Posts

Showing posts from August, 2010

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 2

Image
சென்னையில் துரந்தோ ரயிலை நெருங்கியதுமே மின்சாரம் போல அந்த அதிர்ச்சி எங்களை தாக்கியது. சார்ட்டில், 65 வயது ராஜாத்தி அம்மாளை தவிர மற்ற எல்லோருமே ஆண்கள். அட ராமா... எங்கள் கோச் முழுதுமே சேவல் பண்ணையாக காட்சியளிக்க,  சைட் அடிக்க ஒரு பிகர் கூட இல்லாத வருத்தத்தில் துரந்தோ ஏறினோம். இந்த இடத்தில் துரந்தோ ரயிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு நான் ஸ்டாப் ரயில்.  சென்னையில் கிளம்பினால் டெல்லி சென்று தான் நிற்கும். இடையில் சில ஸ்டேஷன்களில் நின்றாலும், யாரும் ஏற மாட்டார்கள். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கையில் காபி கோப்பையே பிடித்தவாறு ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டிருந்தேன். தீடிரென எதிர் ட்ராக்கில் ஒரு ரயில் கடக்க,  கடந்த வேகத்தில் கையில் இருந்த காபி கப் அப்படியே பாதியாய் மடங்கி என் உடை நனைத்தது. அந்த அளவு வேகம். அதிக பட்சமாக 160 KM வேகத்தில் செல்லும் என TTR குறிப்பிட்டார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காலை 6.40 க்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. சரியாக 28 மணி நேரத்தில் (10.40 AM) க்கு டெல்லி சென்றடைகிறது. இந்த ரயில் அதிக வேகம் செல்வதற்காக, ரயிலில் ஏகமாக எட

நான் மகான் அல்ல - விமர்சனம்

Image
 அப்பாவை கொன்றவர்களை பழி வாங்கும் மகன். எல்லா மொழிகளிலும் துணி கிழிந்து போகும் அளவுக்கு துவைத்து பிழிந்தெடுத்த கதை. ஆனால், இந்த படத்தின் வசீகரம் கதையில் அல்ல.. காட்சி படுத்துதலில். முதல்  படத்தில், அமைதியான  கிராமத்து காதலை மயிலிறகு தடவுவது  போல கதை சொன்ன சுசீந்தரனா இவர். நம்பவே முடியவில்லை  இந்த படத்தில் ராட்சசதனமாக இருக்கிறது இவர் கதை சொல்லியிருக்கும் விதம்.  ஒரு நல்ல இயக்குனருக்கு அடையாளமே... எந்த இடத்திலும் தன்னை அடையாளபடுத்தி கொள்ள முடியாதபடி வித விதமான கதை களங்களில் புகுந்து விளையாடுவதுதான்.  அந்த  வகையில், இரண்டாவது படத்திலேயே படு வித்தியாசம் காட்டிய  சுசீந்தரனுக்கு கோடம்பாக்கம் கோட்டையில் ஒரு சீட் நிச்சயம். WELL DONE  DIRECTOR ! வேலை இல்லாத ஹீரோ, பார்த்தவுடன் காதல் , அன்பான குடும்பம், இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்யும் கும்பல், அதனால் பாதிக்கப்படும் ஹீரோ குடும்பம், கிளைமாக்சில் பழி வாங்கும் படலம் என வழக்கமான டெம்ப்ளேட்  கதையமைப்பு என்றாலும் படத்தை ரசிக்க முடிவதற்க்கான காரணம், சரவெடி போல வெடித்துக்கொண்டு போகும் திரைக்கதையும், அதற்க்கு உறுதுணையாய் நிற்கும் இசையும், ஒள

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்பத்தூர் பையனும்... (18+) - 1

