படிக்கின்ற வயதில், பிட்டு படம் பார்ப்பதற்கு நெஞ்சில் அசாத்திய தைரியமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் நிச்சயம் வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இல்லையென்றால் கூட பிட்டு பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைக்காது. தியேட்டரில் நல்ல பிட்டு ஓடுகிறது என்கின்ற செவி வழி செய்தி வந்தவுடனேயே ஆர்வக்கோளாறில் உடனே கிளம்பிவிடக்கூடாது. ஏனென்றால் அதே செய்தி நம் சொந்த பந்தங்களுக்கும் புயல் வேகத்தில் ரீச் ஆகியிருக்கும். தியேட்டர் வாசலிலோ, டிக்கெட் கவுன்டரிலோ, நம் சித்தப்பாவையோ, அப்பாவின் நண்பரையோ பார்த்து அதிர்ந்து அசடு வழிவது, ஒருவரிடம் ஒரு லட்சம் கடன் கேட்டு அசடு வழிவதை விட அசிங்கமானது அந்த காலங்களில். எவ்வளவோ திட்டமிட்டும், முகம் மறைத்தும், தைரியம் கொண்டு சம்பவ இடத்தை நெருங்கினாலும், பயம் ஒரு நாய் குட்டியே போல நம் கால்களுக்குள்லேயே சுற்றிக்கொண்டிருக்கும். அதற்க்கு ஏற்றார் போல், தியேட்டர் வாசலை நெருங்கியதுமே, பக்கத்துக்கு வீட்டு ரங்குடு மாமா, தோள் தொட்டு திருப்பி, "எங்கடா இந்த பக்கம்?" என்பார். "ப்ரென்ட் வீட்டுக்கு போறேன் மாமா " என சமாளித்தாலும், படவா... இந்த வயசிலேயே மலையாள
சினிமாவில் மெசேஜ் சொல்வது இரண்டு வகை. படம் முழுக்க நல்லவர்களையும்.. பாசிட்டிவான விஷயங்களையும் காட்டி நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்கின்ற படங்கள் ஒரு வகை. இன்னொன்று.. படம் முழுக்க கெட்ட விஷயங்களை காட்டி.. கிளைமாக்சில் கெட்டவன் கெட்டழிவான் என்பது. இதில் இயக்குனர் சாமி இரண்டாவது வகை. இவரின் முந்தைய படங்களான உயிர், மிருகம், இவற்றில் மிருகம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே என்னை மிரட்டிய படம் அது. ரொம்பவுமே யதார்த்தமான மேக்கிங்கும், கெட்டது செய்தால் அழிவு நிச்சயம் என்கின்ற கருத்தும், யாருமே எடுக்க துணியாத ஒரு கதையே எடுத்த தைரியமும் சாமியின் மீது ஒரு மரியாதையே உண்டாக்கியிருந்தது. அந்த நம்பிக்கையில் சிந்து சமவெளி பார்த்தேன். யானை தன் தலையில் மண் அள்ளி போட்டுக்கொள்வதை போல.. சாமி தன் தலையில் தானே ஆசிட் ஊற்றிகொண்டிருக்கிறார். சினிமா.. ஒரு சுதந்திரமான.. மனதில் நினைப்பதை வெளிப்படுத்த உதவும் ஊடகம். இயக்குனர் நாட்டில் நடக்கின்ற ஒரு தவறான விஷயத்தை சுட்டி காட்ட விரும்பியதில் எந்த தவறும் இல்லை. ஆனால்.. அதை சுட்டி காட்டிய விதத்தில் ஒரு நேர்மை இருக்கிறதா என்பதுதான் இந
பழனி - தமிழ் கடவுள் குடி கொண்டிருக்கும் புண்ணிய ஸ்தலம். தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம். வருடத்திற்கு 70 லட்சம் மக்கள் வந்து வழிபடும் இடத்தில் பக்தர்களிடம் வழிப்பறி கொள்ளை போல நூதன முறைகளில் பணம் பிடுங்கும் செயல்கள் இங்கு அதிகம். நமக்கு ஒரு கஷ்டம்னா, மன நிம்மதிக்காக கோயிலுக்கு போறோம். ஆனா அங்க போனா... ஊர்ல இருக்கிற அத்தனை கஷ்டமும் சுத்தி நின்னு டான்ஸ் ஆடினா எப்பிடி இருக்கும். அந்த நிலைமைதான்.. இங்கு வர்றவங்களுக்கு... முடிந்த வரை எச்சரிக்கையாக இருக்க சில குறிப்புகள். வழிப்பறி # 1 எதாவது ஒரு கடையில போய் பூஜை சமான் எல்லாம் வாங்கறீங்க, எல்லா பொருட்களையும் PACK பண்ணி கொடுத்துட்டு, 150 ரூபாய் சார் என்று சொல்லியபடியே அனுமார் வால் போல நீளமான ஒரு லிஸ்டை கொடுப்பார். லிஸ்டை CHECK பண்ணாமல் பணம் கொடுத்தால்.. பணம் போயே போச்.. ஒருவேளை நீங்கள் லிஸ்டை CHECK செய்தால்.. உங்களுக்கு உங்கள் தமிழ் மொழியே மறந்து போக கூடும். சாம்பிளுக்கு ஒரு லிஸ்ட். பூ - XXXXX பழம் - XXXXX சூடம் - XXXXX விபூதி - XXXXX கனி - XXXXX வாழை - XXXXX தேங்காய் - XXXX ஊது பத்தி - XXXX எலுமிச்சை -XX
தேடுதலே வாழ்க்கை.
ReplyDeleteஅருமையான வரிகள் தோழரே...
ReplyDeleteகவிதைகள் முடிவதேயில்லை! சூப்பர்!
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு மனோ!
ReplyDeleteதேடுங்க தேடுங்க இன்னும் நல்லா தேடுங்க...
ReplyDeleteதேடுடா தேடு :)
ReplyDeleteஅழகாத்தான் இருக்கு போட்டோ :)