Posts

Showing posts from February, 2010

விண்ணை தாண்டி வருவாயா... - விமர்சனம்

Image
ரொம்பவும் யதார்த்தமான சினிமா எடுக்கனுமா ? வண்டிய மதுரைக்கு விடு... காதல், பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் என நாம் பார்த்த யதார்த்த சினிமாக்கள் கிராமத்து பின்னணியில் உருவானவை.... ஆனால் இம்முறை சென்னை நகர பின்னணியில் ஒரு யதார்த்த சினிமா தர முயன்றிருக்கிறார் கெளதம்..  படத்தில் ஹீரோ, ஹீரோயின், ஹீரோயிசம் என குறிப்பிட்டு எதுவும் கிடையாது..  நம் தினசரி வாழ்வில் பார்க்கும் சராசரி மனிதர்கள் அவர்களுக்குள் ஏற்படும் இயல்பான காதல், ஊடல், பிரிவு, கோபம், மகிழ்ச்சி, ஸ்பரிசம், போன்றவற்றை சினிமாத்தனம் இன்றி தந்திருப்பதர்க்காகவே பாராட்டலாம்...இம்மாதிரி படங்களில் திடுக்கிடும் திருப்பங்களோ, சீட் நுனியில் அமரவைக்கும் சுவாரசியமான நிகழ்வுகளோ  ஏதுமின்றி வெறும் வசனங்கள், சின்ன சின்ன சம்பவங்கள் மூலமாகவே கதையை நகர்த்தி செல்ல ஒரு தனி திறமை வேண்டும்...  முதற் பாதியில் எளிதாக சிக்ஸர் அடித்த கெளதம் இரண்டாம் பாதியில் சற்றே திணறியிருக்கிறார்... கார்த்திக், ஜெஸ்ஸி - இருவருக்குமுண்டன காதல்..  என இந்த இரு கதாபத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு படம் நகர்கிறது.. கிட்டத்தட்ட எல்லா சீன்களிலும் கார்த்திக்கோ, ஜெஸ்ஸியோ இருக்கிறா

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - 200*

Image
  சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.... மெல்லிசான தேகம்..5.5 அடி உயரம்..பள்ளிக்கு போகும் சிறுவன் வழி தவறி மைதானத்துக்குள்  நுழைந்து விட்டானோ என்று என்னும் தோற்றம்..16 வயதில் மட்டையுடன்  கராச்சி கிரௌண்டில் இறங்கிய சச்சினை பார்த்து பாக் பௌலர்கள் உதிர்த்த வார்த்தை " பொடியன்". அப்போது யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.. இந்த பொடியன்தான் நம்மை தூங்க விடாமல் கனவில் கூட துரத்தி துரத்தி அடிக்க போகிறான் என..... 16 வயதில் இந்தியாவுக்காக ஓட ஆரம்பித்த ரன் மெஷின்... 37  வயதில்.. இன்னமும் ஸ்ருதி குறையாமல் அடித்து நொறுக்கி கொண்டு இருக்கிறது... மொத்தமாய் 31,045 ரன்கள்... 93 சதம், 147 அரை சதம்.. 240 சிக்சர்கள்..STILL GOING AND GOING...  எல்லோரும் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.. ரன் குவிக்கிறார்கள்... ஆனால் சச்சின் ஆடும் பொழுது உள்ள ஒரு ஒழுங்கு.. நளினம்,  PERFECTION,  ஸ்டைல், மிக  நேர்த்தியாக.. ஒரு பூ மலர்வது போல... அவ்வளவு அழகாக இருக்கும்.. கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக  நேசிக்கும் ஒருவரால்  மட்டுமே இப்படி ஆட முடியும்...  இந்தியாவில் மட்டுமல்ல... எல்லா நாடுகளிலும் உள்ள கி

TOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)

