மிக எதிர்பார்ப்புக்குரிய 10 படங்கள்
10.கும்கி
வனமும் வனம் சார்ந்த விஷயங்களும் எப்போதுமே அலுக்காதவை... காட்டுக்குள் ஒரு ட்ரெக்கிங் போகும் உற்சாகத்தை கொடுத்த மைனாவின் கதை களம்தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதே குளு குளு மலை சாரலின் பின்னணியில் பிரபு சாலமனின் அடுத்த படம். வித்தியாசமான முயற்சிகளுக்காக மெனக்கெடும் பிரபு சாலமனுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றி மைனாவின் மூலமாய் கிடைத்ததை கும்கி தக்க வைத்துக்கொள்ளுமா என்பதை பார்ப்போம். கதையின் முடிவு ட்ராஜிடியாய் இருக்க வேண்டும் என்பதற்காக... கிளைமாக்சில், ஹீரோயினை... யானை தூக்கி வீசி பந்தாடாமல் இருந்தால் சரி.
வனமும் வனம் சார்ந்த விஷயங்களும் எப்போதுமே அலுக்காதவை... காட்டுக்குள் ஒரு ட்ரெக்கிங் போகும் உற்சாகத்தை கொடுத்த மைனாவின் கதை களம்தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதே குளு குளு மலை சாரலின் பின்னணியில் பிரபு சாலமனின் அடுத்த படம். வித்தியாசமான முயற்சிகளுக்காக மெனக்கெடும் பிரபு சாலமனுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றி மைனாவின் மூலமாய் கிடைத்ததை கும்கி தக்க வைத்துக்கொள்ளுமா என்பதை பார்ப்போம். கதையின் முடிவு ட்ராஜிடியாய் இருக்க வேண்டும் என்பதற்காக... கிளைமாக்சில், ஹீரோயினை... யானை தூக்கி வீசி பந்தாடாமல் இருந்தால் சரி.
09.தாண்டவம்
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் விக்ரமிற்கு இந்த படமாவது ஆறுதலை தருமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. என்னதான் உயிரை கொடுத்து நடித்தாலும் நடிக்கிற படங்கள் எல்லாம் பப்படம் ஆகிக்கொண்டு வருவதை சீயான் உணர்ந்திருப்பார் போல... அதுதான் ஷங்கரை தேடி சென்று வாய்ப்பை கேட்டு பெறுமளவிற்கு செய்திருக்கிறது. சினிமாவில் ஒரு ஹிட் எல்லாவற்றையும் புரட்டி போட்டு விடும். மதராசபட்டினத்தில் சுவாரசியமான திரைக்கதை செய்த மேஜிக், அதற்க்கு ஈடுகொடுத்த ஜி.வீ பிரகாஷ் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என அதே டீம் இதிலும் கை கோர்த்திருப்பதால் வெற்றி வசமாகும் என்று நம்பலாம். எல்லாவற்றிற்கும் மேல் அனுஷ்கா இருக்காங்க..... ஹி... ஹி...
08.பில்லா 2
MGR படுத்துக்கொண்டே தேர்தலில் ஜெய்த்தது போல அஜீத் நடந்து நடந்தே வெற்றியடைந்த முதல் பாகத்தில் அதன் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு உறுதுணையாய் இருந்த விஷ்ணுவர்த்தன் - நீரவ்ஷா கூட்டணி இதில் இல்லையென்றாலும் TRAILER கொடுக்கும் இம்பாக்ட் அதிர வைக்கிறது. உன்னை போல் ஒருவனில் கவனம் ஈர்த்த சக்ரி முழுசாய் இயக்கம் செய்திருக்கும் படம் என்பதால் ஆர்வத்திற்கு குறைவில்லை.