Image
வாய்ப்புகள் நம்மை தேடி வராது. நாம்தான் வாய்ப்புகளை தேடி போக வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை நம்புபவன் நான். ஆனால், டெல்லியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள HANDLOOM & HANDICRAFTS CORPORATION OF INDIA என்கின்ற அரசு சார் நிறுவனத்தில் ஒரு நேர்முக தேர்வுக்கு நான் அழைக்க படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை வீணடிக்க வேண்டாமென்று நினைத்து டெல்லி செல்ல அனுமதி பெற்று, போகும் போது ரயிலிலும் வரும் போது விமானத்திலும் வருவதாய் ஏற்பாடு செய்தேன்.  நேர்முக தேர்வுக்கு நான், எனது தம்பி பிரபு, பிரபுவின் நண்பன் பரமு ஆகிய மூவருடன்   பெயர் தெரியாத ஒரு முன்னூறு பேரும் அழைக்கப்பட்டிருந்தோம். எனது தம்பி ஏற்கனவே டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் நான் மட்டும் கோவையில் இருந்து கிளம்பினேன். பரமு சேலத்தில் என்னுடன் இணைந்து கொள்வதாக கூறி விட்டான்.  நேர்முக தேர்வு 23.08.10 திங்கள் மதியம். ஆனால் நாங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக சென்று டெல்லியே சுற்றுவதாய் ஒரு உயரிய நோக்கம் கொண்டிருந்தோம். சென்னை சென்று அங்கிருந்து மாற்று ரயிலில் (துரந்தோ எக்ஸ்பிரஸ்)  டெல்லி செல்வதாய் த

லீவ் லெட்டர்

நண்பர்களே..  ஒரு நேர்முக தேர்வுக்காக டெல்லி செல்வதால், பதிவுலகத்திற்கு 4 நாள் விடுமுறை.செவ்வாய் அன்று மீண்டும் உங்களை சந்திக்கிறேன். அது வரைக்கும் என் தொந்தரவு இல்லாமல் கொஞ்சம் ஜாலியா இருங்க..  மீண்டும் சந்திப்போம்.  நட்புடன், மனோ

உமா சங்கர் I.A.S

Image
  செய்கின்ற வேலைக்கு  நேர்மையாகவும், மனசாட்சிக்கு பயப்படுபவராகவும் இருக்க விரும்புபவரா நீங்கள். அப்படியானால் உங்களுக்கு அரசு உத்தியோகம் சரிபட்டு வராது. இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து, தேசிய அளவில் நல்ல  ரேங்கில் வந்து, இந்த நாட்டுக்கு தன்னால்  இயன்ற அளவு   ஏதேனும் நல்லது  செய்ய முயன்ற ஒரு IAS அதிகாரிக்கு  இப்போது கிடைத்திருப்பது தற்காலிக பணி நீக்கம். உண்மையான காரணங்கள் சத்தியமாக வெளி வர போவதில்லை. இதை பற்றிய நம் கேள்விகள் கொஞ்ச நாட்களில் எந்திரன் விளம்பர வெளிச்சங்களிலும், கிரிக்கெட் பரபரப்புகளிலும் நம்மால் மறக்கப்பட்டு விடும்.யார் எக்கேடு கெட்டு போனால் என்ன.. நம் வீட்டு குழாயில் தண்ணி வருகிறதா.. இரவானால் வீட்டில் பல்பு எரிகிறதா... அதுதான் நமக்கு முக்கியம். வாழ்க ஜனநாயகம்.

வம்சம் - விமர்சனம்

Image
ஒரு  இயக்குனருக்கு முதல் படமே மிக பெரிய  வெற்றிப்படமாக அமைந்து விட்டால்,  இரண்டாவது படம் கத்தி  மேல் நடப்பது போல. ஆனால்  பாண்டிராஜ் கத்தி மேல் அனாயசியமாக   ஒரு திருவிழாவே  நடத்தி ஆட்டம்  போட்டிருக்கிறார்.   ஒரு குறிப்பிட்ட  சமூகத்தை கதை களனாக கொண்டு, அந்த சமூகத்தின் உட் பிரிவுகளில் இருப்பவரிடைய உள்ள பகை, வஞ்சம், திருவிழா கலாச்சாரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை  நிறைய ஹோம் வொர்க் செய்து திரைக்கதையில்  கொடுத்திருக்கிறார் இயக்குனர்.  ஊரில் எல்லா விஷயத்திலும் தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நஞ்சுன்டான் மாஓசி வம்சத்தை    சேர்ந்த சீனிகண்ணு, தனக்கு போட்டியாய் இருக்கும் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாதவர் வம்சத்தை  சேர்ந்த கிஷோரை வஞ்சகமாக விஷம் வைத்து கொல்ல, இறந்து போன  கணவன் போல தன் மகனும் ரௌடியாக மாறி இறக்க கூடாதென  அஹிம்சையே போதித்து வளர்க்கிறார் அவன் அம்மா.  தன்னை யாரவது வெட்ட வந்தால் கூட ஓடி போய் தன் மாமாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஹீரோ, ஒரு கட்டத்தில்  தன் காதலிக்கு அதே சீனி கண்ணு ரூபத்தில்  பிரச்சனை வரும் போது திரும்பி நின்று எதிராளியின் மூக்கை