Image
 TOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா) கடல் என்றுமே ஆச்சரியமான விஷயம். ஒரு அழகான பெண் போல... பார்க்க பார்க்க சலிக்கவே சலிக்காத ஒன்று... நண்பர்களுடன் குதித்து கும்மாளமிடவும், காதலியுடன் கை கோர்த்து நடக்கவும், தனிமையில் இனிமை காணவும் எல்லோருடைய ALL TIME FAVOURITE கடற்கரை மட்டுமே... திருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவளம். கடற்கரை சுற்றிலும் நிறைய தென்னை மரங்கள்... மிதமான  வெயில், பச்சை பசேல் புல் வெளிகள் என இது ஒரு குட்டி கோவா. ஒரே இடத்தில் 3 வகையான கடற்கரைகளை கொண்டிருக்கிறது. 1.லைட் ஹவுஸ் பீச் 2.ஹவா பீச் 3.சமுத்ரா பீச் லைட் ஹவுஸ் பீச்  முழுவதும் வெளிநாட்டவர்கள் நிரம்பி வழிகிறார்கள். இதன் சிறப்பம்சம் இங்கு ஆழம் மிக குறைவு.. ஆனால் அலைகளோ.. இரு ஆள் உயரத்திற்கு எழும்பும். அலை  விளையாட்டுக்கள் விளையாட ஏற்ற இடம். இங்குள்ள லைட் ஹவுஸ் வழியாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை விரிந்திருக்கும் கடல் ரசிப்பது தனி அனுபவம். கடற்கரையில் பாதுகாவலர்கள் இருப்பதால் தைரியமாய் இங்கு அலையில் விளையாடலாம். ஹவா பீச்  தென்னை மரங்கள் சூழ

உலகின் விலை மதிப்பற்ற புன்னகை - DONT MISS IT

WATCH THIS... YOUR HEART WILL BE  MELT LITTLE BY LITTLE...

கல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடிக்கும் படு பயங்கர செய்தி..

Image
மேற்படி எல்லோரும் 3 IDIOTS பார்த்திருப்பீர்கள்.. இந்த வருடத்தின் ஒரு அட்டகாசமான FEEL GOOD MOVIE. பல இடங்களில்  நம்மையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்த வைக்கும் படம். இயல்பான நடிப்பு, மெல்லிசான நகைசுவை என படம் அள்ளிக்கொண்டு போகும். BUT  இது 3 IDIOTS பற்றிய விமர்சனம் அல்ல... இணையத்தில் ஒரு செய்தி ..  3 IDIOTS படத்தை நம்ம விஜய் ரீ-மேக் செய்கிறாராம்.. .  அதை படித்ததில் இருந்தே வலது பக்க தலை ஒரு மாதிரி  வலித்துக் கொண்டே இருக்கிறது.... ஏதோ நடக்க கூடாதது நடக்க போவது போல ஒரு FEELING. இதற்க்கு பதிலாக 2012 ல்  உலகம் அழிந்து விடலாம். புண்ணியமாய் போகும். பின் குறிப்பு : சாமி சத்தியமாய் நான் அஜித் ரசிகன் அல்ல.. ஒரு நல்ல திரை படம் பாழாய் போகிறதே என்கிற வருத்தம் மட்டுமே...

உ.பா. பிரியர்களின் கவனத்திற்கு..

Image
முக்கிய செய்தி... இந்த வருடத்தில் டாஸ்மாக் விடுமுறை  தினங்கள்... JANUARY 26, 30 MARCH 22 MAY 1 JULY 14 AUGUST 15 SEPTEMBER 3,14 OCTOBER 2,8 NOVEMBER 9 SO, பிளான் பண்ணி குடிங்கோ பாஸ்....... குடிமகன்களின் நலனுக்காக... மனோ 

தேவதை பெண்ணும்... தேவாங்கு பையனும்...

