ரத்த சரித்திரம் -2 - விமர்சனம்
படம் முழுக்க யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டோ அல்லது சுட்டுக்கொண்டோ இருக்கிறார்கள். திரை முழுதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இரண்டு மணி நேரம் அமர்ந்து படத்தை பார்க்க முடிவதற்கு காரணம் வர்மாவின் கதை சொல்லும் ஸ்டைலும் அதற்க்கு உறுதுணையாய் இருக்கும் வசனங்களும்.
இரண்டரை மணி நேர முதல் பாகத்தை, முதல் 20 நிமிடத்தில் சுருக்கியதால் படம் ஆரம்பத்தில் தோட்டா வேகத்தில் பறக்கிறது. சூர்யாவின் வருகையும் அதற்க்கு பிறகான காட்சிகளும் இன்னமும் சூடு கிளப்ப இடைவேளை வரை ஒரே ரணகளம்தான்.
பிரதாப் ரவி என்னும் தனி மனித சாம்ராஜ்யத்தை வேரறுக்க நினைக்கும் சூர்யாவின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் அதற்க்கான விடையும் தான் இரண்டாவது பாகம். உண்மை சம்பவங்களை சுவாரசியமாக சொல்வதென்பது ஒரு சவாலான விஷயம். ஆனால் தனக்கு தோதான கிரௌண்ட் என்பதால் வர்மா இதில் பேயாட்டம் போட்டிருக்கிறார். முக்கியமாக சூர்யா கோர்ட்டில் தன்னை கொல்ல முயற்சிக்கும் எதிரிகளை கண்டுணர்வது முதல் அவர்களை வீழ்த்துவது வரை மிக டீடெய்லாக காட்சிபடுத்தியிருப்பதில் வர்மாவின் திறமை மின்னுகிறது. மற்ற படங்களில் எல்லாம் சட சடவென ஆக்க்ஷன் காட்சிகளை முடிக்கும் வர்மா இதில் நிறுத்தி நிதானமாய் செய்திருப்பதும் ரசிக்கும் படியே இருக்கிறது.
பரபரப்பான காட்சிகளும், எதிர்பாரா திருப்பங்களும் திரைகதையில் ஆளுமை செய்தால்... படத்தின் தீமுக்கேற்ற டார்க் கலர் டோனும், 180 டிகிரி கேமரா கோணங்களும், நுண்ணிய உணர்சிகளை காட்டும் மிக தெளிவான க்ளோஸ் அப் ஷாட்டுகளும் டெக்னிக்கல் சைடில் அதிகாரம் செய்கின்றன.
வசனங்கள் அத்தனையும் திருப்பாச்சி அரிவாள் கூர்மை. சிறையில் இருக்கும் சூர்யாவிடம் விவேக் பேசுமிடம் நல்ல உதாரணம். ஒரு டப்பிங் படத்திற்கு இவ்வளவு அருமையான வசனங்கள் எதிர்பாரா ஆச்சரியம்.
சூர்யா.... வாய்ப்பே இல்லை. ருத்ர தாண்டவம். கண்களில் பொங்கி வழியும் கொலை வெறியும், உடல் மொழியும் அத்தனை கச்சிதம். பழி வாங்கி முடித்த பின் காரை ஒட்டிக்கொண்டு வரும்போது ஸ்டீயரிங்கில் கைகளை அழுத்தி அழுத்தி அவர் காட்டும் முகபாவம் அத்தனை அற்புதம். மொத்த படத்தையும் தன் அசாத்திய நடிப்பால் மதுரை நாயக்கர் மஹால் தூண் போல தாங்குகிறார்.
கொஞ்ச நேரமே வந்தாலும் போலீஸ் அதிகாரியாக வரும் கன்னட நடிகர் சுதீப்பும் கை தட்டி விசில் அடிக்க வைக்கிறார்.
முதல் பாகத்தில் அழிச்சாட்டியம் செய்த விவேக் ஓபராய் இதில் அடக்கி வாசித்தாலும் தேர்ந்த நடிப்பால் மிளிர்கிறார்.
அரசியல் கொலைகளும், சூழ்ச்சிகளும் அரங்கேறும் திரைகதையில் சரியான கதாபாத்திர தேர்வும், வசனங்களும் அமைந்த விதத்தில் படம் பாஸ் மார்க் வாங்கினாலும் சிற் சிறு குறைபாடுகளால் முழுதும் வசீகரிக்க முடியாமல் போகிறது.
மிக முக்கியமாக நேட்டிவிட்டி. என்னதான் சூர்யா, பிரியா மணி இருந்தாலும் ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வு மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல கிளைமாக்ஸ்... விவேக் ஒபாராய் தீடிரென சூர்யாவை பார்க்கும் போது அடையும் அதிர்ச்சி படம் பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது.. ஏனென்றால் அதுவரை உண்மை பேசி வந்த இந்த படம் ஹீரோயிசத்திற்காக தடம் மாறுவது..(உண்மை கதையில் சூரியின் நண்பன்தான் பரிட்டல ரவியே கொல்வான்.ஆனால் அந்த நண்பனை கூட காட்டிக்கொடுத்து விடுவான் என பயந்து சூரி கொலை செய்ததாக உலவும் யூகங்கள் இங்கு உண்டு )
அப்புறம் படம் முழுக்க வன்முறை, கத்தி குத்துக்கள் இருந்தாலும் அந்த வன்முறையில் தெரிய வேண்டிய ஒரு அழகியல் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். அதென்ன வன்முறையில் அழகியல் என்று கேட்பவர்கள் புதுப்பேட்டை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்காக எனக்கு வன்முறை, ரத்த சகதிகள் பிடிக்கும் என்று அர்த்தமில்லை.
எனினும், இந்தப்படம் சூர்யாவுக்க்காகவும், வர்மாவின் மேக்கிங்குக்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.
(+) பிளஸ்
சூர்யா
வசனங்கள்
மேக்கிங்.
(-) மைனஸ்
குழந்தைகள், பெண்கள் பார்க்கமுடியாதது.
நேட்டிவிட்டி இல்லாதது
VERDICT : உண்மைக்கு மிக அருகிலான ரத்த சரித்திரம்..
RATING : 4.7 / 10.௦
EXTRA பிட்டுகள்
ஆர்வ கோளாறு காரணமாக முதல் நாளே பார்க்க வேண்டும் என்று காசி தியேட்டரில் பால்கனி கிடைக்காமல் முதல் வகுப்பில் ரிசர்வ் செய்ததில் கிடைத்த டிக்கெட் நம்பர் S-21,22,23. என் வாழ்கையில் நிறைய நாள் கழித்து ABCD சொல்லி பார்த்ததில்.. 19 வது எழுத்து. அதுதான் காசி தியேட்டரில் முதல் வரிசை. இடது ஈசானி மூலை. படம் பூராவும் பிதமாகன் விக்ரம் போல ஒரு மாதீரி தலை திருப்பி பார்த்ததில் உண்டான கழுத்து சுளுக்கு இன்னனும் நிவர்த்தியாகவில்லை.
அது சரி.. ரொம்ப ரத்தம் வந்ததோ?
ReplyDeletenice review!
ReplyDeleteraittu innum padam pakkala pathudren
ReplyDeleteபடம் இன்னும் பார்கல ...
ReplyDeleteNamakkku onnum puthusu illaila
ReplyDeleteபடம் ரத்தமயம் .........
ReplyDelete