கத்தி - விமர்சனம்
தொடங்குவதற்கு முன்... சாமி சத்தியமாய் நான் விஜய் ரசிகன் அல்ல.
சினிமாவை சினிமாவாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கும் பிடிக்கலாம்... இணையத்தில் கத்தி கத்தி நடக்கும் சண்டைகள் நிச்சயம் ஒரு சினிமாவுக்காக அல்ல... தனி நபர் மீது உள்ள வெறுப்போ... அல்லது தன் அதி புத்திசாலிதனத்தை பறைசாற்ற ஏற்படுத்திக்கொள்ளும் துடிப்போதான் சில நண்பர்களுக்கு இருக்கிறது. என்னென்ன குறைகள்... குற்றங்கள் கண்டுபிடிக்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தால் எந்த உலக சினிமாவாலும் அவர்களை திருப்தி படுத்த முடியாது.
ஹாலிவுட்டில் அமெரிக்க அதிபரையே வில்லனாக சித்தரித்து... வேற்று கிரக வாசிகளையும் நியூயார்க் நகர வீதிகளில் உலா வர வைக்கலாம்... எவனும் எதற்கும் கேள்வி கேட்பதில்லை... அவர்களை பொறுத்த வரை ஜஸ்ட் லைக் தட் அது ஒரு சினிமா அவ்வளவே... அதற்க்கு மேல் ஒரு இழவும் இல்லை அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது. ஒரே விஷயம் அவர்கள் எதிர்பார்ப்பது... படம் அவர்களை வசீகரிக்கிறதா... இல்லையா... அவ்வளவே...
கோலா குடிக்கும் இவன் விவசாயத்தை பற்றி பேசி நடிக்க என்ன தகுதி இருக்கிறது? ஒப்புக்கொள்கிறேன்... இயற்க்கை ஆர்வலர் நம்மாழ்வாருக்கு அந்த தகுதி இருந்தது... அவர் சொன்ன விஷயங்கள், எழுதிய புத்தகங்களை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்...? ஒருவேளை அவர் விவசாயம் பற்றி பேசி ஒரு திரைபடத்தில் நடித்திருந்தால் எத்தனை பேர் அதை பார்க்க தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருப்போம்.? மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் தூர்தர்ஷன் காலத்தில் ஒளியும் ஒலியும் போடுவதற்கு முன்னால் வரும் வயலும் வாழ்வை எப்படா இது முடியும் என்று எத்தனை பேர் திட்டி தீர்த்திருக்கிறோம்? என்னையும் சேர்த்துதான்.... நிச்சயம் வயலும் வாழ்வை விட ஒளியும் ஒலியும் ஒன்றும் பயனுள்ள நிகழ்ச்சி அல்ல... ஜஸ்ட் டைம் பாஸ்தான்... அது போலதான் சினிமாவும். உங்களை ... உங்கள் நேரத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு ஊடகம் அவ்வளவே... நீங்கள் பார்க்கும் இரண்டரை மணி நேரம் அந்த படம் உங்களை சந்தோஷப்படுத்தியதா என்பது மட்டும்தான் முக்கியம்... அந்த இரண்டரை மணி நேரத்திலும் ஒரு நிமிஷமாவது எதாவது ஒரு விஷயம் உங்களை சமூக நோக்கில் சிந்திக்க... யோசிக்க வைத்தால் அது போனஸ். கத்தி நிச்சயம் அதை செய்திருக்கிறது.
ஒரு சராசரி சினிமா ரசிகனை இந்த படம் நிச்சயம் திருப்தி படுத்தும். நம்ப முடியாத விஷயங்கள் படம் நெடுக தொடர்ந்தாலும் அதை ரசிக்கும்படி கொடுத்திருப்பதுதான் இந்த படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது.
விஜய் தனது நாலந்தர மசாலா படங்களில் இருந்து விலகி இப்படி கொஞ்சம் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலே போதும்... அவரின் சினிமா வாழ்க்கை நிச்சயம் ஜொலிக்கும்...
ஷார்ப்பான வசனங்கள்... துள்ள வைக்கும் இசை... ரசிக்க வைக்கும் மாஸ் சண்டை காட்சிகள் அதை எல்லாம் மீறி சமூகத்தில் நடக்கும் அவலங்களை சொல்ல முயற்சித்த வகையில் இந்த படம் பாஸ்தான்.
(+) பிளஸ்
வசனங்கள்
இயக்கம்
விஜய்
அனிருத்
முருகதாஸ்
(-) மைனஸ்
கதாநாயகி என்கின்ற விஷயம்
முதல் இருபது நிமிடங்கள்
லாஜிக்
VERDICT : நிச்சயம் பார்க்கலாம்...
RATING : 5.1 / 10.0
EXTRA பிட்டுகள்
முதல் நாள் காசி தியேட்டர்.... ஆர்வமிகுதி ரசிக குஞ்சு ஒன்று போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்து கொண்டிருந்தது... ஒரு மழை நாள் இரவில் பால் வாங்க மறந்து... மனைவியால் பால் வாங்க வெளியே துரத்தப்பட்டு... கடை கடையாக ஒரு பாக்கெட் பாலிற்கு பரதேசி போல அலைந்து கிடைக்காமல்... அன்றைய இரவு குழந்தையின் பசி அழுகையில் நரகமாய் கழிந்தது ஏனோ கண் முன்னே வந்து போனது. தமிழகத்தில்... சினிமா மீதான நம் பார்வையே வேறு....நடிப்பு அவர்கள் தொழில். நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் நமது எதிர்காலமாய் பார்ப்பதுதான் நாம் செய்யும் தவறு.
அருமையான விமர்சனம்
ReplyDeleteTks mr.anbazhagan....
ReplyDeleteபல நாட்கள் பிறகு உன் விமர்சனத்தை கண்டு ரசித்தேன்
ReplyDeleteஉங்கள் விமர்சனம் 'ஷார்ப்' பாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete