக்காட்சி கவிதை.
ஒரு மழை தூறும் சாயங்கால வேளையில், பால்கனியில் அமர்ந்துகொண்டு, காதல் மனைவி போட்டுகொடுத்த அற்புதமான தேநீரை சுவைத்துக்கொண்டே நா. முத்துகுமாரின் காதல் கவிதைகளை படிக்கும் போது கிடைக்கும் ஒரு சுகானுபவம், " ஒரு குரல் கேட்குது முன்னே" பாடலின் விஷுவல் கவிதைகளை பார்க்கும்போதும் கிடைக்கிறது. படத்தில் இம்மாதிரி அழகிய காற்று போல நம்மை கடந்து செல்லும் விஷயங்கள் ஏராளம்.
எதிர்பார்ப்புகளால் நிரம்பியதுதான் மனித வாழ்க்கை.. இப்படத்தில் வரும் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது..... காதல்... காமம்.... அங்கீகாரம்.... அளவில்லாத பணம் என்று.... எல்லாம் முடிந்து வீழ்ந்த பின்னும்.. காதல் மட்டுமே அப்படியே மிச்சமிருப்பதாய் நம்மை உணரசெய்யும் அந்த இறுதிக்காட்சி கவிதை.
ஒரு மழை தூறும் சாயங்கால வேளையில், பால்கனியில் அமர்ந்துகொண்டு, காதல் மனைவி போட்டுகொடுத்த அற்புதமான தேநீரை சுவைத்துக்கொண்டே நா. முத்துகுமாரின் காதல் கவிதைகளை படிக்கும் போது கிடைக்கும் ஒரு சுகானுபவம், " ஒரு குரல் கேட்குது முன்னே" பாடலின் விஷுவல் கவிதைகளை பார்க்கும்போதும் கிடைக்கிறது. படத்தில் இம்மாதிரி அழகிய காற்று போல நம்மை கடந்து செல்லும் விஷயங்கள் ஏராளம்.
ஸ்டில் காமெராவில் எடுக்கப்பட்டாலும், அதன் அழகும், நேர்த்தியும் அவ்வளவு
தரம். புதுமுகங்களா... என வியந்து ஆச்சரியப்படும் அளவிற்கு, படத்தில்
வாழ்ந்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவை செதுக்கப்பட்ட விதமும்...
சிற்பி கையில் கிடைக்கும் போதுதான் கல் சிலையாகிறது.
பின்னணி இசை உறுத்தாமல் சென்றாலும், அந்த இசை கூட இல்லமால் படம் நகர்ந்திருந்தால் இன்னமும் உயரம் தொட்டிருக்குமோ என சின்ன சந்தேகம். ஆனால் அது ரொம்ப கஷ்டம்.... தமிழர்களாகிய நமக்கு சந்தோஷமாய் இருந்தாலும் பாட்டு வேணும். செத்தாலும் ஒப்பாரி வேணும்.
வருடத்திருக்கு ஒரு படம் கொடுத்தாலும்... பல நூறு வருடங்கள் கழித்தும் பேசக்கூடிய படங்களாய் கொடுக்க முயற்சிக்கும் பாலாஜி சக்திவேலுக்கு அழுத்தமான கை குலுக்கல்கள்.. அதி அற்புதமான வாழ்த்துக்கள்.
(+) பிளஸ்
திரைக்கதை
கதாபாத்திரங்கள்
யதார்த்தம்
வசனங்கள்
ஒளிப்பதிவு
(-) மைனஸ்
பின்னணி இசை உறுத்தாமல் சென்றாலும், அந்த இசை கூட இல்லமால் படம் நகர்ந்திருந்தால் இன்னமும் உயரம் தொட்டிருக்குமோ என சின்ன சந்தேகம். ஆனால் அது ரொம்ப கஷ்டம்.... தமிழர்களாகிய நமக்கு சந்தோஷமாய் இருந்தாலும் பாட்டு வேணும். செத்தாலும் ஒப்பாரி வேணும்.
வருடத்திருக்கு ஒரு படம் கொடுத்தாலும்... பல நூறு வருடங்கள் கழித்தும் பேசக்கூடிய படங்களாய் கொடுக்க முயற்சிக்கும் பாலாஜி சக்திவேலுக்கு அழுத்தமான கை குலுக்கல்கள்.. அதி அற்புதமான வாழ்த்துக்கள்.
(+) பிளஸ்
திரைக்கதை
கதாபாத்திரங்கள்
யதார்த்தம்
வசனங்கள்
ஒளிப்பதிவு
(-) மைனஸ்
ஞாபகமில்லை.
VERDICT : தமிழ் சினிமாவிற்கும் நமக்கும் ஒரு முக்கியமான படம் + பாடம்.
RATING : 6.5/10.0
EXTRA பிட்டுகள்
தம்பதி சகிதமாய் படம் பார்ப்பதற்கும், நண்பர்கள் சூழ படம் பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். கணவன் மனைவி சகிதம் அமர்ந்து பார்ப்பதில் நிறைய சௌகரியங்களை இழக்க வேண்டியதாயிருக்கிறது. விசில் அடிப்பது, வாய் விட்டு சிரிப்பது... " மாமா பட்டாசுடா.. என நம் இன்ஸ்டன்ட் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள்தான் உத்தமம். இதை பற்றி மேற்கொண்டு எழுதினால் இரவு போஜனம் கிடைக்காது என்பதால் இத்தோடு ஸ்டாப்.
நேற்று
உதயத்தில் . . படம் சீரியசாக நகர்ந்து கொண்டிருக்க.. ஒரு காட்சியில்..
அந்த ஸ்கூல் பெண்ணின் அம்மா " ஆர்த்தி, I GOT PROMOTION" என சொல்ல, அடுத்த வினாடியே... "SHE GOT ABORTION" என பதிலுக்கு ஒரு வால் பையன் தியேட்டரில் கமெண்ட் அடிக்க... சரியான கிளாப்ஸ்.... டைமிங் பன்ச் அடிப்பதில் தமிழன் தமிழன்தான். தம்பதி சகிதமாய் படம் பார்ப்பதற்கும், நண்பர்கள் சூழ படம் பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள். கணவன் மனைவி சகிதம் அமர்ந்து பார்ப்பதில் நிறைய சௌகரியங்களை இழக்க வேண்டியதாயிருக்கிறது. விசில் அடிப்பது, வாய் விட்டு சிரிப்பது... " மாமா பட்டாசுடா.. என நம் இன்ஸ்டன்ட் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள்தான் உத்தமம். இதை பற்றி மேற்கொண்டு எழுதினால் இரவு போஜனம் கிடைக்காது என்பதால் இத்தோடு ஸ்டாப்.
இப்படத்திற்க்கு பின்னணி இசை இல்லாமல் எடுத்திருந்தால் இன்னும் உயரத்திற்க்கு சென்றிருக்கும் என்பதை எனது பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.
ReplyDeleteதியேட்டர் அனுபவத்தோடு படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்ல விமர்சனம்..
ReplyDeleteNice Review ....
ReplyDeletemano touch.
ReplyDeleteMano,
ReplyDeleteVikatan 55/100
HAI ULAGA SINIMA RASIGAN,
ReplyDeleteHAI KOVAI NERAM
HAI THANGA AND PONSIVA,
THANKS FOR YOUR COMMENTS