பதிவுலகில் நான் - தொடர் பதிவு

Image
நண்பர் வினோவிற்கு என் நன்றிகள் பல.. பதிவுலகில் நான் என்னும் தொடர் ரயில் பெட்டியில் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்காக...    1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? மனோ - A BABY FROM COIMBATORE ( சத்தியமா நான் குழந்தைதாங்க.. என் மனசில் .. என் சேஷ்டைகளில் )    2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? சாந்தாமணி(என் செல்ல அம்மா)  வச்சது மனோகரன். (அம்புட்டு அழகா இருப்பேனாம் சின்ன வயசுல.. இப்ப.... வேண்டாம் விடுங்க பொண்ணுக தொந்தரவு ஜாஸ்தி ஆயிடும்.) என் மாமா  என்னை ஸ்கூல்ல  சேர்க்கும் போது மனோகர் ஆச்சு.  அது அப்படியே நண்பர்கள் வட்டத்திலே  சுருங்கி மனோ ஆயிடிச்சு.   3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி? அது ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற நிகழ்வு. அன்றைய தினம் ஆயிரம் குறிஞ்சி மலர்கள் பூத்து, பெருமழை பெய்து, வானவில் ஒளிர்ந்தது. பயபடாதீங்க.. அப்பிடீன்னு எல்லாம் நான் கதை விட மாட்டேன்    வலையுலகம் ஒரு கடல். எடுத்த எடுப்புல நான் தொபுக்கடிர்னு குதிச்சிடலை. நான் ஒரு புத்தக புழு.... இல்லை இல்லை புத்தக எரும

மிக எதிர்பார்ப்புக்குரிய 12 திரைப்படங்கள்

Image
சில படங்கள் பூஜை போட்ட உடனேயே .. இந்த படத்தை எப்போது பார்க்க போகிறோம் என்கின்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். படத்தின் இயக்குனர் மீதோ, அதன் டெக்னிக்கல்  டீம் மீதோ அப்படி ஒரு எதிர்பார்ப்பு குவிந்திருக்கும். அப்படி முதல் நாள் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டும் 12 திரைப்படங்கள். 12. வம்சம்  இயக்குனர் பாண்டி ராஜ், வெள்ளந்தியான முகம், கிராமத்தான் போல தோற்றம். ஆனாலும்  முதல் படத்திற்கே  (பசங்க) உலக அளவில் பிரபலம் ஆன தங்க யானை விருது பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த அற்புதமான படைப்பாளி. பசங்க படத்தில் இவர் காட்டிய குழந்தைகளின் உலகம் அவ்வளவு யதார்த்தமானதும் அழகானதும் கூட.. இவரது இரண்டாவது படமான வம்சம் ட்ரைலரில் வரும்  காட்சிகள்  மற்றும்  தமிழ் மன்னர்கள்  பெயர்கள்.. படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும்  தூண்டுகிறது. இந்த படம் இன்று (13.08.10) வெளியாகிறது.  11 . மங்காத்தா பர்சனலாய் அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது வெளிப்படையான  பேச்சுக்காகவும், உதவி செய்யும் குணத்துக்காகவும். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளை கண்டாலே பற்றிக்கொண்டு வருகிறது. ஏகன்,அசல் படத்தி

வேலையற்றவன் - படித்ததில் பிடித்தது

Image
 சுறு சுறுப்பான சாலையில் புதிய புதிய கார்களில்        விரைந்து செல்லும் மனிதர்கள் மேல் பொறமை படாதே.. ஒருவனுக்கு "பைல்ஸ்" ஒருவனுக்கு 'ஹார்ட்' ஒருவனை பொண்டாட்டி ஏமாற்ற ஒருவனுக்கு பெண் கர்ப்பம் (ஓட்டல் சர்வரிடம்) ஒருவனுக்கு டாக்ஸ் பயம் ஒருவனுக்கு மரண பயம் ஒருவனுக்கு கேன்சர் ஒருவனுக்கு ஒரு கிட்னி ஒருவனுக்கு மூணு படி மூச்சிறைப்பு ஒருவனுக்கு பேஸ் மேக்கர் ஒருவனுக்கு வேலை நிரந்தர பயம். இவை அனைத்தும் இன்றி மூக்கை நோண்டிக்கொண்டு பிளாட்பாரத்தில் பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் நீ பாக்கியவான் !               கவிதை : விருத்தம் விஸ்வநாதன் அவர்கள்