07.மாற்றான்
சூர்யா என்றாலே... "சரியான விடை.. உறுதிப்பணம் பத்தாயிரம் என சிரித்துக்கொண்டே HI டெசிபலில் முழங்கும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியே மறந்து ... மாற்றான் சூர்யாவை ரசிக்க முடியுமா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு கே.வீ ஆனந்தின் தலையில் வந்து அமர்ந்திருக்கிறது. ஹீரோக்களை நம்பாமல் ஸ்க்ரிப்ட்டை நம்பும் இயக்குனர் என்பதால் வெற்றி வசமாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
06.துப்பாக்கி
முந்தைய படம் தமிழர்களை எந்தளவிற்கு புல்லரிக்க வைத்தது என்பதை அதன் நெகட்டிவ் ரிசல்ட்கள் அதன் இயக்குனர்க்கு நன்கு உணர்த்தியிருக்கும். பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை. நன்றாக தயாரித்த படைப்பு விளம்பரம் இல்லாமலேயே வெற்றியே பறிக்கும் என்பதை ஏ.ஆர். முருகதாஸ் உணர்ந்திருந்தால் இந்த படம் நிச்சயம் நமக்கு செம தீனிதான். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என்பது இப்படத்தின் மதிப்பை இரண்டுபங்கு உயர்த்துகிறது.
முந்தைய படம் தமிழர்களை எந்தளவிற்கு புல்லரிக்க வைத்தது என்பதை அதன் நெகட்டிவ் ரிசல்ட்கள் அதன் இயக்குனர்க்கு நன்கு உணர்த்தியிருக்கும். பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை. நன்றாக தயாரித்த படைப்பு விளம்பரம் இல்லாமலேயே வெற்றியே பறிக்கும் என்பதை ஏ.ஆர். முருகதாஸ் உணர்ந்திருந்தால் இந்த படம் நிச்சயம் நமக்கு செம தீனிதான். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என்பது இப்படத்தின் மதிப்பை இரண்டுபங்கு உயர்த்துகிறது.
05. இரண்டாம் உலகம்
புரிந்து கொள்ளவே முடியாத விசித்திர மனிதர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது படைப்புகளும் அவரை போலவே... கொஞ்சம் ஜீரணிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் வகை. இருந்தாலும் ஒவ்வொருமுறையும் அவரது அடுத்த படைப்பு குறித்த ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே நம்முள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதுத்தான் ஒரு படைப்பாளியின் மிக சிறந்த வெற்றி. இரண்டாம் உலகமும் சொல்ல முடியா ஒரு ஆர்வத்தை தூண்டியிருப்பதை மறுக்க முடியாது. முதன் முறையாக ஹாரிசுடன் கை கோர்த்திருப்பது ஒரு புதிய இசைக்கான வாய்ப்பாக இருக்க கூடும்... ரசிகர்களுக்கும்... முக்கியமாக ஹாரிசுக்கும்.
4 . முகமூடி
ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் கைகளுக்கு மாறி மாறி சென்று இப்போது முகமூடி U டிவி வசம். இத்தனைக்கும் மிஸ்கின் ஒன்றும் கண்டபடி பட்ஜெட் உயர்த்தி தயாரிப்பளருக்கு வாந்தி பேதி கொடுக்கும் ரகமல்ல... இருந்தும் அவரது எல்லா படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வாய்க்காதது ஒரு நல்ல படைப்பாளியின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தனது எல்லா படங்களிலும் நம்பும் படியான லாஜிக்கை பின்பற்றும் மிஸ்கின் இந்த சூப்பர் ஹீரோ படத்தில் லாஜிக்கிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்பதே இப்போதிய எதிர்பார்ப்பு.
3. நீதானே என் பொன் வசந்தம்
படம் ஆரம்பித்த போது இல்லாத பரபரப்பு... படத்தின் இசை ராஜா என்றவுடன் பற்றிக்கொண்டது... அப்போது இருந்து இப்போது வரை படத்தின் மீது அளவில்லாத காதலில் இருக்கிறார்கள் இசை ரசிகர்கள்... ஒரு நல்ல இசை.. ஜீவனை மயக்கும்... உருக்கும்... அதிலேயே கரைய செய்யும்.. அந்த அனுபவத்திற்காக..மூன்று தலைமுறையும் காத்துக்கொண்டிருக்கிறது... இன்ப தேன் வந்து பாய்ந்திடும் காதினிலே... என...