Image
பேசாமல் நாய் குட்டியாய் பிறப்பெடுத்திருக்கலாம்.. உன் முகத்தோடு முகம் சேர்த்து.. மூக்குரசும் பாக்கியமாவது கிடைத்திருக்கும்.. ஒருவேளை... சிட்டு குருவியாய் அவதரிதிருந்தாலாவது உன் பஞ்சுக் கைகளில் அடைபட்டு சுகப்பட்டு கிடந்திருக்கலாம்... அட.. ஆட்டுக்குட்டியின்  ஆயுளாவது பெற்றிருக்க  கூடாதா..... தேவதை  உன் தோள்களில்  உற்சாக சவாரியாவது.. செய்திருக்கலாம்... பூனையாகவாவது  ஜீவிதம்  வாய்த்திருக்க கூடதோ... உன் மடியினில்  தவழ்ந்து..  மார்பினில்  புதைந்து.. என்  உயிரை  முழுசாய் கரைத்திருக்கலாம்... கன்றாய் பிறந்திருந்தலாவது  புண்ணியம்... உன் தழுவல்களிலும்  தொடர் முத்தங்களிலும்  என் பாவங்கள்  நீங்கப்  பெற்றிருக்கலாம்.. உலகின்  எல்லா  ஜீவ ராசிகளையும் நேசிக்கிறாய்...  என்னை  தவிர... எவன்  சொன்னது...  மனித பிறவி  மகத்துவ பிறவி  என்று.....

TOUR SPOT - அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....

Image
 கண்டிப்பாய் காண வேண்டிய சில அழகான சுற்றுலா தலங்கள்... அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....   உலகின் 10 சொர்கங்களில்ஒன்றான கேரளாவில் அமைந்துள்ள ஒரு அற்புதமான இடம். இயற்கை எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களை தன்னுள் ஒளித்து வைத்து கொண்டிருக்கும்.  அதன் ரகசியங்களை கண்டறிந்து  அதனோடு நம்மை பிணைக்கும் ஒரு அழகான மீடியேட்டர் இந்த அருவி. வார்த்தைகளில் விவரிக்க முடியாத சில உணர்வுகளை, சில உற்சாகங்களை எளிதாக இந்த இடம் உங்களுக்கு கொடுத்துவிடும். பச்சை பசேல் காடுகளுக்கு மத்தியில்,யூக்கலிப்டஸ் சுவாசத்தில்,  மெல்லிசாய் தூறும் மழையில் நனைந்த  படி, பிரவாகமாய் வந்து விழும் அருவியேய் பொறுமையாக அமர்ந்து  ரசிப்பது வரம் . இரண்டு விதமான கோணங்களில் நாம் அருவியே காண  முடியும்.  மேலிருந்து கீழாய்  விழும் நீரை அருகிருந்து பார்ப்பது ஒரு பயம் கலந்த த்ரில் அனுபவம் . பின்,  தனியாய் பிரிந்திறங்கும் ஒரு ஒற்றையடி பதை நம்மை அருவி விழும் இடத்திற்கு அழைத்துசெல்லும்.  82 அடி உயரத்திலிருந்து  பிரம்மாண்டமாக வந்து விழும் அருவியின் சாரல் உங்களை முழுவதும் நனைத்து குதுகலப்படுத்தும். உங்கள் வயது மறந்து குழந்தையாக.. ஒ

வரம்

Image
உனக்காய் நானும்.. எனக்காய் நீயும்.... பிரார்த்தித்துக்- கொள்வதுதான் கடவுளுக்கும் பிடித்தமானதாய் இருக்கிறது.....

காதல் எனப்படுவது யாதெனில்..

Image
பாதியாய் பகிர்ந்து பருகும் காப்பிக் கோப்பையில் அபரிமிதமாய் வழிந்தோடுகிறது அன்பு. பேசிய வார்த்தைகளில் வெளிப்பட்டதை விட.... பேசாத மௌனங்களில் புலப்பட்டது  அதிகம்... நேசத்திற்கான  அர்த்தம்.   சிறு தலை கோதல்களிலும் கன்னக் கிள்ளல்களிலுமே  வயிறு நிரம்பி விடுகிறது  எனக்கு. .  ஒவ்வொரு விடியலிலும்  உன்னால் தட்டிஎழுப்பப்படுகிறது  அந்நாளுக்குரிய  சந்தோஷங்கள்.... சாலை கடக்கையில்  இயல்பாய் கோர்க்கும்  விரல்களை போல.... அழகாய் சேர்ந்திருக்கிறது  நம் மனசின்  குழந்தைகள்..  மழை போன்று  எல்லையற்று பொழியும்  உன் அன்பிற்குள்.... நனைந்து கொண்டே  இருப்பதை தவிர  வேறெதுவும்  செய்வதிற்கில்லை  என்னால்........