பாணா - விமர்சனம்

Image
தமிழில் தற்போது நல்ல  கதை களங்களும், காட்சி படுத்துதலில் வித்தியாசத்தையும் கொண்ட படங்கள்   அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 10 வருடங்களுக்கு முன்பான ஸ்டீரியோ டைப் திரைக்கதையுடன்  வந்துள்ள படம் பாணா.  வட சென்னையில் உள்ள ஒரு  ஏழை  பையன், பணக்கார  ஹை கிளாஸ் பெண்ணை காதலிப்பதும், இடையே ஹீரோவுக்கும் ஒரு நல்ல ரௌடிக்கும் (ரௌடியில் நல்ல ரௌடி, கெட்ட ரவுடி என்ற பாகுபாடு சினிமாவில் மட்டுமே சாத்தியம்)  உள்ள உறவையும், ஒரு கட்டத்தில் அந்த நல்ல ரௌடியே  சூழ்நிலை காரணமாக ஹீரோவை கொலை செய்ய முயலுவதும் கதை. கதையே இல்லாத விஷயத்தை கூட மேக்கிங்கில் மிரட்டி வெற்றியடையும் இந்த கால கட்டத்தில், குழப்பமான அரை குறை காட்சியமைப்புகளும், திரைக்கதையும்  படத்தை பார்வையாளன் மனசில் பதிய தவறிவிட்டது.  ஒரு சினிமாவிற்கு பாத்திர படைப்பு எந்த அளவு முக்கியம் என்பதை  இயக்குனர் சுத்தமாக மறந்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தின் முழு இயல்பையும் இயக்குனர் காட்சிபடுத்தவில்லை.  ஹீரோ, பட்டம் விடுவதில் கில்லாடி என்கிறார்கள். இடைவேளை வரை ஹீரோ பட்டத்தின் பின்னால் ஓடுகிறாரே தவிர, ஒரு முறை கூட பட்டம் விட்ட பாடில்லை.  இரண்டாவது  ஹீரோவும்,

மின்னல் தருணங்கள்..

Image
  நாடி பார்த்த வைத்தியர் முகத்தில் குழப்ப ரேகைகள்..... எப்படி ஒரு சில வினாடிகளில் மட்டும் ரத்த ஓட்டம் உயர்ந்து தாழ்ந்ததே என்று.. பாவம் அவருக்கு எப்படி தெரியும்..? அந்த குறிப்பிட்ட சில நொடிகளில்... உன் புன்னகை முகத்தை நான் நினைவு கூர்ந்து பார்த்தது...! ----

எந்திரன் - இசை விமர்சனம்

Image
 1995 ம் வருடம்.  என்னுடைய விடலை பருவம்.  ரஜினி என்றால் ஏதோ சொல்ல தெரியாத ஈர்ப்பு. ஒரு பரவசம். அவரை போலவே, தலை கோதி, நடை பழகி, அவரின் பாடல்களை மனப்பாடம் செய்த  தினங்கள். அதே கால கட்டத்தில் ரஹ்மான் என்னும் புயல் புது புது மெட்டுக்கள், இதற்க்கு முன் கேட்டறியாத இசை கருவிகளின்  வினோத  ஒலிகள், என தனக்கென ஒரு இசை சாம்ராஜியத்தை நிறுவிய நேரம். இந்த இரண்டு தலைகளும் ஒன்று சேர்கிறார்கள் "முத்து" படத்திற்காக. மொத்த தமிழ் நாடும் அந்த பட பாடல்களை கேட்க மிக ஆவலாக இருந்தது. ஏனெனனில்  வழக்கமான ரஜினி பட பாடல்கள் ஒரே மாதிரி TEMPLATE  ஆக இருக்கும். ஆனால் ரஹ்மானின் இசை வேறு வகை. இவர்கள் இருவரும் சேரும் போது அதில் யாருடைய ஆதிக்கம் இருக்கும் என்பது எல்லோருக்குமான சந்தேகம்.  ஆனால், அப்போதைய ரஹ்மான் புத்திசாலித்தனமாக, தனது தனித்தன்மையையும் விட்டு கொடுக்காமல், ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் போட்ட மெட்டுக்கள்  பட்டி தொட்டி எங்கும் தில்லானா  தில்லானா என பட்டையே கிளப்பியது. "குலுவாலிலே" அக்மார்க் ரஹ்மான் ஸ்டைல் ரஜினி பாடல்.  ஆனால் நாளாக நாளாக ரஜினி என்னும் ஒரு மிக பெரிய இமேஜ் வட்டத்தி