2.கடல்
மணிரத்னம் என்னும் மந்திரசொல்... ரஹ்மான் என்னும் மந்திர சாவி.. வார்த்தைகளில் சொல்ல இயலா சிலிர்ப்பும்... ஆர்வமும் ஒவ்வொரு மணி சார் படங்கள் தொடங்கும் போதும் தமிழ் ரசிகனுக்கு கிடைப்பவை. ஆனால் படம் பார்த்ததும் அது பணால் ஆவதுதான் தொடரும் சோகம். பிராந்திய மொழி நடிகர்கள்.. பிராந்திய தேசத்தில் திருநெல்வேலி பாஷை பேசுவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை வாத்தியாரே... மணி சார் படங்கள் என்றாலே ஷார்ட் அண்ட் ஸ்வீட் வசனங்கள்தான் ஹீரோ. சுஹாசினி வந்து அதற்கும் வேட்டு வைத்தார் முந்தைய படத்தில். எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ... அந்த அளவிற்கு பயமும் இருக்கிறது கடல் மீது... காப்பாற்றட்டும் கடவுள்.
1 . விஸ்வரூபம்
தமிழன் எதோ ஒரு புண்ணியம் செய்திருக்கிறான். அதனால்தான் கமல் மாதிரியான படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். புது புது பரிசோதனை முயற்சிகளால் தன்னையும் தன சொத்துக்களையும் கரைக்கும் கமல்... தன் ரசிகனுக்கு கொடுக்கும் புது புது அனுபவங்கள்தான் இன்னமும் கமல் மீது அதீத எதிர்பாப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறது. மார்க்கெட்டிங் சாகசங்களுக்காக ஹிந்தி இசையமைப்பாளர்களுடன் கை கோர்ப்பதுதான் ஒரு நெருடல். பார்க்கலாம்.. விஸ்வரூபம் என்ன மாதிரியான அனுபவத்தை கொடுக்கிறது என...
nice reviews... thanks to share... rishvan... http://www.rishvan.com
ReplyDeleteKamal a genious actor, but he is not a good cinema maker except Thevar Mahan, Guna etc. But we don't expect a film like Manmatham Ambu
ReplyDeleteVery nice comments. waiting for top releases
ReplyDeleteSantosh sivan's URUMI is missing
ReplyDeleteHAI RISWAN...
ReplyDeleteTHANKS FOR YOUR COMMENTS
HAI JIYA JI...
ReplyDeleteTHANKS...
நல்ல பார்வை.விஸ்வரூபம் தவிர.
ReplyDelete#தமிழன் எதோ ஒரு புண்ணியம் செய்திருக்கிறான். அதனால்தான் கமல் மாதிரியான படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். புது புது பரிசோதனை முயற்சிகளால் தன்னையும் தன சொத்துக்களையும் கரைக்கும் கமல்... தன் ரசிகனுக்கு கொடுக்கும் புது புது அனுபவங்கள்தான் இன்னமும் கமல் மீது அதீத எதிர்பாப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறது#
கமல் புண்ணியம் செய்தவர். அதனால்தான் கமல் பரிசோதனை என்ற பெயரில் நம்மை கொலை செய்யும் போதெல்லாம் சகித்து கொள்கிறோம்.
GOOD POST
ReplyDeleteAND "KUMKI' IS ALSO SAD MOVIE, HERO AND HEROINE WILL NOT DIE:
MAIN HERO OF THE FILM KUMKI ELEPAHANT WILL DIE ON CLIMAX;
WATCH IT VERY SOON
பட்டியல் எதிர்பார்ப்பைத் தூண்ட செய்கிறது. :-)
ReplyDeletehai sathish chella durai..
ReplyDeletethanks for your comments
hai samraj priyan...
ReplyDeletethanks for your comments