சுஜாதா - A WRITER, A FRIEND, A MAGIC MAN

Image
இவரின் எழுத்துக்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் என்பது நினைவில்லை. இருப்பினும் அந்த மனிதரின் வீட்டு குழாயில் 24 மணி நேரம் இடை விடாத  தண்ணீர் சப்ளையும், என்றுமே  மின்சாரம் தடை படாத வாழ்கையும் ,நொடிக்கொரு முறை  SMS அனுப்ப விரும்பாத குழந்தைகளும் கிட்டட்டும் என வேண்டிக்கொள்கிறேன். எல்லோருடய சிறுவயதிலும்  புத்தகம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது சிறுவர் மலர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், கோகுலம் , அம்புலிமாமா, வாண்டு  மாமா வகையறாக்கள்  என்பதை மறுக்க முடியாது. அதன் உலகமே வேறு. அதற்கு  பிறகு  ஒரு ரெண்டுங்கெட்டான் வயதில் தோன்றும் எண்ணங்களும் வாசிப்பு பற்றிய ரசனைகளும் தலைக்கு தலை மாறுபடும். தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதில் ஒரு சின்ன தடுமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அந்த மாதிரி காலகட்டங்களில் சுஜாதா  அவர்களின் எழுத்துக்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு ஆரம்பமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல. சுஜாதா சார் அவர்களை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல எனினும், அவரை பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானதாக எனக்கு படுகிறது.

விண்ணை தாண்டி வருவாயா... - ஒரு இசை அனுபவம்

Image
ஒரு புதிய இசை அனுபவத்திற்கு நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார்  A.R.R. 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்கின்ற பாரதியாரின்  வரிகள் அழகாய் நினைவுக்கு வந்து  போகின்றன... "ஓமனப் பெண்ணே..."  என பென்னி தயால் ஆரம்பிக்கும் போதே மழையில் நனைந்த சந்தோஷம். "அன்பில் அவன்" பாடலில் ஆரம்பிக்கும் உற்சாகம் "கண்ணுக்குள் கண்ணை " பாடலில் டாப் கியர் எடுத்து வேகம் பிடிக்கிறது. "மன்னிப்பாயா" பாடலில் திருக்குறளை இணைத்திருக்கும் அழகு அற்புதம். ''செல்லமே" (AAOROMALE ) எனும்  பாடல் நீங்கள் இதற்க்கு முன் எங்கும் கேட்டிருக்க முடியாத அசத்தல் டியுன் . அப்படியே மனசை உருக்குகிறது. இந்த ஆல்பத்தின்  டாப் RATING  "ஹோசனா" இந்த வருடத்தின் முக்கிய கலர் புல்  காலர்டியுன் . குத்து பாடல், துதி பாடல்  கலாச்சாரத்தில் சிக்கி நொந்து நைந்து போன நமக்கு ஒரு இதமான  தலை வருடலை இந்த பாடல்கள் தருகிறது. தமிழுக்கு மட்டுமல்ல உலகம் முழுதிற்கும் பொதுவான ஒரு இசை ஆல்பம் இது. MY RATING : 7.2/10

வயலினும்... வயலின் சார்ந்த விஷயங்களும்....

Image
அருகாமை அயலான் நோட்டீஸ் அனுப்பியும் கேட்காத மனசு... வீட்டு நாய் இறந்ததும் விட்டது வயலினை..

வணக்கம் நண்பர்களே...

Image
பதிவுலகில் வெகு காலமாய் உங்கள் எழுத்துக்களை நேசித்து வரும் இந்த குழந்தை தானும்.. தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உங்களுடன் இணைந்து கொள்கிறது.